போங்க பானு....... காமெடி பண்ணாதீங்க..........
ஏண்டி விட்டுட்டு போனன்னு திரும்ப திரும்ப கேட்கிறான்...........
குற்ற உணர்ச்சி எந்த மில்லில் கிடைக்கும்னு சொல்லுங்க............ அந்த மில்லையும் திரு வாங்கிடுவான்...............
நான் காமெடி பண்ணவில்லை, Joher டியர்
நான் சொன்னது, நல்லா வாழவேண்டிய
ஷெரினா, துன்பப்பட்டு தன்னால் அநியாயமாக
ஒரு உயிர் போய் விட்டதே-ங்கிறது-தான்
திருநீர்வண்ணனின் குற்ற உணர்ச்சி
இதுக்கு முதல் காரணமாக, முதல் குற்றவாளியாக,
தந்தை மேகநாதனை, திரு நினைக்கிறான்
(வீட்டின் மூத்த மகனான, இவன் வேற்று
இனப் பெண்ணை, தங்கள் வீட்டில் ஏற்றுக்
கொள்வார்களா-ங்கிறதை மறந்து, கோத்திரமறிந்து
தான், பெண்ணை லவ் பண்ணலை-ங்கிற
தன்னோட தப்பை, திரு வசதியாக மறந்து விட்டான்
வயசுக் கோளாறு
ஹ்ம்ம்............ வாலிப வயசு
அப்பாவுக்கு அடங்கின மகனான,
அப்பா கைக்குள் வளர்ந்த பய புள்ள,
இதையெல்லாம் யோஜனை செய்யலை
சரி, எதுக்கும் தன்னை கல்யாணம் செய்யப்போற
துளசியிடம் சொன்னால், (இவனாலேயே முடியாத
காரியத்தை, வசதி குறைவான வேலைக்காரனின்
மகள், இவனை மறுக்க காரணமில்லாததால்,
இவனை விரும்பும் ஏழைப் பெண் துளசியால்
அப்பொழுது என்ன செய்ய முடியும், Joher டியர்?
அதுவும் யாருமே அவரை எதிர்க்க துணியாதபொழுது,
மேகநாதன் வைத்ததே சட்டமாக இருக்கும் வீட்டில்,
ஏழை துளசியின் சொல் அம்பலம் ஏறுமா-ங்கிறதை
திருநீர்வண்ணன் மறந்துட்டான்
சரி, நமக்கு விதிச்சது இவ்வளவு=தான்-னு
மனதை தேற்றிக் கொண்டு, துளசியுடன்
வாழத் தொடங்கி விட்டான்
(அவள் முகம் பார்க்காதது அவளுக்கு இவன்
கொடுக்கும் தண்டனையாம்)
கூமுட்டை திரு இப்படி நினைச்சால்,
அதுக்கு துளசி பொறுப்பல்லவே?
சரி, இவன்தான் இவ்வளவு அறிவாளி-ன்னு
பார்த்தால், இவனை லவ் செய்த அந்த ஷெரினா,
இவனுக்கு மேல அறிவாளியாக இருந்து,
தானா தப்புத்தப்பா ஒன்னு நினைச்சு,
இவனை டார்ச்சர் செய்தது தவறு
தற்கொலை செய்ய முயற்சித்தது, மகா தவறு
இந்த திரு இல்லாவிட்டால், வேறு ஒரு ரகுவோ
இல்லை ஒரு ஜேம்ஸோ ஒரு பீட்டரோ,
எவனையோ பார்த்து கல்யாணம் செய்து
நல்லபடி வாழாமல், கொலஸ்ட்ரால் ஓவராகி
சூசைட்-க்கு ட்ரை பண்ணினாள்
அப்புறம் அம்மா இல்லாத நிலையில், ஏழை அப்பா,
கட்டையோ, நெட்டையோ எவனோ ஒருத்தனுக்கு
கல்யாணம் செய்து வைத்தால், அவனோடு நல்லா
வாழ்ந்து பிள்ளை குட்டியோடு நல்ல முறையில்
வாழாமல், லூசுத்தனமாக திருவோடான முந்தைய
காதலை புருஷனிடம் ஷெரினா சொன்னது,
முழு முட்டாள்தனம், Joher டியர்
கண்ணைத் திறந்து கொண்டே நெருப்பில்
விழுவதற்கு சமம், Joher செல்லம்
அறியாமல் ஷெரினா செய்த தவறால்,
கணவனிடம் இம்சைப்பட்டு இறந்து போனாள்
சோ, தன்னால்-தான், தான் லவ் பண்ணியதால்-தான்,
கணவனிடம் இம்சைப்பட்டு, ஷெரினா இறந்து
போனாள்-ங்கிற குற்ற உணர்ச்சி-தான்,
திருநீர்வண்ணனுக்கு?
இதை மட்டும்-தான், நான் சொன்னேன் பா, Joher டியர்