Ramya Rajan
Well-Known Member
“என்னப்பா கூப்பிடீங்களா?” என்ற மகனை ஏற இறங்க பார்த்தவர், “வெண்ணிலாவை கேட்காம நீயாவே அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லி இருக்க...” என்றதும்,
ஐயையோ அதுக்குள்ள மாட்டிகிட்டோமா என விழித்தவன், வெண்ணிலாவுக்கும் தெரிந்திருக்குமே, அவள் எப்படி சமாளித்தாளோ... அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
வெண்ணிலா வீட்டில் இருந்து தகவல் வரும் போது அவன் வீட்டில் இல்லை. அவன் வருவதற்குள் மகேஸ்வரியும் வெண்ணிலாவும் புறப்பட்டு சென்றிருந்தனர். இல்லையென்றால் அவனே வெண்ணிலாவிடம் சொல்லி இருப்பான்.
பேசுடா இப்படி பேசாம நின்னா என்ன அர்த்தம்?
“எனக்கு வேற வழியில்லை. வெண்ணிலாவுக்கு இஷ்டம்னு சொன்னதுனால தான், இந்த கல்யாண விஷயத்தை பேசவே ஆரம்பிச்சீங்க. இல்லைனா என்னோட விருப்பத்தை இங்க யாரு மதிக்க போறா?”
“உன் விருப்பத்தை மதிக்க கூடாதுன்னு எங்களுக்கு ஆசைப் பாரு.”
பேச்சு திசை மாறுவதை உணர்ந்த அமுதா, கணவனுக்கும் மகனுக்குமான பேச்சில் குறுக்கிட்டார்.
“போதும் இப்ப ஏன் இந்த பேச்சு? அதுதான் கல்யாணம் முடிவு ஆகியிருக்கு இல்ல.. அதுக்கான வேலையை பாருங்க.”
************************************************************************************************************
சமீபத்தில் தான் வீடு கட்டினார்கள். அதனால் நிறைய பணம் அதற்கே செலவாகி இருந்தது. பத்தாததற்கு அமுதா மற்றும் காமாக்ஷியின் நகையை வேறு அடகு வைத்திருந்தனர். ஜெய் ஆனந்தனும் லோன் போட்டு வீட்டுக்கு பணம் கொடுத்திருந்தான்.
மாதாமாதம் லோன் கட்டியது போக ஒரு லட்சம் கையில் இருந்தது. ஆனால் அது பத்தாது என அவனுக்கு தெரியும். திரும்ப அவன் இன்னொரு லோன் தான் போட வேண்டும். அப்படி போட்டால்... வாங்கும் சம்பளம் முக்கால்வாசி கடனை அடைக்கவே சென்று விடும்.
என்ன செய்வது என அவன் யோசனையில் இருக்க, “இந்தக் கல்யாணம் நம்ம கவுரவம். நாம என்ன செய்றோம்னு உங்க அத்தை வீட்ல கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்ப்பாங்க. அவங்க முன்னால நாம இந்தக் கல்யாணத்தை நல்லா நடத்தனும்.” என்றவர், “அமுதா, லாக்கர்ல இருந்து எடுத்து வந்த அகல்யாவோட நகை பீரோவில் இருக்கு அதை எடு.” என்றவர், மனைவி எடுத்து வந்து கொடுத்த நகையை மகனிடம் கொடுத்து, “இதை வச்சு பணம் வாங்கிட்டு வா.. அகல்யாவுக்கு கல்யாணம் செய்ய இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள மீட்டுடலாம்.” என்றார்.
தங்கைக்கு கல்யாணம் முடியாமல் தான் திருமணம் செய்வதே தவறு, இதில் அவள் நகையை வைத்து திருமணம் செய்துகொள்ள ஜெய்க்கு மனமில்லை.
*************************************************************************************************************
நிச்சயம் என்று முன்னர் எதுவும் நடக்காததால்... திருமணதிற்கு முன்தினமே நிச்சயதார்த்தம் வைத்திருந்தனர்.
பெண் வீட்டினர் வர தாமதம் ஆனதால்... அதன் பிறகு வெண்ணிலாவுக்கு அலங்காரம் செய்து, நிச்சயம் முடித்து, நலங்கு வைக்க இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.
ஏற்கனவே நிச்சயம் செய்த திருமணம் நின்றிருக்க, இது இரண்டாவது முறை. உறவினர்கள் எல்லோரும் தன்னை பற்றி கேலியாகத்தானே நினைத்திருப்பர்கள். ஏனோ எல்லோரும் தன்னைப் பற்றி பேசுவது போலவே அவளுக்கு எண்ணம். அதனால் வெண்ணிலா தலை நிமிரவே இல்லை.
நண்பர்களோடு உட்கார்ந்திருந்த ஜெய், அவள் ஒருமுறையாவது தன்னை நிமிர்ந்து பார்த்து விட மாட்டாளா என பார்வையால் தவம் கிடந்தான்.
ஐயையோ அதுக்குள்ள மாட்டிகிட்டோமா என விழித்தவன், வெண்ணிலாவுக்கும் தெரிந்திருக்குமே, அவள் எப்படி சமாளித்தாளோ... அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
வெண்ணிலா வீட்டில் இருந்து தகவல் வரும் போது அவன் வீட்டில் இல்லை. அவன் வருவதற்குள் மகேஸ்வரியும் வெண்ணிலாவும் புறப்பட்டு சென்றிருந்தனர். இல்லையென்றால் அவனே வெண்ணிலாவிடம் சொல்லி இருப்பான்.
பேசுடா இப்படி பேசாம நின்னா என்ன அர்த்தம்?
“எனக்கு வேற வழியில்லை. வெண்ணிலாவுக்கு இஷ்டம்னு சொன்னதுனால தான், இந்த கல்யாண விஷயத்தை பேசவே ஆரம்பிச்சீங்க. இல்லைனா என்னோட விருப்பத்தை இங்க யாரு மதிக்க போறா?”
“உன் விருப்பத்தை மதிக்க கூடாதுன்னு எங்களுக்கு ஆசைப் பாரு.”
பேச்சு திசை மாறுவதை உணர்ந்த அமுதா, கணவனுக்கும் மகனுக்குமான பேச்சில் குறுக்கிட்டார்.
“போதும் இப்ப ஏன் இந்த பேச்சு? அதுதான் கல்யாணம் முடிவு ஆகியிருக்கு இல்ல.. அதுக்கான வேலையை பாருங்க.”
************************************************************************************************************
சமீபத்தில் தான் வீடு கட்டினார்கள். அதனால் நிறைய பணம் அதற்கே செலவாகி இருந்தது. பத்தாததற்கு அமுதா மற்றும் காமாக்ஷியின் நகையை வேறு அடகு வைத்திருந்தனர். ஜெய் ஆனந்தனும் லோன் போட்டு வீட்டுக்கு பணம் கொடுத்திருந்தான்.
மாதாமாதம் லோன் கட்டியது போக ஒரு லட்சம் கையில் இருந்தது. ஆனால் அது பத்தாது என அவனுக்கு தெரியும். திரும்ப அவன் இன்னொரு லோன் தான் போட வேண்டும். அப்படி போட்டால்... வாங்கும் சம்பளம் முக்கால்வாசி கடனை அடைக்கவே சென்று விடும்.
என்ன செய்வது என அவன் யோசனையில் இருக்க, “இந்தக் கல்யாணம் நம்ம கவுரவம். நாம என்ன செய்றோம்னு உங்க அத்தை வீட்ல கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்ப்பாங்க. அவங்க முன்னால நாம இந்தக் கல்யாணத்தை நல்லா நடத்தனும்.” என்றவர், “அமுதா, லாக்கர்ல இருந்து எடுத்து வந்த அகல்யாவோட நகை பீரோவில் இருக்கு அதை எடு.” என்றவர், மனைவி எடுத்து வந்து கொடுத்த நகையை மகனிடம் கொடுத்து, “இதை வச்சு பணம் வாங்கிட்டு வா.. அகல்யாவுக்கு கல்யாணம் செய்ய இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள மீட்டுடலாம்.” என்றார்.
தங்கைக்கு கல்யாணம் முடியாமல் தான் திருமணம் செய்வதே தவறு, இதில் அவள் நகையை வைத்து திருமணம் செய்துகொள்ள ஜெய்க்கு மனமில்லை.
*************************************************************************************************************
நிச்சயம் என்று முன்னர் எதுவும் நடக்காததால்... திருமணதிற்கு முன்தினமே நிச்சயதார்த்தம் வைத்திருந்தனர்.
பெண் வீட்டினர் வர தாமதம் ஆனதால்... அதன் பிறகு வெண்ணிலாவுக்கு அலங்காரம் செய்து, நிச்சயம் முடித்து, நலங்கு வைக்க இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.
ஏற்கனவே நிச்சயம் செய்த திருமணம் நின்றிருக்க, இது இரண்டாவது முறை. உறவினர்கள் எல்லோரும் தன்னை பற்றி கேலியாகத்தானே நினைத்திருப்பர்கள். ஏனோ எல்லோரும் தன்னைப் பற்றி பேசுவது போலவே அவளுக்கு எண்ணம். அதனால் வெண்ணிலா தலை நிமிரவே இல்லை.
நண்பர்களோடு உட்கார்ந்திருந்த ஜெய், அவள் ஒருமுறையாவது தன்னை நிமிர்ந்து பார்த்து விட மாட்டாளா என பார்வையால் தவம் கிடந்தான்.