ThangaMalar
Well-Known Member
ரொம்ப சரி, Lakshmi..வர்ஷினிக்கு பிரச்சனையே ஈஷ்வர் ஒரு கட்டத்தில் அவளிடம் நெருங்காதது தான். ஆனால் கணவனே ஆனாலும் அவனிடம் அந்த விதமான உணர்வுகளை அவளால் பகிர முடியாமல் தான் அவள் போதையை நாடியதே.மல்லி mam ஒரு இடத்தில் தன் அம்மாவை பற்றி கூட லஜ்ஜையின்றி பகிர்ந்தவளுக்கு ஈஷ்வரிடம் இதை பகிர முடியவில்லை என சொல்லியிருப்பார்கள்.
கணவனிடமே இவ்வளவு கூச்சமும் sensitiveவாகவும் இருப்பவளுக்கு உரிமையுள்ள அவனிடமே கேட்காமல் தனிமையெனும் நெருப்பில் குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு Varsha பேசியதை கேட்டதும் அதீத கோபம் வந்துவிட்டது.அதனால் தான் அவள் பேசிய வார்த்தைகள் சுழன்று அடிக்கின்றன.கேட்க உரிமையுள்ள கணவனிடமே கேட்காமல் ஒரு தனி வாழ்க்கை வாழ்ந்து தவித்து கொண்டிருக்கும் என்னை பார்த்தா இப்படி ஒரு வார்த்தை சொல்கிறாய் என்ற அதீத கோபம்.அவள் உணர்வுகள் யாருக்கும் தெரியாது. ஈஷ்வருக்கு கூட மிக சமீபத்தில் தான் தெரிவித்தாள்.அதனால் தான் வர்ஷாவிடம் கூட யாரும் எனக்கு ஆள் வேண்டாம்.நானே உன்னை handle செய்வேன் என்கிறாள்.இது என்னுடைய view.தப்பா சரியா தெரியாது friends.
Correct ah sonnenga...