Rudraprarthana
Well-Known Member
அகனலர் - 49.1
ஐந்து வருடத்திற்கு முன் :
தமிழ் மாதப்படி எட்டு முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கிய இரண்டாம் நாளே அலருக்கு வளைகாப்பு செய்யப்பட்டு அவளை ஆரணிக்கு அழைத்து செல்ல வேண்டி நாதன், நந்தன், நீலா முதலானோர் ஹாலில் காத்திருக்க.., தங்கள் அறைக்கு சென்ற அலர் விசேஷத்திற்காக கட்டியிருந்த பட்டுப்புடவையை களைந்து பயணத்திற்கு ஏதுவாக இலகுவான உடைக்கு மாறி நகைகளை கழற்றி பத்திரபடுத்தியவள் தலை அலங்காரத்தை பிரித்து விட்டு கன்னத்தில் வைக்கபட்டிருந்த சந்தனத்தை துடைக்க முற்ப்பட போது அறைக்குள் நுழைந்த எழில் அவள் கரத்தை பற்றி நிறுத்தி பின்னிருந்து அணைத்து நிறை மாத வயிற்றை தழுவியவாறே அவள் தோளில் முகம் பதித்து எதிரே இருந்த கண்ணாடியில் அவளை பார்த்து ரசித்தவன்,
"துடைக்காதடி குள்ளச்சி உன்னை இப்படி பார்க்க ரொம்ப அழகா இருக்கு, என்று அவள் கரத்தில் அடுக்கப்பட்ட வளையல்களை வருடிக்கொண்டே இப்படியே இரு..!!" என்றிட..,
அவன் மீதே பார்வை பதித்திருந்த அலர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருப்பதை கண்டவன் "என்னடி ஆச்சு அமைதியா இருக்க" என்றவாறே கையோடு கொண்டு வந்திருந்த பழச்சாறை அவளுக்கு புகட்ட..,
இதை கண்ட அலரின் கண்கள் கலங்கிட அவன் கொடுத்ததை குடிக்காமல் எழிலிடம், "கண்டிப்பா இப்பவே போகனுமா மாமா..!! வேணும்ன்னா நான் உங்ககூடவே அடுத்த வாரம் ஊருக்கு போகட்டா..." என்று எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்க்க,
எழிலோ பதில் ஏதும் கூறாமல் அவள் முன் பழச்சாறை நீட்டியபடி அழுத்தமாக அவளையே பார்த்து கொண்டிருக்க அதை கண்டவள்,
'சாரி மாமா' என்று உடனே அவசரமாக அதை பருகிட,
'மெதுவாடி' என்றவாறே தானே அவளுக்கு புகட்டியவன் குடித்து முடித்ததும் அவள் இதழ்களை துடைத்து விட்டு, "இப்போ சொல்லு" என்றிட..,
"நீங்க எப்போ வருவீங்க கன்பார்மா சொல்லுங்க, இல்லாட்டி நாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாமா..?? இல்ல இப்பவே நீங்களும் என் கூட வரணும்" என்றிட.
அவனோ சில நொடிகளுக்கு பின்,"இதை தானேடி நான் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் அங்க விட சென்னையில பெசிலிட்டி அதிகம் இங்கயே பார்த்துக்கலாம்ன்னு ஆனா உங்கப்பா எங்க கேட்கிறார்.., நான் சொல்றதை கேட்க கூடாதுங்கிரதுக்காகவே ஆரணில தான் பிரசவம்ன்னு பிடிவாதமா இருக்கார். நல்ல வேலை நீலாம்மா ரெண்டு மாசத்துக்கு முந்தி நாள் நல்லா இல்லைன்னு சொன்னாங்க இல்லாட்டி ஏழாம் மாசமே உன்னை கூட்டிட்டு கிளம்பி இருப்பார்..., நீ ஓகே சொல்லு போதும் அவர் என்ன சொன்னாலும் சரி நாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாம்" என்று ஆதங்கத்துடன் கேட்க..,
'இல்லை மாமா..' என்று அதை மறுத்து அலர் ஏதோ கூற வரவும், வயிற்றில் பதிந்திருந்த அவன் கரங்கள் மகனை உணர 'ஷ்ஷ்ஷ்' என்று அவள் இதழ் மீது கரம் பதித்து அவள் பேச்சை தடை படுத்தியவன் .., சில நொடிகள் கழித்து மெல்ல அவள் வயிற்றில் இருந்து கரத்தை அகற்றி அவள் முன்பாக வந்து மண்டி இட்டு, மகனின் பாதம் எழுந்த இடத்தில் முத்தம் வைக்க, தந்தையை உணர்ந்த குழந்தையும் மீண்டும் பலமாக உதைத்து தன் இருப்பை உணர்த்த அதை கண்டவனின் மகிழ்ச்சி இரட்டிப்பாக அவள் வயிற்றில் இதழ் பதித்து உள்ளிருக்கும் மகனுக்கு எண்ணிலடங்கா முத்தத்தை கொடுத்தவாறே, "கண்ணா வந்துடீங்களா... இப்போ அம்மா கூட கிளம்புங்க அப்பா சீக்கிரமாவே வந்துடுறன்..., அதுவரை பத்திரமா இருங்க... அம்மா சரியா உங்களுக்கு சாப்பாடு கொடுக்காட்டி என்கிட்ட சொல்லுங்க, அப்புறம்... " என்று பேசிக்கொண்டிருந்தவனின் தலையை அலர் நிமிர்த்த..,
"என்னடி வேணும் உனக்கு..!! என் பையன் கிட்ட பேச கூட விடமாட்டேன்கிற" என்று சலித்து கொண்டவன் அருகே வைத்திருந்த ப்ரூட் சாலடை அவளிடம் அளித்து என் பையனுக்கு பசிக்குதாம் இதை சாப்பிடு அது வரைக்கும் அவன் கிட்ட பேசிட்டு வரேன் என்று மீண்டும் மகனிடம் கதையளக்க ஆரம்பிக்க..,
'இப்போ தானே ஜூஸ் குடிச்சேன்' என்று முகம் சுருக்கிய அலர்விழி அவன் அளித்த கிண்ணத்தை மேஜையில் வைத்தவள், மீண்டும் அவன் முகம் நிமிர்த்தி, "மாமாl அப்பா, அம்மா எல்லாரும் வைட் பண்ணிட்டு இருக்காங்க.., எப்ப வரீங்க சொல்லுங்க இல்லாட்டி நான் கிளம்புறேன் என்று சட்டென முகிழ்த்த கோபத்துடன் எழ முற்ப்பட..,
அவள் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு அவளை எழ விடாமல் செய்தவன் 'ஏய் உட்காருடி' என்று எச்சரித்து சுடருக்கு அழைப்பு விடுத்து "அக்கா ஒரு பத்து நிமிஷம் வைட் பண்ணுங்க நாங்க வந்துடுறோம்" என்று கூற.., அலர்விழியால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.., அவளின் முறைப்பை சட்டை செய்யாதவன் மீண்டும் மகனிடம் பேசியவாறே முத்தம் பதிக்க,
எனக்கு கூட இவ்வளவு கொடுக்கலை என்று முனுமுனுத்தவள் அவனிடம், "நீங்க மட்டும் அவனுக்கு முத்தம் கொடுக்குறீங்க ஆனா எனக்குள்ள இருந்தாலும் என் பையனுக்கு என்னால கொடுக்க முடியலை" என்று முகத்தை சுருக்க..,
மகனிடம் இருந்து பார்வையை அகற்றி அவளை பார்த்தவன் "ஏன்டி இப்போ நான் அவனுக்கு கொடுக்குறது உன் பிரச்சனையா..?? இல்லை உனக்கு அந்த அளவு கொடுக்கலைங்கிறது பிரச்சனையா..?? என்று அவளை சரியாக கண்டு கொண்டு கேட்க..,
"ரெண்டுமே தான்" என்று அலர் இதழ் சுழிக்க..,
அதை கண்டவனின் இதழ்களில் புன்னகை பூக்க அவள் மதிமுகத்தை கரங்களில் ஏந்தி "இதான் உன் பிரச்சனையா..??" என்றவாறே அவள் முகம் முழுக்க முத்திரை பதித்தவன், "இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்க நீயும் அவனுக்கு கொடுப்ப" என்றிட..,
அவனையே யோசனையாக பார்த்தவள், "ஏன் மாமா இந்த குழந்தை நீ எதிர்பார்த்தபடி பொண்ணு இல்லைங்கிறது உனக்கு கஷ்டமா இல்லையா..??" என்று கேட்க..,
"கஷ்டமா..?? எதுக்கு" என்று புரியாமல் அவளை பார்த்தவன் பின் அவள் கேள்வி புரிபடவும்,
"அமுலு குழந்தையில என்னடி பேதம்..!! நம்மோட முதல் குழந்தை அது பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் நமக்கு எப்பவும் ஸ்பெஷல் ஏன் தெரியுமா..??" என்று வினவ..,
"தெரியலையே மாமா" என்று அவள் இதழ் பிதுக்க..,
"கணவன் மனைவியா இருக்க நம்மளை அப்பா அம்மாவா உயர்த்த போற குழந்தை யாரா இருந்தாலும் அவங்க எப்பவும் ஸ்பெஷல் தானே..!! என் பையன்டி அவன்..!! என் பொண்ணுங்களுக்கு முன்னாடி அவன் வரப்போறதுக்கு நான் எதுக்கு கஷ்டபடனும்" என்று அவன் கூறவுமே..,
பொண்ணுங்களா..??? என்று குழப்பத்துடன் அலர் அவனை பார்க்க,
எழில் அவளிடம், "ஆனா ஒன்னு இவன் நல்லபடியா நம்ம கைக்கு வந்த அப்புறம் எனக்கு ஒன்னு இல்லை ரெண்டு பொண்ணு பெத்து கொடுத்துடு போதும்" என்றிட..,
"ரெண்டா..??" என்று அலர் வாயில் கரம் பதிக்க,
"ஏன்டி நான் எப்போ உன்கிட்ட ஒரே குழந்தை போதும்ன்னு சொன்னேன்..??" என்று புருவம் உயர்த்தி அவள் நெற்றியில் முட்டியவாறே "அடுத்து எனக்கு கண்டிப்பா பொண்ணு தான் வேணும் அதுவும் உன்னை மாதிரியே" என்றவன்..,
"ஏன் உங்கப்பாக்கு மட்டும் தான் எல்லா நேரமும் அவரை கொண்டாடுற பொண்ணு இருக்கனுமா எங்களுக்கு எல்லாம் அந்த ஆசை இருக்க கூடாதா..??" என்று வினவ..,
"மா..மா" என்று வியப்புடன் அலர் அவனை பார்க்க..,
"ஆமா என்னோட ரொம்ப நாள் ஆசை இது..!! அதுவும் அன்னைக்கு காலேஜ் ரோட்ல என்னை அடிச்சிட்டு எங்கப்பா என்னை இப்படி தான் வளர்த்தாருன்னு சொன்ன பாத்தியா..!!! அப்போ அந்த ஆசை இன்னும் அதிகமாச்சு" என்று அவள் விழிகளோடு தன் விழிகளை கோர்த்தவாறே, "எனக்கு எல்லா விதத்துலையும் உன்னை மாதிரியே முக்கியமா எப்பவும் அப்பாவை கொண்டாடுற ஒரு பொண்ணு இல்லல்ல ரெண்டு பொண்ணுங்க வேணும்..!!" என்றிட,
ஒரு நொடி அவன் விழியில் வழிந்த ஏக்கத்தில் ஸ்தம்பித்து நின்றவள் பின் அவனிடம் "எனக்கு டீல் டபுள் ஓகே மாமா..!!” என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் நீ என் கூட இருந்தா எத்தனை வேணும்னாலும் பெத்து கொடுக்குறேன் ஆனா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுங்க மாமா.. அப்பு ரொம்ப தேடுவான்" என்றவளின் வதனமே அவனை விட நான் உன்னை அதிகமாக தேடுவேன் என்ற செய்தி உரைத்த அதே நேரம் அவர்கள் அறை கதவு பலமாக தட்டப்பட,
'நீ இரு' என்ற எழில் சென்று கதவை திறக்க சுடர்க்கொடி தான் நின்றிருந்தார்.
"டேய் டைம் ஆச்சுடா, நல்ல நேரத்துல கிளம்பனும் இன்னும் இருபது நிமிஷம் தான் அப்புறம் ராகுகாலம் ஆரம்பிச்சிடும் நாங்க வேளையோட ஊர் போய் சேர வேண்டாமா..?? மாமா வேற லேட் ஆகுதுன்னு ஏற்கனவே மாமியை முறைக்க ஆரம்பிச்சிட்டாரு" எனவும்..,
அவனை முந்தி கொண்டு அலர் ,"நான் அப்பவே சொன்னேன் அண்ணி அப்பா வைட் பண்ணிட்டு இருப்பாங்க சீக்கிரம் கிளம்பனும்ன்னு, ஆனா மாமா தான் ரெண்டு பொண்ணு வேணும்ன்னு பேசிட்டே லேட் பண்ணிட்டார்" என்றிட,
அவளை முறைத்தவாறே "ஏய் நீ தானேடி.." என்று எழில் ஆரம்பிக்கவுமே..,
"ஷ்ஷ் போதும் உங்க சண்டையை அப்புறம் வச்சிகோங்க" என்ற சுடர் அலரிடம் "இப்போ உனக்கு கிளம்புற எண்ணம் இருக்கா..?? இல்லையா..??" என்று கேட்க..,
"நான் எப்பவோ ரெடி அண்ணி ஆனா மாமா தான் வரமாட்டேன்னு சொல்றாரு"
"அலர் இன்னும் எத்தனை முறை தான் இதையே சொல்லிட்டு இருப்ப என்று அவளை கடிந்தவர், அவன் தான் மூணு மணிக்கு மீட்டிங் இருக்கு இல்லாட்டி கூட வந்திருப்பேன்னு சொன்னானே, முக்கியமான வேலை இருக்கிறதால தான் ஒரு வாரம் கழிச்சி வரேன் சொல்றானே.., ஏன் எங்களை பார்த்தா மனுஷங்க மாதிரி தெரியலையா உனக்கு..??? இதென்ன சின்ன குழந்தை மாதிரி அடம் என்று கடிந்தவர் டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்கே புரிஞ்சிக்க மாட்டியா..!! " என்று சலித்து கொள்ள..,
அலரோ கலங்க முற்ப்பட்ட விழிகளை இமை சிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டு எழிலை பார்த்தவாறே, "அது... அப்..அப்படி இல்லை அண்ணி, அது வந்து" என்று தயங்கி நிற்க,
எழிலோ சுடரிடம் தான் கொண்டு வந்திருந்த பையை அளித்தவன் "அக்கா இதுல இவளுக்கு தேவையான எல்லாமே வச்சிருக்கேன் போகும் போது சாப்பிட கொடுங்க, நான் வரவரைக்கும் கொஞ்சம் இவளை வாட்ச் பண்ணு மாமியை நீலாம்மாவை ஏமாத்திடுவா.., டெய்லி காலையில எக்சர்சைஸ், யோகா சாயாங்கால வாக்கிங் எல்லாமே பண்ண வச்சிடு.., முக்கியமா சாயந்தரத்துல வாக்கிங் முடிச்சிட்டு வந்து கால் வலியை சாக்கா வச்சிட்டு காபி கேட்பா குடுக்கவே குடுக்காதிங்க..., இந்த மாதிரி நேரத்துல ஆசை பட்டதெல்லாம் சாபிடலாம்ன்னு நீலாம்மா சொன்னதை வச்சே தேவை இல்லாததையெல்லாம் சாப்பிட்டு இழுத்துவிட்டுகுவா..." என்றிட,
"இல்லை இல்லை அண்ணி அப்படி எல்லாம் இல்லை, மாமா சொல்றதை நம்பாதீங்க" என்று அப்பாவியாக அவள் பார்க்க..,
"என்னடி இல்லை" என்று அவளை முறைத்தவன் சுடரிடம் முக்கியமா ஐஸ்க்ரீம் கேட்பா.., "அப்படி கேட்டா அதை வாங்கிட்டு வந்து புல்லா மெல்ட் ஆனதுக்கு அப்புறம் ஊட்டி விடுங்க" என்றிட..,
"ஏதே ஊட்டி விடணுமா..?? ஏண்டா உன் பொண்டாட்டிக்கு கை இல்லையா..?? "என்று சுடர் விசித்திரமாக தம்பியை பார்க்க..,
"ஆமாக்கா அப்படி தான் இல்லாட்டி அன்னைக்கு முழுக்க இது ஒத்துக்கலை அது ஒத்துக்கலைன்னு எதையும் சாப்பிட முடியலைன்னு சுத்த விட்டு நம்மளை ஒரு வழி ஆக்கிடுவா.." என்றிட..,
"டேய் மாமா இப்படி தான் என்னை போட்டு கொடுப்பியா நான் உன் பொண்டாட்டி அதை மறந்துடாதே" என்று அவனிடம் கிசுகிசுக்க..,
அவளை மீண்டும் முறைத்தவன் மேலும் சில நிமிடங்கள் செலவழித்து மனைவியை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்னென்ன எந்தெந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை வாசிக்க..,
சுடரோ அவனிடம் "ஏண்டா அவ்ளோ தானா முடிஞ்சதா..? இல்லாட்டியும் போதும் நிறுத்து..!! நானும் ரெண்டு குழந்தை பெத்திருக்கேன் கர்ப்பிணி பெண்ணை எப்படி பார்த்துக்கணும்ன்னு எங்களுக்கும் தெரியும் ஆனா ஒன்னு நீ சொல்றதை கேட்கிற எனக்கே தலை சுத்துதே, பாவம்டா இவ..!!" என்று அலரை பார்க்க..,
"அக்கா மத்தவங்க எப்படியோ எனக்கு தெரியாது ஆனா இவளை இந்த நேரத்துல கவனிச்சிக்கிறது ரொம்பவே பெரிய சேலேஞ் அதெல்லாம் உனக்கு புரியாதுக்கா" என்றிட
அலர்விழியோ, "இப்போ தெரியுதா அண்ணி மாமா என்னை எப்படி டார்ச்சர் பண்றாங்கன்னு" என்று கேட்க..,
அலரின் காதை பிடித்து இழுத்த சுடர், "இல்லை..!! நீ என் தம்பியை எப்படி எல்லாம் படுத்துறன்னு புரியுது" என்று புன்னகையுடன் கூற..,
அசடு வழிய நின்றிருந்த அலரை, 'அமுலு' என்ற நாதனின் குரல் எட்டிய நொடி "இதோ வந்துட்டேன்ப்பா" என்று அவசரமாக குரல் கொடுத்தவள்
நாதனின் குரலுக்கு கட்டுப்பட்டு விரைவாக செல்ல முயன்றவளின் கரத்தை பற்றி தடுத்து நிறுத்திய எழில் அவளிடம், "எத்தனை முறை தான்டி சொல்றது இப்படி அவசரமா கிளம்பாதன்னு.., உங்க அப்பா கூப்பிட்டாருன்னா எந்த நேரத்துல எப்படி இருக்கனும்ன்னு கூடவா தெரியாது உனக்கு ..?? எப்பவுமே ஓட்டம்" என்று அலரை கடிய...,
"எதுக்குடா இப்ப அவளை திட்டுற மாமா கூப்பிட்டதும் ஓடற பழக்கம் இப்ப வரை மாறலை..., இன்னும் குழந்தையாவே இருக்கா அவளை போய் எதுக்கு இப்படி பேசுற" என்று சுடர் தம்பியை கண்டிக்க
"ஹ்ம்ம் இப்ப சொன்ன பாத்தியா 'குழந்தை' அதுக்கு தான்..!! நான் சொன்னேன், இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு முடியிற வரை இந்த குழந்தைக்கு குழந்தை வேண்டாம்ன்னு ஆனா கேட்டாளாக்கா இவ..!! அன்னைக்கு இவளை விட்டுட்டு மதுரைக்கு ட்ரைனிங் போயிருந்தப்போ அவங்க அப்பா கேட்டுட்டாராம் உடனே குழந்தை வேணும்ன்னு ஒரே அடம்... அப்போ தான் அப்படின்னு பார்த்தா இப்போ இந்த நிலையிலும் இவங்கப்பா கூப்பிட்டா மறுநிமிஷமே முன்னாடி போய் நிற்ப்பேன்ன்னு ஓடுறா, நீயே சொல்லு இவ பண்றதுக்கு சரியா..?? குழந்தையை பத்தின நினைப்பு கொஞ்சமாவது இருக்காடி உனக்கு" என்று சுடரிடம் ஆரம்பித்து அலரிடம் முடிக்க.
தன் தவறு புரிபடவும் "சாரி மாமா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் கேர்புல்லா இருக்கேன்"
'உன் சாரியை கொண்டு போய் குப்பை தொட்டியில போடுடி' என்று எழில் சீறவும்..,
"டேய் என்னடா இது போதும் நிறுத்து..!! கிளம்புற நேரத்துல விட்டா அவ அழுதிடுவா போல" என்று அலரின் வாடிய முகத்தை பார்த்தவாறே சுடர் கூறவும்..,
அப்போதுதான் அலரின் கசங்கிய முகத்தை கண்டவன் மனைவியின் அவசரத்திற்கு காரணமான நாதனின் மீதான வருத்தத்தை மனைவியிடம் காட்டி விட்டதை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவன், அலரை நெருங்கி அவள் முகம் நிமிர்த்தி "சாரிடி குள்ளச்சி, மெதுவா நடன்னு எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கேன், யார் கூப்பிட்டாலும் என்ன அவசரமா இருந்தாலும் வரேன்னு குரல் கொடுத்துட்டு மெதுவா போகணும் சரியா..??" என்று அவள் முகம் பார்க்க,
பேறுகாலத்தில் கணவனாக மட்டுமின்றி தாயாய் தன்னை மடி தாங்கும் எழிலின் சிறு சுணக்கத்தையும் எப்போதுமே தாள முடியாதவளுக்கு இப்போதைய அவன் பேச்சில் கண்கள் கலங்கி விட்டிருக்க இதழ்களை கடித்த வண்ணம் கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள்.
'ப்ச் சாரிடி, ப்ளீஸ்' என்று விழவிருந்த அவள் நீர்மணியை துடைத்தவன், 'சாரிடி குள்ளச்சி உன்கூட வரணும்ன்னு நானும் எவ்ளோ ட்ரை பண்ணேன் ஆனா இம்பார்டன்ட் மீட் அவாய்ட் பண்ண முடியாது.' என்றவன் அவள் உச்சியில் முத்தமிட்டு 'ப்ளீஸ் சிரிடி' என்றிட..,
அப்போது தான் முகம் தெளிந்தவள் ஆதாரங்கள் விரிய அவனை அணைத்து கொண்டு "கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி கேட்கிறேன் மாமா ஆனா சீக்கிரம் வந்துடனும்" என்று அவனிடம் உறுதி பெற்ற பின்னரே கிளம்பினாள்.
ஐந்து வருடத்திற்கு முன் :
தமிழ் மாதப்படி எட்டு முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கிய இரண்டாம் நாளே அலருக்கு வளைகாப்பு செய்யப்பட்டு அவளை ஆரணிக்கு அழைத்து செல்ல வேண்டி நாதன், நந்தன், நீலா முதலானோர் ஹாலில் காத்திருக்க.., தங்கள் அறைக்கு சென்ற அலர் விசேஷத்திற்காக கட்டியிருந்த பட்டுப்புடவையை களைந்து பயணத்திற்கு ஏதுவாக இலகுவான உடைக்கு மாறி நகைகளை கழற்றி பத்திரபடுத்தியவள் தலை அலங்காரத்தை பிரித்து விட்டு கன்னத்தில் வைக்கபட்டிருந்த சந்தனத்தை துடைக்க முற்ப்பட போது அறைக்குள் நுழைந்த எழில் அவள் கரத்தை பற்றி நிறுத்தி பின்னிருந்து அணைத்து நிறை மாத வயிற்றை தழுவியவாறே அவள் தோளில் முகம் பதித்து எதிரே இருந்த கண்ணாடியில் அவளை பார்த்து ரசித்தவன்,
"துடைக்காதடி குள்ளச்சி உன்னை இப்படி பார்க்க ரொம்ப அழகா இருக்கு, என்று அவள் கரத்தில் அடுக்கப்பட்ட வளையல்களை வருடிக்கொண்டே இப்படியே இரு..!!" என்றிட..,
அவன் மீதே பார்வை பதித்திருந்த அலர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருப்பதை கண்டவன் "என்னடி ஆச்சு அமைதியா இருக்க" என்றவாறே கையோடு கொண்டு வந்திருந்த பழச்சாறை அவளுக்கு புகட்ட..,
இதை கண்ட அலரின் கண்கள் கலங்கிட அவன் கொடுத்ததை குடிக்காமல் எழிலிடம், "கண்டிப்பா இப்பவே போகனுமா மாமா..!! வேணும்ன்னா நான் உங்ககூடவே அடுத்த வாரம் ஊருக்கு போகட்டா..." என்று எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்க்க,
எழிலோ பதில் ஏதும் கூறாமல் அவள் முன் பழச்சாறை நீட்டியபடி அழுத்தமாக அவளையே பார்த்து கொண்டிருக்க அதை கண்டவள்,
'சாரி மாமா' என்று உடனே அவசரமாக அதை பருகிட,
'மெதுவாடி' என்றவாறே தானே அவளுக்கு புகட்டியவன் குடித்து முடித்ததும் அவள் இதழ்களை துடைத்து விட்டு, "இப்போ சொல்லு" என்றிட..,
"நீங்க எப்போ வருவீங்க கன்பார்மா சொல்லுங்க, இல்லாட்டி நாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாமா..?? இல்ல இப்பவே நீங்களும் என் கூட வரணும்" என்றிட.
அவனோ சில நொடிகளுக்கு பின்,"இதை தானேடி நான் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் அங்க விட சென்னையில பெசிலிட்டி அதிகம் இங்கயே பார்த்துக்கலாம்ன்னு ஆனா உங்கப்பா எங்க கேட்கிறார்.., நான் சொல்றதை கேட்க கூடாதுங்கிரதுக்காகவே ஆரணில தான் பிரசவம்ன்னு பிடிவாதமா இருக்கார். நல்ல வேலை நீலாம்மா ரெண்டு மாசத்துக்கு முந்தி நாள் நல்லா இல்லைன்னு சொன்னாங்க இல்லாட்டி ஏழாம் மாசமே உன்னை கூட்டிட்டு கிளம்பி இருப்பார்..., நீ ஓகே சொல்லு போதும் அவர் என்ன சொன்னாலும் சரி நாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாம்" என்று ஆதங்கத்துடன் கேட்க..,
'இல்லை மாமா..' என்று அதை மறுத்து அலர் ஏதோ கூற வரவும், வயிற்றில் பதிந்திருந்த அவன் கரங்கள் மகனை உணர 'ஷ்ஷ்ஷ்' என்று அவள் இதழ் மீது கரம் பதித்து அவள் பேச்சை தடை படுத்தியவன் .., சில நொடிகள் கழித்து மெல்ல அவள் வயிற்றில் இருந்து கரத்தை அகற்றி அவள் முன்பாக வந்து மண்டி இட்டு, மகனின் பாதம் எழுந்த இடத்தில் முத்தம் வைக்க, தந்தையை உணர்ந்த குழந்தையும் மீண்டும் பலமாக உதைத்து தன் இருப்பை உணர்த்த அதை கண்டவனின் மகிழ்ச்சி இரட்டிப்பாக அவள் வயிற்றில் இதழ் பதித்து உள்ளிருக்கும் மகனுக்கு எண்ணிலடங்கா முத்தத்தை கொடுத்தவாறே, "கண்ணா வந்துடீங்களா... இப்போ அம்மா கூட கிளம்புங்க அப்பா சீக்கிரமாவே வந்துடுறன்..., அதுவரை பத்திரமா இருங்க... அம்மா சரியா உங்களுக்கு சாப்பாடு கொடுக்காட்டி என்கிட்ட சொல்லுங்க, அப்புறம்... " என்று பேசிக்கொண்டிருந்தவனின் தலையை அலர் நிமிர்த்த..,
"என்னடி வேணும் உனக்கு..!! என் பையன் கிட்ட பேச கூட விடமாட்டேன்கிற" என்று சலித்து கொண்டவன் அருகே வைத்திருந்த ப்ரூட் சாலடை அவளிடம் அளித்து என் பையனுக்கு பசிக்குதாம் இதை சாப்பிடு அது வரைக்கும் அவன் கிட்ட பேசிட்டு வரேன் என்று மீண்டும் மகனிடம் கதையளக்க ஆரம்பிக்க..,
'இப்போ தானே ஜூஸ் குடிச்சேன்' என்று முகம் சுருக்கிய அலர்விழி அவன் அளித்த கிண்ணத்தை மேஜையில் வைத்தவள், மீண்டும் அவன் முகம் நிமிர்த்தி, "மாமாl அப்பா, அம்மா எல்லாரும் வைட் பண்ணிட்டு இருக்காங்க.., எப்ப வரீங்க சொல்லுங்க இல்லாட்டி நான் கிளம்புறேன் என்று சட்டென முகிழ்த்த கோபத்துடன் எழ முற்ப்பட..,
அவள் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு அவளை எழ விடாமல் செய்தவன் 'ஏய் உட்காருடி' என்று எச்சரித்து சுடருக்கு அழைப்பு விடுத்து "அக்கா ஒரு பத்து நிமிஷம் வைட் பண்ணுங்க நாங்க வந்துடுறோம்" என்று கூற.., அலர்விழியால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.., அவளின் முறைப்பை சட்டை செய்யாதவன் மீண்டும் மகனிடம் பேசியவாறே முத்தம் பதிக்க,
எனக்கு கூட இவ்வளவு கொடுக்கலை என்று முனுமுனுத்தவள் அவனிடம், "நீங்க மட்டும் அவனுக்கு முத்தம் கொடுக்குறீங்க ஆனா எனக்குள்ள இருந்தாலும் என் பையனுக்கு என்னால கொடுக்க முடியலை" என்று முகத்தை சுருக்க..,
மகனிடம் இருந்து பார்வையை அகற்றி அவளை பார்த்தவன் "ஏன்டி இப்போ நான் அவனுக்கு கொடுக்குறது உன் பிரச்சனையா..?? இல்லை உனக்கு அந்த அளவு கொடுக்கலைங்கிறது பிரச்சனையா..?? என்று அவளை சரியாக கண்டு கொண்டு கேட்க..,
"ரெண்டுமே தான்" என்று அலர் இதழ் சுழிக்க..,
அதை கண்டவனின் இதழ்களில் புன்னகை பூக்க அவள் மதிமுகத்தை கரங்களில் ஏந்தி "இதான் உன் பிரச்சனையா..??" என்றவாறே அவள் முகம் முழுக்க முத்திரை பதித்தவன், "இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்க நீயும் அவனுக்கு கொடுப்ப" என்றிட..,
அவனையே யோசனையாக பார்த்தவள், "ஏன் மாமா இந்த குழந்தை நீ எதிர்பார்த்தபடி பொண்ணு இல்லைங்கிறது உனக்கு கஷ்டமா இல்லையா..??" என்று கேட்க..,
"கஷ்டமா..?? எதுக்கு" என்று புரியாமல் அவளை பார்த்தவன் பின் அவள் கேள்வி புரிபடவும்,
"அமுலு குழந்தையில என்னடி பேதம்..!! நம்மோட முதல் குழந்தை அது பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் நமக்கு எப்பவும் ஸ்பெஷல் ஏன் தெரியுமா..??" என்று வினவ..,
"தெரியலையே மாமா" என்று அவள் இதழ் பிதுக்க..,
"கணவன் மனைவியா இருக்க நம்மளை அப்பா அம்மாவா உயர்த்த போற குழந்தை யாரா இருந்தாலும் அவங்க எப்பவும் ஸ்பெஷல் தானே..!! என் பையன்டி அவன்..!! என் பொண்ணுங்களுக்கு முன்னாடி அவன் வரப்போறதுக்கு நான் எதுக்கு கஷ்டபடனும்" என்று அவன் கூறவுமே..,
பொண்ணுங்களா..??? என்று குழப்பத்துடன் அலர் அவனை பார்க்க,
எழில் அவளிடம், "ஆனா ஒன்னு இவன் நல்லபடியா நம்ம கைக்கு வந்த அப்புறம் எனக்கு ஒன்னு இல்லை ரெண்டு பொண்ணு பெத்து கொடுத்துடு போதும்" என்றிட..,
"ரெண்டா..??" என்று அலர் வாயில் கரம் பதிக்க,
"ஏன்டி நான் எப்போ உன்கிட்ட ஒரே குழந்தை போதும்ன்னு சொன்னேன்..??" என்று புருவம் உயர்த்தி அவள் நெற்றியில் முட்டியவாறே "அடுத்து எனக்கு கண்டிப்பா பொண்ணு தான் வேணும் அதுவும் உன்னை மாதிரியே" என்றவன்..,
"ஏன் உங்கப்பாக்கு மட்டும் தான் எல்லா நேரமும் அவரை கொண்டாடுற பொண்ணு இருக்கனுமா எங்களுக்கு எல்லாம் அந்த ஆசை இருக்க கூடாதா..??" என்று வினவ..,
"மா..மா" என்று வியப்புடன் அலர் அவனை பார்க்க..,
"ஆமா என்னோட ரொம்ப நாள் ஆசை இது..!! அதுவும் அன்னைக்கு காலேஜ் ரோட்ல என்னை அடிச்சிட்டு எங்கப்பா என்னை இப்படி தான் வளர்த்தாருன்னு சொன்ன பாத்தியா..!!! அப்போ அந்த ஆசை இன்னும் அதிகமாச்சு" என்று அவள் விழிகளோடு தன் விழிகளை கோர்த்தவாறே, "எனக்கு எல்லா விதத்துலையும் உன்னை மாதிரியே முக்கியமா எப்பவும் அப்பாவை கொண்டாடுற ஒரு பொண்ணு இல்லல்ல ரெண்டு பொண்ணுங்க வேணும்..!!" என்றிட,
ஒரு நொடி அவன் விழியில் வழிந்த ஏக்கத்தில் ஸ்தம்பித்து நின்றவள் பின் அவனிடம் "எனக்கு டீல் டபுள் ஓகே மாமா..!!” என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் நீ என் கூட இருந்தா எத்தனை வேணும்னாலும் பெத்து கொடுக்குறேன் ஆனா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுங்க மாமா.. அப்பு ரொம்ப தேடுவான்" என்றவளின் வதனமே அவனை விட நான் உன்னை அதிகமாக தேடுவேன் என்ற செய்தி உரைத்த அதே நேரம் அவர்கள் அறை கதவு பலமாக தட்டப்பட,
'நீ இரு' என்ற எழில் சென்று கதவை திறக்க சுடர்க்கொடி தான் நின்றிருந்தார்.
"டேய் டைம் ஆச்சுடா, நல்ல நேரத்துல கிளம்பனும் இன்னும் இருபது நிமிஷம் தான் அப்புறம் ராகுகாலம் ஆரம்பிச்சிடும் நாங்க வேளையோட ஊர் போய் சேர வேண்டாமா..?? மாமா வேற லேட் ஆகுதுன்னு ஏற்கனவே மாமியை முறைக்க ஆரம்பிச்சிட்டாரு" எனவும்..,
அவனை முந்தி கொண்டு அலர் ,"நான் அப்பவே சொன்னேன் அண்ணி அப்பா வைட் பண்ணிட்டு இருப்பாங்க சீக்கிரம் கிளம்பனும்ன்னு, ஆனா மாமா தான் ரெண்டு பொண்ணு வேணும்ன்னு பேசிட்டே லேட் பண்ணிட்டார்" என்றிட,
அவளை முறைத்தவாறே "ஏய் நீ தானேடி.." என்று எழில் ஆரம்பிக்கவுமே..,
"ஷ்ஷ் போதும் உங்க சண்டையை அப்புறம் வச்சிகோங்க" என்ற சுடர் அலரிடம் "இப்போ உனக்கு கிளம்புற எண்ணம் இருக்கா..?? இல்லையா..??" என்று கேட்க..,
"நான் எப்பவோ ரெடி அண்ணி ஆனா மாமா தான் வரமாட்டேன்னு சொல்றாரு"
"அலர் இன்னும் எத்தனை முறை தான் இதையே சொல்லிட்டு இருப்ப என்று அவளை கடிந்தவர், அவன் தான் மூணு மணிக்கு மீட்டிங் இருக்கு இல்லாட்டி கூட வந்திருப்பேன்னு சொன்னானே, முக்கியமான வேலை இருக்கிறதால தான் ஒரு வாரம் கழிச்சி வரேன் சொல்றானே.., ஏன் எங்களை பார்த்தா மனுஷங்க மாதிரி தெரியலையா உனக்கு..??? இதென்ன சின்ன குழந்தை மாதிரி அடம் என்று கடிந்தவர் டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்கே புரிஞ்சிக்க மாட்டியா..!! " என்று சலித்து கொள்ள..,
அலரோ கலங்க முற்ப்பட்ட விழிகளை இமை சிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டு எழிலை பார்த்தவாறே, "அது... அப்..அப்படி இல்லை அண்ணி, அது வந்து" என்று தயங்கி நிற்க,
எழிலோ சுடரிடம் தான் கொண்டு வந்திருந்த பையை அளித்தவன் "அக்கா இதுல இவளுக்கு தேவையான எல்லாமே வச்சிருக்கேன் போகும் போது சாப்பிட கொடுங்க, நான் வரவரைக்கும் கொஞ்சம் இவளை வாட்ச் பண்ணு மாமியை நீலாம்மாவை ஏமாத்திடுவா.., டெய்லி காலையில எக்சர்சைஸ், யோகா சாயாங்கால வாக்கிங் எல்லாமே பண்ண வச்சிடு.., முக்கியமா சாயந்தரத்துல வாக்கிங் முடிச்சிட்டு வந்து கால் வலியை சாக்கா வச்சிட்டு காபி கேட்பா குடுக்கவே குடுக்காதிங்க..., இந்த மாதிரி நேரத்துல ஆசை பட்டதெல்லாம் சாபிடலாம்ன்னு நீலாம்மா சொன்னதை வச்சே தேவை இல்லாததையெல்லாம் சாப்பிட்டு இழுத்துவிட்டுகுவா..." என்றிட,
"இல்லை இல்லை அண்ணி அப்படி எல்லாம் இல்லை, மாமா சொல்றதை நம்பாதீங்க" என்று அப்பாவியாக அவள் பார்க்க..,
"என்னடி இல்லை" என்று அவளை முறைத்தவன் சுடரிடம் முக்கியமா ஐஸ்க்ரீம் கேட்பா.., "அப்படி கேட்டா அதை வாங்கிட்டு வந்து புல்லா மெல்ட் ஆனதுக்கு அப்புறம் ஊட்டி விடுங்க" என்றிட..,
"ஏதே ஊட்டி விடணுமா..?? ஏண்டா உன் பொண்டாட்டிக்கு கை இல்லையா..?? "என்று சுடர் விசித்திரமாக தம்பியை பார்க்க..,
"ஆமாக்கா அப்படி தான் இல்லாட்டி அன்னைக்கு முழுக்க இது ஒத்துக்கலை அது ஒத்துக்கலைன்னு எதையும் சாப்பிட முடியலைன்னு சுத்த விட்டு நம்மளை ஒரு வழி ஆக்கிடுவா.." என்றிட..,
"டேய் மாமா இப்படி தான் என்னை போட்டு கொடுப்பியா நான் உன் பொண்டாட்டி அதை மறந்துடாதே" என்று அவனிடம் கிசுகிசுக்க..,
அவளை மீண்டும் முறைத்தவன் மேலும் சில நிமிடங்கள் செலவழித்து மனைவியை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்னென்ன எந்தெந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை வாசிக்க..,
சுடரோ அவனிடம் "ஏண்டா அவ்ளோ தானா முடிஞ்சதா..? இல்லாட்டியும் போதும் நிறுத்து..!! நானும் ரெண்டு குழந்தை பெத்திருக்கேன் கர்ப்பிணி பெண்ணை எப்படி பார்த்துக்கணும்ன்னு எங்களுக்கும் தெரியும் ஆனா ஒன்னு நீ சொல்றதை கேட்கிற எனக்கே தலை சுத்துதே, பாவம்டா இவ..!!" என்று அலரை பார்க்க..,
"அக்கா மத்தவங்க எப்படியோ எனக்கு தெரியாது ஆனா இவளை இந்த நேரத்துல கவனிச்சிக்கிறது ரொம்பவே பெரிய சேலேஞ் அதெல்லாம் உனக்கு புரியாதுக்கா" என்றிட
அலர்விழியோ, "இப்போ தெரியுதா அண்ணி மாமா என்னை எப்படி டார்ச்சர் பண்றாங்கன்னு" என்று கேட்க..,
அலரின் காதை பிடித்து இழுத்த சுடர், "இல்லை..!! நீ என் தம்பியை எப்படி எல்லாம் படுத்துறன்னு புரியுது" என்று புன்னகையுடன் கூற..,
அசடு வழிய நின்றிருந்த அலரை, 'அமுலு' என்ற நாதனின் குரல் எட்டிய நொடி "இதோ வந்துட்டேன்ப்பா" என்று அவசரமாக குரல் கொடுத்தவள்
நாதனின் குரலுக்கு கட்டுப்பட்டு விரைவாக செல்ல முயன்றவளின் கரத்தை பற்றி தடுத்து நிறுத்திய எழில் அவளிடம், "எத்தனை முறை தான்டி சொல்றது இப்படி அவசரமா கிளம்பாதன்னு.., உங்க அப்பா கூப்பிட்டாருன்னா எந்த நேரத்துல எப்படி இருக்கனும்ன்னு கூடவா தெரியாது உனக்கு ..?? எப்பவுமே ஓட்டம்" என்று அலரை கடிய...,
"எதுக்குடா இப்ப அவளை திட்டுற மாமா கூப்பிட்டதும் ஓடற பழக்கம் இப்ப வரை மாறலை..., இன்னும் குழந்தையாவே இருக்கா அவளை போய் எதுக்கு இப்படி பேசுற" என்று சுடர் தம்பியை கண்டிக்க
"ஹ்ம்ம் இப்ப சொன்ன பாத்தியா 'குழந்தை' அதுக்கு தான்..!! நான் சொன்னேன், இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு முடியிற வரை இந்த குழந்தைக்கு குழந்தை வேண்டாம்ன்னு ஆனா கேட்டாளாக்கா இவ..!! அன்னைக்கு இவளை விட்டுட்டு மதுரைக்கு ட்ரைனிங் போயிருந்தப்போ அவங்க அப்பா கேட்டுட்டாராம் உடனே குழந்தை வேணும்ன்னு ஒரே அடம்... அப்போ தான் அப்படின்னு பார்த்தா இப்போ இந்த நிலையிலும் இவங்கப்பா கூப்பிட்டா மறுநிமிஷமே முன்னாடி போய் நிற்ப்பேன்ன்னு ஓடுறா, நீயே சொல்லு இவ பண்றதுக்கு சரியா..?? குழந்தையை பத்தின நினைப்பு கொஞ்சமாவது இருக்காடி உனக்கு" என்று சுடரிடம் ஆரம்பித்து அலரிடம் முடிக்க.
தன் தவறு புரிபடவும் "சாரி மாமா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் கேர்புல்லா இருக்கேன்"
'உன் சாரியை கொண்டு போய் குப்பை தொட்டியில போடுடி' என்று எழில் சீறவும்..,
"டேய் என்னடா இது போதும் நிறுத்து..!! கிளம்புற நேரத்துல விட்டா அவ அழுதிடுவா போல" என்று அலரின் வாடிய முகத்தை பார்த்தவாறே சுடர் கூறவும்..,
அப்போதுதான் அலரின் கசங்கிய முகத்தை கண்டவன் மனைவியின் அவசரத்திற்கு காரணமான நாதனின் மீதான வருத்தத்தை மனைவியிடம் காட்டி விட்டதை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவன், அலரை நெருங்கி அவள் முகம் நிமிர்த்தி "சாரிடி குள்ளச்சி, மெதுவா நடன்னு எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கேன், யார் கூப்பிட்டாலும் என்ன அவசரமா இருந்தாலும் வரேன்னு குரல் கொடுத்துட்டு மெதுவா போகணும் சரியா..??" என்று அவள் முகம் பார்க்க,
பேறுகாலத்தில் கணவனாக மட்டுமின்றி தாயாய் தன்னை மடி தாங்கும் எழிலின் சிறு சுணக்கத்தையும் எப்போதுமே தாள முடியாதவளுக்கு இப்போதைய அவன் பேச்சில் கண்கள் கலங்கி விட்டிருக்க இதழ்களை கடித்த வண்ணம் கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள்.
'ப்ச் சாரிடி, ப்ளீஸ்' என்று விழவிருந்த அவள் நீர்மணியை துடைத்தவன், 'சாரிடி குள்ளச்சி உன்கூட வரணும்ன்னு நானும் எவ்ளோ ட்ரை பண்ணேன் ஆனா இம்பார்டன்ட் மீட் அவாய்ட் பண்ண முடியாது.' என்றவன் அவள் உச்சியில் முத்தமிட்டு 'ப்ளீஸ் சிரிடி' என்றிட..,
அப்போது தான் முகம் தெளிந்தவள் ஆதாரங்கள் விரிய அவனை அணைத்து கொண்டு "கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி கேட்கிறேன் மாமா ஆனா சீக்கிரம் வந்துடனும்" என்று அவனிடம் உறுதி பெற்ற பின்னரே கிளம்பினாள்.