டேய் ஆதவா, நீ உத்ராகிட்ட அடி வாங்கின மகிழ்ச்சியைவிட அது எல்லாருக்கும் தெரிய வந்ததுல தான் எனக்கு double சந்தோஷம். இது தெரியறப்ப உன்னோட திருமுகத்தை அது காட்டும் reaction - ஐ பார்க்க ஆவலாய் இருக்கேன்.
அறிவு கெட்ட ஆதவனுக்கு இது கூடவா புரியலை, சுதா ஜாடையா இவன் உத்ராவோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்டனான்னு தெரிய தான் அப்படி பேசறா. அதுகூட புரியாமலா பதில் சொல்லிட்டு இருக்க. இந்த intimate விஷயங்களை தானாகவே கேள்வி கேட்டு தெரிஞ்சுக்க எந்த close friend-க்கும் கூட உரிமை இல்லை. அப்ப உத்ராக்கு கோவம் தானே வரும்.
இனியாக்கு பெரியவங்களோட பாவக்கணக்கு சேர்ந்து வாழ்க்கையை படுத்துது போலயே. பாவம் அவள்.
வருண் ஒரு ஆத்திரக்கார முட்டாள்ன்னு நினைச்சேன். இப்ப அவனும் அப்பனை போலவே சுயநலவாதியோன்னு தோணுது. பார்ப்போம்.
துர்காக்கு நாக்கை பிடிங்கி கொண்டு உயிரை விட தோணும் அளவுக்கு அவங்க பொண்ணு வந்து கேள்வி கேட்கணும். Eagerly expecting such scene.
இந்நேரத்துக்கு மலையரசன் அவங்களை பின்னி எடுத்து இருக்கணும். ஆனால் அந்த ஆளு ஒண்ணுமே பண்ணாமல் mixture சாப்பிட்டுட்டு இருக்கார்.
பார்ப்போம் அந்த மாங்காமடையன் ஆதவன் என்ன செய்யறான்னு.
டேய் ஆதவா, நீ எப்படி உத்ராவோட சமாதானம் ஆகறன்னு படிக்க ஆவலாய் இருக்கு. ஆனாலும் அவ உன்கிட்ட லேசுல சமாதானம் ஆகக்கூடாது. இதுவும் என் ஆசை.
பாலனுக்கு இப்படி திரும்புற பக்கமெல்லாம் பிரச்சனையா. இவன் சும்மா இருந்தாலே தவமுனி mode தான். இனிமேல் என்ன என்ன mood -ல் இருப்பானோ. ஆனால் ஒன்னு டா கண்டிப்பாக சீக்கிரத்துல உனக்கு romance வைக்கற ஐடியாவில் author இல்லை. அதுக்கு மட்டும் நல்ல விளங்குது.