Super fathi..
நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவள்...
இன்னும் அதை நம்பியே வாழ்பவர்கள்..
ஆனால் எங்க ஊர் நிலைமை சொல்றேன்...பாதி ஆண்கள் ஊரில் இல்லை....
பெண்கள் விவசாயம் பார்ப்பாங்க..
ஆண்கள் துபாய்....இல்லை ...வண்டி ஓட்ட வெளி மாநிலம்..
என்று போய்டுவாங்க...
ஏனென்றால் விவசாயம் மட்டும் செய்து ஏழ்மையிலே வாழ முடியாமல்....அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தவங்க...
நடிகர் மகன் ஈசியா நடிகர் ஆவான்..
அது மாதிரி தான் மற்ற துறையும்..
ஆனால் விவசாயி மகன் விவசாயி ஆக வேண்டாம் என்பது பலபேரின் எண்ணம்..
தனி மனிதர்கள் எவ்ளோ செய்ய முடியும் தெரியல... விவசாயம் தான் முக்கியம்னு அதை அரசாங்க வேலையா மாற்றும் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என்பதே எனது கனவு....
உன்னை மாதிரி அதை பற்றி அனுபவம் இல்லாதவர்கள் கூட அதைப்பற்றிய நல்ல சிந்தனை...உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு..நிறைய இளைஞர்கள் கிட்ட விழிப்புணர்வும் வருது...நிறைய பேர் இதை பற்றி விவாதம் செய்றாங்க....
முக்கியமா விவசாயிடா என்று மிக பெறுமையாக சொல்லும் காலம் விரைவில்...
நன்றி fathi...
நானும் வரேன்...நீ செய்யனும் நினைப்பதில் என்னையும் சேர்த்துக்க.
அம்மா மணிமேகலை......
விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தால் அதோட வலியும் வேதனையும் தெரியும்.......
இப்போ நானும் சென்னை தான்......
நீங்கள் இயற்கைனு சொல்றீங்களே....... அதை முழுக்க முழுக்க அனுபவித்தவர்களில் நானும் ஒருத்தி.......
அரிசி, உளுந்து, தேங்காய், வாழை, கிழங்கு, பனங்கிழங்கு, உள்ளி, கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், புடலை, முருங்கை, மா, பலா, அவல், கருப்பட்டி.......
வீடு பால், கோழி, ஆடு....... இப்படி எல்லாவற்றையும் அனுபவித்தேன்......
50 அடி நீள மாடு தொழுவம் bike parking க்கும் விறகு தேவையற்ற பொருட்களை போடும் இடமாகவும் மாறிவிட்டது........
Brothers ரெண்டு பேரும் ஊரில் கிடையாது....... அப்பா அம்மா தென்னைகளை மட்டும் பராமரித்து வருகிறார்கள்........ 1997ல் வெட்டிய கிணறு....... தண்ணீரில்லாமல் 2017 மேயில் இன்னும் ஆளப்படுத்தினோம்........ அப்போதும் அடிக்க தண்ணீர் கிடையாது.... ஏதோ மழை பெய்ததால் தப்பினோம்.......
ஆனால் இப்போது தேங்காய் மட்டும் தான்........ அதனால் தேங்காய் எண்ணெய் மட்டும் கிடைக்கிறது........
கூலிக்கு ஆள் கிடையாது....... இதை எல்லாம் பார்த்தால் நெல் பயிரடவே தோணாது.......
பிள்ளைகளுக்கும் இது வேணுமா என்று யோசிக்க தோணும்......
இருந்த மாட்டை எல்லாம் வைக்கோல் இல்லாததால் விற்கும் நிலைமை......
நிஜமாக சொல்வதென்றால் நெல் பயிருடுவது அதிக லாபம் கிடையாது...... ஆனால் நம் வீட்டிற்கும் சரி..... யாருக்கும் கொடுப்பதென்றாலும் அரிசி தேங்காய் தாராளமாக இருக்கும்....... பண தேவைக்கும் உடனே நெல்லை விற்று கொள்ளலாம்..... அந்த புழுங்கல் பச்சரிசிக்கு எதுவும் ஈடு கிடையாது.......
வைக்கோல் தவிடு சாப்பிட மாடு கோழி.... எல்லாம் food chain மாதிரி தான்...... என்று நெல் பயிர் போனதோ அன்றே ஆடு மாடு கோழி எல்லாம் போய்விட்டது........ காலகொடுமை...... ஊரின் நால் புறமும் நெல் வயல் இப்போது concrete வீடுகளாக காட்சி தருகிறது........
இதை பார்த்தால் எல் லா பெற்றோருக்கும் தோணும்...... நீங்களாவது படித்து ஒரு வேளைக்கு போக பாருங்கள் என்று........
எங்கோ அல்ல...... கன்னியாகுமாரி மாவட்டத்தில் தான்.......