பாவம் மருது, மாமனாரின் வார்த்தைகள் அவனின் மனதை பதம்பார்த்துவிட்டது. நான் யாருமற்றவனா? அனாதையா? என்ற தவிப்பு அவனுள்...
ராஜா மாதிரி ராஜாங்கம் பண்ணிய இடத்தில் நாலு பேருக்கு முன் தனக்கு தலையிறக்கமாக போய்விட்டதே என்ற அடக்க முடியாத கோபம் அவனுள்...
தன்னை வீட்டை விட்டு போ என்று சொல்லிவிட்டானே என்ற தவிப்பு ஜதியிடம். போன்னு சொன்னால் அம்மா வீட்டுக்கு தான் போணுமா? நான் மாட்டேன் என்ற பிடிவாதம் மனதில்...
அவனுடைய வாய் நீ வேண்டாம் எனக்கு என்று சொல்லுது ஆனால் மனது?
எப்படியோ ஜதி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறா.
மறுப்பு, மறுதலிப்பு எப்படி இருக்கும் என்று அவனுக்கும் டிரையல் காண்பித்து விட்டாள் ஜதி.
மூடிய கதவிற்கு முன்னே மருது, பின்னே ஜதி. கதவு மூடியிருக்கலாம் ஆனால் உள்ளங்கள் இரண்டும் தன் இணையின் அனுசரணைக்காக தவிப்பில் காத்திருக்கிறது...
"உள்ளத்தை மறைத்தேன்
உயிர் வலி பொறுத்தேனே
சுயத்தை எதுவோ
சுட்டதடி வந்தேன்..."