fathima.ar
Well-Known Member
No sorry gold...
Sorry fathima
If u all enjoy reading it..
It's pleasure for me...
No sorry gold...
Sorry fathima
ரொம்ப பயமுறுத்திடீங்க ......Broலட்சுமிபெருமாள் சகோதரி முகப்புபுத்தகதில் பதிந்த ஒரு சிறுகதை:-
ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.
அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.
அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.
இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
"உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்றார்
#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.
உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!
இல்லை சகோதரி, சில உண்மைகள் மிக பயமாகதான் இருக்கும்.ரொம்ப பயமுறுத்திடீங்க ......Bro
ஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்
உண்மை சகோதரிஇத தான் கமல்..
கடவுள் பாதி..
மிருகம் பாதின்னு சொல்லிருக்காரு போல..