E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
லட்சுமிபெருமாள் சகோதரி முகப்புபுத்தகதில் பதிந்த ஒரு சிறுகதை:-
ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.
அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.
அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.
இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.

"உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்றார்
#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.
உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!
ரொம்ப பயமுறுத்திடீங்க ......Bro
 

ThangaMalar

Well-Known Member
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே

வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே
சாவி உந்தன் விழிகளிலே


அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடு பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்


தொடரும் போட்ட கதையை போல
இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே
எனது காலை விடிகிறதே


வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்து மூர்ச்சை ஆகும்படி
 

murugesanlaxmi

Well-Known Member
இவர் தான் தமிழ் நாட்டின் எப்போதும் முதல்அமைச்சர்
முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர்நேருவும்.. கூட்டமொன்றில்பங்கேற்க.. மதுரை அருகே.. காரில்சென்று கொண்டிருந்தார்கள்..!!உரையாடலின் நடுவே.. நினைவுவந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ்உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம்தானே..
? என்று கேட்கிறார்..!!"ஆமாங்க இன்னும் கொஞ்சம்
தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரைபார்த்து விட்டு.. நலம் விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் அல்லவா..?என்று நேரு அவர்கள் கேட்க.."இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி
விட்டதே..
?" என்று காமராஜர்மறுக்கிறார்..!!அதற்கு நேரு அவர்கள்...
இவ்வளவு தூரம் வந்து விட்டு..உங்கள் தாயாரை பார்க்காமல்சென்றால்.. நன்றாக இருக்காது..நான் பார்த்தே ஆக வேண்டும்..என்னை அவர்களிடம் கூட்டிச்செல்லுங்கள்..!!" என்று அன்பு
கட்டளையிடுகிறார்ஆமோதித்த காமராஜர்..வண்டி சற்று தூரம் சென்றதும்..
ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியைஇப்படி ஓரங்கட்டு..!!" என்று
வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!அது வீடுகளே இல்லாத பகுதி..
இரு புறங்களிலும் விவசாயநிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களைபறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்குஅழைத்து.. செல்ல சொன்னால்
இப்படி அத்துவான வெயிலில்..வண்டியை நிறுத்தியிருக்கிறாரே
என்ற வினாவுடன்வண்டியை விட்டு இறங்குகிறார்
நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும்பெண்கள்.. கூட்டத்திலிருந்து
வயதான பெண்மணி.. ஒருவரை
அழைக்கிறார்..."ஆத்தா நான் காமராசு வந்து
இருக்கிறேன்.."!! என்றுகூவுகிறார்..!!வயலில் உழைத்து வியர்வை
முகத்துடன்.. "காமராசு
வந்திட்டியாப்பா..நல்லாயிருக்கியா..?" என்று தன்
மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம்
நெகிழ.. அருகில் வருகிறார்..
காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி..அறிமுக படுத்துகிறார்
காமராஜர்..!!
நேருவால்தன் முன்னால் நடப்பதை பார்த்து..
நம்ப முடியாமல் சிலையாகநிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்..!
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்


 

fathima.ar

Well-Known Member
ஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்

இத தான் கமல்..
கடவுள் பாதி..
மிருகம் பாதின்னு சொல்லிருக்காரு போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top