தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்கு கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை.
அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர்.
தன் அம்மாவை எல்லோரின் முன்பும் அவமானப் படுத்தி விட்டதாக ராதிகா நினைத்தாள். அதனால் கோபத்தில்தான் வரவில்லை என்றாள்.
காரில் ஏறும் சமயம் ஜெய் கவனித்து விட்டு, “எங்கே ராதிகா?” என கேட்க,
“அவ வரலை.” என்றாள் வெண்ணிலா.
“போ.. போய் அவளை வரசொல்லு.” என,
இவன் ஓரண்டை இழுத்து வைப்பான். நான் போய் சமாதானம் சொல்லி கூப்பிடணும் என நினைத்தவள், கணவனை முறைத்துப் பார்க்க,
அவள் நினைப்பது அவனுக்கும் புரிந்தது. “போடி...” என்றான் மீண்டும்.
வெண்ணிலாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கணவன் சொன்னதினால் சென்றாள். அவள் சென்று ராதிகாவை அழைக்க, தோட்டத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காமாட்சிக்கு தெரியவேண்டியது இருந்தது. அதனால் மகளை போ என வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்.
**********************************************************************************************
ராதிகாவுக்கு அவர்கள் எதோ இதைப் பற்றிதான் பேசிகிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவள் அங்கிருந்து செல்லலாம் என்றால், யாரும் அங்கிருந்து நகரும் வழியைக் காணோம்.
சிறிது நேரத்தில் ஜெய் வர எல்லோரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மதிய உணவே நிறைய மீதம் இருக்க, அதோடு ஆட்களும் அதிகமென்பதால், டிபன் செய்யாமல் இன்னும் கொஞ்சம் சாதமே வைத்து, இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
இரவு அவர்கள் பகுதிக்கு வந்ததும் சந்திரன், “அப்படி என்ன வீட்டுக்கு தெரியாம நகை வாங்க வேண்டியது இருக்கு.” என மனைவியிடம் கோபப்பட...
“எல்லாத்துக்கும் நான் உங்களையே எதிர்பார்த்திட்டு இருக்க முடியுமா? எதோ இருக்க காசை சேர்த்து வச்சு வாங்கினேன் இது ஒரு குத்தமா?” என்றார் காமாக்ஷி சாதாரணமாக.
“பின்ன இல்லையா? இதையே அண்ணி பண்ணியிருந்தா நீ சும்மா இருப்பியா. பொதுவில் இருந்து காசு எடுத்து, அவங்க அகல்யாவுக்கு நகை சேர்த்திருந்தா நீ சும்மா விடுவியா?”
“நான் ராதிகா கல்யாணத்தோட சொல்லித்தான் இருப்பேன். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்சா, உங்களுக்கு சிரமமா இருக்காதுன்னு பார்த்தேன்.”
***********************************************************************************************
“இப்ப எல்லாம் உன் பேச்சு ஒருமாதிரி தான் இருக்கு. ஆமாம் அன்னைக்கு என்ன சொன்ன, குழந்தை உண்டானதும் நீ தேவையில்லையா? அதனாலதான் நான் உன்னைக் கூப்பிட வரலை சொன்ன இல்ல...”
“ஐயையோ இவன் இன்னும் மறக்கலையா... தேவையில்லாம நான் வேற வாயைக் கொடுத்தேனே... விட்டா ஒரு வழி ஆக்கிடுவானே.” என நினைத்தவள்,
“இன்னைக்கு வந்ததுல இருந்து பஞ்சாயத்துதான். முதல்ல மாமாவோட அடுத்து சின்ன அத்தையோட, இப்ப என்னோடவா?”
“இப்ப என்ன என்னைத் திட்டனுமா? திட்டுங்க.”
“காலையில வந்ததுல இருந்து டென்ஷன் தான். குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போது மனசை அமைதியா வச்சுக்கணும் சொல்வாங்க. இந்த வீட்ல அதெல்லாம் முடியாது. அதுவும் அவங்க அப்பா மாதிரி வெளிய வந்து எல்லார் கூடவும் சண்டை போடட்டும். எனக்கு என்ன?” என வெண்ணிலா ஜெய் பேச இடமே கொடுக்காமல் பொரித்து தள்ள...
எட்டி ஒரு அறை வைப்போமா என்றுதான் ஜெய் நினைத்தான். ஆனால் அவள் குழந்தையை நினைவூட்டவும், வயிற்ருக்குள் குழந்தை இருக்கும் போது நல்ல விஷயங்களை கேட்பது, செய்வது எல்லாமே குழந்தையின் மன ஆரோக்யத்திற்கு நல்லது என்பதை அவனும் அறிவான். அதனால் மேற்கொண்டு சண்டையிடாமல் மனைவி படுக்க இடம் விட்டு நகர்ந்து படுத்துக்கொண்டான்.
அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர்.
தன் அம்மாவை எல்லோரின் முன்பும் அவமானப் படுத்தி விட்டதாக ராதிகா நினைத்தாள். அதனால் கோபத்தில்தான் வரவில்லை என்றாள்.
காரில் ஏறும் சமயம் ஜெய் கவனித்து விட்டு, “எங்கே ராதிகா?” என கேட்க,
“அவ வரலை.” என்றாள் வெண்ணிலா.
“போ.. போய் அவளை வரசொல்லு.” என,
இவன் ஓரண்டை இழுத்து வைப்பான். நான் போய் சமாதானம் சொல்லி கூப்பிடணும் என நினைத்தவள், கணவனை முறைத்துப் பார்க்க,
அவள் நினைப்பது அவனுக்கும் புரிந்தது. “போடி...” என்றான் மீண்டும்.
வெண்ணிலாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கணவன் சொன்னதினால் சென்றாள். அவள் சென்று ராதிகாவை அழைக்க, தோட்டத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காமாட்சிக்கு தெரியவேண்டியது இருந்தது. அதனால் மகளை போ என வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்.
**********************************************************************************************
ராதிகாவுக்கு அவர்கள் எதோ இதைப் பற்றிதான் பேசிகிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவள் அங்கிருந்து செல்லலாம் என்றால், யாரும் அங்கிருந்து நகரும் வழியைக் காணோம்.
சிறிது நேரத்தில் ஜெய் வர எல்லோரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மதிய உணவே நிறைய மீதம் இருக்க, அதோடு ஆட்களும் அதிகமென்பதால், டிபன் செய்யாமல் இன்னும் கொஞ்சம் சாதமே வைத்து, இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
இரவு அவர்கள் பகுதிக்கு வந்ததும் சந்திரன், “அப்படி என்ன வீட்டுக்கு தெரியாம நகை வாங்க வேண்டியது இருக்கு.” என மனைவியிடம் கோபப்பட...
“எல்லாத்துக்கும் நான் உங்களையே எதிர்பார்த்திட்டு இருக்க முடியுமா? எதோ இருக்க காசை சேர்த்து வச்சு வாங்கினேன் இது ஒரு குத்தமா?” என்றார் காமாக்ஷி சாதாரணமாக.
“பின்ன இல்லையா? இதையே அண்ணி பண்ணியிருந்தா நீ சும்மா இருப்பியா. பொதுவில் இருந்து காசு எடுத்து, அவங்க அகல்யாவுக்கு நகை சேர்த்திருந்தா நீ சும்மா விடுவியா?”
“நான் ராதிகா கல்யாணத்தோட சொல்லித்தான் இருப்பேன். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்சா, உங்களுக்கு சிரமமா இருக்காதுன்னு பார்த்தேன்.”
***********************************************************************************************
“இப்ப எல்லாம் உன் பேச்சு ஒருமாதிரி தான் இருக்கு. ஆமாம் அன்னைக்கு என்ன சொன்ன, குழந்தை உண்டானதும் நீ தேவையில்லையா? அதனாலதான் நான் உன்னைக் கூப்பிட வரலை சொன்ன இல்ல...”
“ஐயையோ இவன் இன்னும் மறக்கலையா... தேவையில்லாம நான் வேற வாயைக் கொடுத்தேனே... விட்டா ஒரு வழி ஆக்கிடுவானே.” என நினைத்தவள்,
“இன்னைக்கு வந்ததுல இருந்து பஞ்சாயத்துதான். முதல்ல மாமாவோட அடுத்து சின்ன அத்தையோட, இப்ப என்னோடவா?”
“இப்ப என்ன என்னைத் திட்டனுமா? திட்டுங்க.”
“காலையில வந்ததுல இருந்து டென்ஷன் தான். குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போது மனசை அமைதியா வச்சுக்கணும் சொல்வாங்க. இந்த வீட்ல அதெல்லாம் முடியாது. அதுவும் அவங்க அப்பா மாதிரி வெளிய வந்து எல்லார் கூடவும் சண்டை போடட்டும். எனக்கு என்ன?” என வெண்ணிலா ஜெய் பேச இடமே கொடுக்காமல் பொரித்து தள்ள...
எட்டி ஒரு அறை வைப்போமா என்றுதான் ஜெய் நினைத்தான். ஆனால் அவள் குழந்தையை நினைவூட்டவும், வயிற்ருக்குள் குழந்தை இருக்கும் போது நல்ல விஷயங்களை கேட்பது, செய்வது எல்லாமே குழந்தையின் மன ஆரோக்யத்திற்கு நல்லது என்பதை அவனும் அறிவான். அதனால் மேற்கொண்டு சண்டையிடாமல் மனைவி படுக்க இடம் விட்டு நகர்ந்து படுத்துக்கொண்டான்.