இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின்
ஓரம் வந்தாயே செந்தேனே...
கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும்
கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே
கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே, கண்ணீரே...
உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்