E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
யாரும் மறுக்க வில்லை .... Ansa
பிறகு எதற்கு இந்த வாதங்கள் ....... Just leave it.... Please....

உமா, மறுப்பு என்ற வார்த்தைக்கு
பதிலாக புரிந்துகொள்ள வில்லைஎன்பதே சரியான வார்த்தையாகும்
வாதங்கள் இல்லை விளக்கங்கள்
 

malar02

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women who limited themselves with family and children...
I want them to feel the charishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:

விளக்கம் நன்றாக இருக்கிறது friend
ஆரோக்கியமான விவாதம் கலந்துரையாடல் கதைக்கு வலுசேர்க்கும் நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் தவேறேதுமில்லை அப்பொழுதுதான் பல விதமான பார்வைகளை நாம் அறிய முடியும்
ஒரே சார்பாக போனால் அதில் விளக்கம் கிடைக்காது....... படிக்கும் எல்லோருக்கும் புரிய வேண்டும் அல்லவா.......... ஒருத்தர் இரண்டு பேருக்கு மட்டும் புரிந்தால் போதுமா
தனிப்பட்ட முறையில் சும்மா போற போக்கில் படித்துவிட்டு போவது போல் இருந்திவிடலாமா நல்ல விஷயங்கள்
எல்லோரும் கலந்து கொள்ளும் போது மிக நன்றாக இருக்கும் படிப்பதற்கு
எப்படி கவிதைகள் புறப்பட்ட்ன வெளியே .....அதோ போல் நல்ல உரைகளும் அழகானஎழுத்துக்களும் புறப்படும்( புலப்படும் )
எப்பொழுதுமே பொழுது போக்காக இருந்தால் சிகிப் செய்துவிட(தவிர்த்துவிட ) வாய்ப்பு இருக்கிறது
இப்பொழுதும் நான் கொடுத்துள்ளதில் தவறேதும் இருந்தால் சொல்லுங்கள் மாற்று கருத்து இருந்தால் தான் தன் கருத்தை தானே உணர முடியும்
 

malar02

Well-Known Member
பாரதி கண்ட புதுமை பெண் பற்றி விளக்கம் வேண்டும் பானும்மா.

பாரதி தன் புதுமை பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளது என்ன? என்று பட்டியலிடுங்களேன். நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

எனக்கு இன்னும் புரியவில்லை மல்லியின் நாயகியை பற்றி பேசும் போது.

இதுவல்ல பாரதியின் கனவு என்று பாத்திமா எதை குறிப்பிட்டிருக்கிறார்கள்?

பாரதியின் கனவுக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் இங்கு யாரேனும் மோசமான கருத்தினை பதிவிட்டீருக்கிறார்களா?

அப்படி இருந்தால் அந்த கருத்துப் பதிவு எது என்று குறிப்பிடுங்கள் திருத்தி கொள்கிறோம்.

அப்படி இல்லை மனதில் தோன்றியதை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக போட்டேன் என்பவர்கள் அதை இங்கே பதிவிட வேண்டாமே.

தங்கள் திறமைகளை வெளிகொணர நினைக்கும் தோழமைகள் மல்லியிடம் கேட்டால் புதிய Forum உருவாக்கி தர அவர்கள் தயங்குவதே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே பானும்மா.

பாத்திமா கூட இந்த கதைக்கு சம்பந்தமில்லாத ஆனால் சமுதாயத்திற்கு தேவையானதாக கருதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை தனி Forumல் பதிவிடலாமே.

இங்கே மல்லியின் கதாபாத்திரங்களை பற்றியும் அக்காதாபாத்திரங்களின் குணாதிசயங்களை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதும். நான் உங்களை பற்றி தெரிந்து கொள்வதும். நாம் நம் குடும்பம், வேலை, குழந்தைகள் மற்றும் நமது சுகதுக்கங்களை பற்றி பகிர்ந்து கொள்வதும் நன்றாக இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். நமக்கிடையே கண்ணுக்கு தெரியாத பந்தத்தை அது உருவாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.
photo.jpg
 

malar02

Well-Known Member
நல்ல மணவாழ்வு மட்டுமே நல்ல குடும்பத்தை உருவாக்கும்.

நல்ல குடும்பம் நல்ல குழந்தைகளை உருவாக்கும்.

நல்ல குழந்தைகள் நல்ல இளைஞர்களாக உருவெடுப்பார்கள்

நல்ல இளைஞர்கள் தான் புதிய சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.

எனவே வெற்றிகரமான மணவாழ்க்கை ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உருவாக்கும் என்று மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

உங்கள் கவிதைக்கு நீங்க தானே தெளிவுரை கொடுத்தீங்க. முத்தமிழ் அறிஞர் யாரும் தெளிவுரை எழுதவில்லைதானே? தெளிபடுத்த வேண்டியது கடமைம்மா.

கவிதை எழுதியது கடவுளேயாயினும் குறை இருப்பின் நிற்க வைத்து கேள்வி கேட்ட நக்கீரர் வாழ்ந்த பூமி இது.
4561b0e3ab3fcffac41edf08531fc2c9_-what-a-tickle-looked-like-tickle-clipart_135-80-thumbnail.png
 

malar02

Well-Known Member
I am sorry Ansa ....
இதை என்னால் ஏற்று கொள்ள முடியாது......
நிறைய உடைந்து போன or பெற்றோர் சரியில்லாத குடுபங்களில் இருந்தும் நல்ல இளையர்கள் உருவாகிறார்கள்....முக்கியமாக தான் தன் பெற்றோர் செய்த தவறை செய்யாமல் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற உறுதி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு...... என்னோட hubby அப்படி இருக்கிறவர் தான்.....
photo-thumb-12574.png

ஆமோதிக்கிறேன் சில நேரங்களில் சிலவற்றிர்க்கு எக்ஸப்ஷன் இருக்கு உண்டு
 

malar02

Well-Known Member
அதை தானே உமா நானும் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். பிரிந்து வாழ்பவர்களும் நல்ல மணவாழ்க்கையில் நிலைத்து தான் இருக்காங்க என்று தான் வலியுருத்துகிறேன். டைவர்ஸ் பெறுவதால் அவர்கள் பாரதியின் கனவுக்கு இழுக்கு செய்யவில்லை என்பதை தான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கைப்பெண் ஆகியவர்கள் எப்படி மணவாழ்க்கையை விட்டு விலகவில்லையோ அதேபோல் தான் விவகரத்தான பெண்களும் என்பது தான் என் கருத்தும்.


ஊருக்காக சேர்ந்து வாழ்ந்து ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டு பெற்ற பிள்ளைகளை சரியாக வளர்காமல் விடும் பெற்றோர்கள் வெற்றிகரமான மணவாழ்வு வாழ்ந்ததாக மார்தட்டி கொள்ள முடியுமா?

சுந்தரி தன் திருமணவாழ்விலிருந்து துரை கண்ணனுக்கு விலக்கு அளித்திருக்கிறாள் அவ்வளவே. மணவாழ்வில் இருந்து அவள் விலகிவிடவில்லை தானும் தன் மகனுமாக குடும்ப அமைப்பில் தான் இருக்கிறாள் வெற்றிகரமாக.
Fotolia_49164923_XS.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top