இது ஒரு பத்தி கதை........
"ஹாய் நிலா, நான் சூர்யா", என்று எதோ ஒரு கதாநாயகன் நாயகியோடு பேசும் வசனம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது.
வின்சென்ட் பெர்னாண்டஸ், உணவருந்தும் மேஜையில் காஃபி கப்-பினை வைத்து.. "தாத்தா காஃபி" என்று அவனது தாத்தா ஹியூபெர்ட் பெர்னாண்டஸ் க்கு கொடுத்தான். அவரோ வெகு தீவிரமாக ஒரு கடிதத்தை படித்தபடி காஃபியை எடுத்துக் குடித்தார். பத்து நிமிடத்தில் மயங்கி சரிந்தது அவர் உடல். "சாரி தாத்தா, என் காதல் சக்ஸஸ் ஆகணும்-னா சொத்து பூரா என்னோடதா இருக்கணும்-கின்றது ஸ்டெல்லா வீட்ல போட்ட கண்டிஷன், எனக்கு உங்களை மேல அனுப்பறத தவிர வேற வழி தெரியல ",என்று அவன் மனதுக்குள் பேசினான். மெதுவே அவர் கையில் இருந்த கடிதத்தை எடுத்து படிக்க.....
அது நீதிமன்றம் கொடுத்திருந்த ... அவர்களது நிறுவனத்தின் திவால் நோட்டீஸ்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&