அவ தோப்புகரணம் போட சொன்னது கண்டிப்பா தப்பில்லை அக்கா.. அது தான் உரிமை.. அம்மாவா இருந்தா இப்படி பேசுவியான்னு கேட்க.மாட்டாங்களா... என்ன அதுக்கு அப்புறம் தான் சொதப்பிட்டா... அவன் முடுச்சதும் அதுக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்..
ஜதி வீட்டு ஆளுங்களுக்கு இன்னமும் அவன் மாப்பிள்ளை ங்கற நினைப்பே வரல... அவனோட உயரமும் அந்த பகுதியில அவனுக்கு இருக்கற மரியாதையும் அவங்கள அவனை நெருங்க விடமாட்டிங்குது.. அதோட ஜதி விசயத்துல வார்த்தைய விட்டுட்டு எப்படி போய் சகஜமா பேசுவாங்க..
எப்படியாவது பொண்ணு அவன்கூட.இருக்கா போதும்... நம்ம போய் பேசி பழசை நியாபகபடுத்தி வீட்டுக்கு பொண்ணை அனுப்பிட்டா ன்னு இருக்காங்க...
மருது பேசினதுக்கு அம்மாவா இருந்தால் அன்பா இதமா பதமா இப்படி சொல்லக் கூடாதுன்னு அனுசரணையா பேசியிருப்பாங்க
எந்த அம்மாவும் நூறு தோப்புக்கரணம் போட்டே ஆகணும்ன்னு கட்டாயப்படுத்த மாட்டாங்க, ரியா டியர்
அவன் போட்டு முடிச்சதும் சொதப்பிட்டோம்ன்னு தோணுற புத்தி முன்னாடி புல் மேயப் போனதா?
ஜெயந்தியின் பெற்றோர் மருதுவை மாப்பிள்ளையாக எப்போ நினைப்பாங்க?
அவளுக்கு கிழவி வயதான பிறகா?
மருதுவை நெருங்க முடியலையா?
என்னப்பா காமெடியா இருக்கு?
ஒண்ணுமேயில்லாட்டியும் கோபாலனுக்கு குசும்பு இல்லாமலா இருக்கு?
மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் பேசினால் எவனுக்கும் ரோஷம்தான் வரும்
அதுவும் இவன் ஒரே ஒரு மாப்பிள்ளை
பொண்ணு நல்லா வாழணும்ன்னா அனுசரிச்சுத்தான் போகணும்
வாய் இருக்க மாட்டாமல் கோபாலன் பேசின பேச்சுக்கு மருதுவின் காலில் விழுந்தால் கூட தப்பில்லை