MythiliManivannan
Well-Known Member
அருமையான விளக்கம் சகோஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்