Emai Aalaum Nirantharaa 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முதலில் காதல் சொன்னது சைந்தவி .....கல்யாணம் பண்ண கேட்டது அவள் ....பிறகு
பிரிந்து போகிறதா சொன்னதும் அவ தான் .....விஜயன் அவ சொன்னதுக்கு எல்லாம் தலையை
ஆட்டி அவளை ஏத்துக்கிட்டான் .....கல்யாணமாகாத அக்கா இருக்கிறப்போ கூட ...
ஆகா என்ன ஒரு பெருந்தன்மை .....பிரிந்து போனவ அம்மா வீட்டுல இருக்காளா இல்லையானு
கூட தெரியலை .... மூணு வருஷமா தனியா தான் இருக்கிறான்னு இப்போ தான் தெரியுது ....
பல நினைவுகள் பல ஏக்கங்கள் அவன் மனதோடு இருந்தா என்ன ...... கணவனா இல்லை
ஒரு சகமனிதனா இருக்க வேண்டிய அக்கறை கூட அவ மேல இல்லை .....
இப்போ சொல் செயல் இழந்து நின்னா சரியாகி விடுமா ..... அவ பிரிந்து போனதற்கு
காரணம் உப்பு சப்பில்லாததா கூட இருக்கட்டுமே ..... அது என்னனு விஜயனுக்கு தெரியுமா ......
இந்த மூணு வருஷத்துல தெரிந்துக்க முயற்சி எடுத்தானா....யோசிக்காம விட்ட வார்த்தைகளை
திரும்ப அள்ள முடியுமா ......இப்படி பட்ட ஆண்களை பிடிக்கிறதே இல்லை....
Interesting Episode ...
Thankyou very much.Mallika :):):)
Arumai vegu arumai SundaramUma dear
Enakkum Vijayan meethu avvalavu kobam paa
 

sindu

Well-Known Member
சுட்டுவிடும் வார்த்தைகள்
சுக்கிரனாய் ஆனதற்கு
கேட்டுவிட்டாய் இன்று ....


சூழல்களில் சுழலவிட்டுவிட்ட
வாழ்க்கை
சுற்றமில்லை, சொந்தமில்லை....


காயக்காப்புகள் உன்னால் அடைந்தாலும்
காயாத பாசத்தை
தேக்கி வைத்திருக்கும் தமையன்...


விவாகம் மட்டுமே
நிர்ணயப்பதில்லை விதியை
விளையாடி பார்க்கப்போகிறேன்
விரிசல்களோடு ....


விளையாட்டாய் நின்றவன் அன்று
விவேகமாய் விசாரணையில் ....
.
நிமிர்ந்த கண்களில் நிம்மதியில்லை(இருவருக்கும் )
நிதர்சனகள் புரியும் போது


இறந்த வாழ்க்கையென்றால்
இளைப்பாறுதல் இருக்காது
இது மறந்த வாழ்க்கை
மறுவாழ்வுக்கு மார்க்கமிருக்கோமோ....


விடை தெரியா கணக்குகள்
விடைத்தாளில்
விளக்கங்கள் அறியாமல்
விடையெழுதப்பட்டதோ !


வரையரை இல்லாத வகைகளுடன்
முற்று பெறாத வரைபடம் உலகில் காதல் மட்டுமே!
superb :)
 

sindu

Well-Known Member
மூன்று வருடமாக தனியாக இருக்கிறாள்
ஆனால் இரண்டு வருடமாக தான் வேலை பார்க்கிறாள்

அப்போ படிக்கும் போதே திருமணமா ???
படிக்கும் போது பிரிந்த பின் பிரிதிவி தான் உதவி புரிந்தானா???

அப்போ கல்யாணம் முடிந்து அவனோடு இருந்தது சில மாதங்கள் ???
படிக்கும் போதே திருமணத்திற்கு என்ன அவசரம்???
அவங்க அம்மா எதாவது மாப்பிள்ளை பார்த்தாரா ????
அதான் அம்மாவிற்கு இவ்வ்ளோ கோபமா ???

காதல் கல்யாணம் .... ஆனால் திருமணத்திற்கு முன் அவன் வசதி வாய்ப்பு அவளுக்கு தெரியாது ....???
ஏன் Vijay எதையும் அவளிடம் பகிர்ந்தது இல்லையா அல்லது அவ்வ்ளோ அவசர கல்யாணமா ???

பிரச்சனை பிறருக்கு பிரச்சனையாக தெரியாது ...
அவளின் பிறர் தன் பொருளை தொடுவதை ஏற்க முடிய குணம் காரணமா ???

விஜய் நீ அம்மா அப்பாவிற்கும் நல்ல பையன் இல்லை (விஜய் அக்கா இருக்கும் போது உனக்கு என்ன திருமணத்திற்ற்கு அவ்வ்ளோ அவசரம் )
கை பிடித்தவளுக்கும் நல்ல கணவன் இல்லை ... (அவள் மூன்று வருடமா எங்க இருக்கிறாள் என்று கூடவா தெரியாது )

இந்த கேள்விகளுக்கு விடைகளுடன் வரும் உங்கள் பதிவிற்காக ஆவலுடன் waiting Malli :) ......
 

malar02

Well-Known Member
மூன்று வருடமாக தனியாக இருக்கிறாள்
ஆனால் இரண்டு வருடமாக தான் வேலை பார்க்கிறாள்

அப்போ படிக்கும் போதே திருமணமா ???
படிக்கும் போது பிரிந்த பின் பிரிதிவி தான் உதவி புரிந்தானா???

அப்போ கல்யாணம் முடிந்து அவனோடு இருந்தது சில மாதங்கள் ???
படிக்கும் போதே திருமணத்திற்கு என்ன அவசரம்???
அவங்க அம்மா எதாவது மாப்பிள்ளை பார்த்தாரா ????
அதான் அம்மாவிற்கு இவ்வ்ளோ கோபமா ???

காதல் கல்யாணம் .... ஆனால் திருமணத்திற்கு முன் அவன் வசதி வாய்ப்பு அவளுக்கு தெரியாது ....???
ஏன் Vijay எதையும் அவளிடம் பகிர்ந்தது இல்லையா அல்லது அவ்வ்ளோ அவசர கல்யாணமா ???

பிரச்சனை பிறருக்கு பிரச்சனையாக தெரியாது ...
அவளின் பிறர் தன் பொருளை தொடுவதை ஏற்க முடிய குணம் காரணமா ???

விஜய் நீ அம்மா அப்பாவிற்கும் நல்ல பையன் இல்லை (விஜய் அக்கா இருக்கும் போது உனக்கு என்ன திருமணத்திற்ற்கு அவ்வ்ளோ அவசரம் )
கை பிடித்தவளுக்கும் நல்ல கணவன் இல்லை ... (அவள் மூன்று வருடமா எங்க இருக்கிறாள் என்று கூடவா தெரியாது )

இந்த கேள்விகளுக்கு விடைகளுடன் வரும் உங்கள் பதிவிற்காக ஆவலுடன் waiting Malli :) ......
yes விஜய்யின் மேல் உள்ளவையில் அர்த்தமிருக்கிறது
 

Adhirith

Well-Known Member
மூன்று வருடமாக தனியாக இருக்கிறாள்
ஆனால் இரண்டு வருடமாக தான் வேலை பார்க்கிறாள்

அப்போ படிக்கும் போதே திருமணமா ???
படிக்கும் போது பிரிந்த பின் பிரிதிவி தான் உதவி புரிந்தானா???

அப்போ கல்யாணம் முடிந்து அவனோடு இருந்தது சில மாதங்கள் ???
படிக்கும் போதே திருமணத்திற்கு என்ன அவசரம்???
அவங்க அம்மா எதாவது மாப்பிள்ளை பார்த்தாரா ????
அதான் அம்மாவிற்கு இவ்வ்ளோ கோபமா ???

காதல் கல்யாணம் .... ஆனால் திருமணத்திற்கு முன் அவன் வசதி வாய்ப்பு அவளுக்கு தெரியாது ....???
ஏன் Vijay எதையும் அவளிடம் பகிர்ந்தது இல்லையா அல்லது அவ்வ்ளோ அவசர கல்யாணமா ???

பிரச்சனை பிறருக்கு பிரச்சனையாக தெரியாது ...
அவளின் பிறர் தன் பொருளை தொடுவதை ஏற்க முடிய குணம் காரணமா ???

விஜய் நீ அம்மா அப்பாவிற்கும் நல்ல பையன் இல்லை (விஜய் அக்கா இருக்கும் போது உனக்கு என்ன திருமணத்திற்ற்கு அவ்வ்ளோ அவசரம் )
கை பிடித்தவளுக்கும் நல்ல கணவன் இல்லை ... (அவள் மூன்று வருடமா எங்க இருக்கிறாள் என்று கூடவா தெரியாது )

இந்த கேள்விகளுக்கு விடைகளுடன் வரும் உங்கள் பதிவிற்காக ஆவலுடன் waiting Malli :) ......

நல்ல பையனாக இருக்கப் போய்தான்,
தனிக்குடித்தன யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கிறான் ...

அவன் நல்ல கணவனோ இல்லையோ,
அவள் நல்ல மனைவியாக இருந்தாளா...?:eek::oops::rolleyes:
 

sindu

Well-Known Member
நல்ல பையனாக இருக்கப் போய்தான்,
தனிக்குடித்தன யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கிறான் ...

அவன் நல்ல கணவனோ இல்லையோ,
அவள் நல்ல மனைவியாக இருந்தாளா...?:eek::oops::rolleyes:
நல்ல பையன் என்றால் அக்கா இருக்கும் போது கல்யாணம்...
நிச்சயமா அவன் பெற்றோர் மனதை பாதிக்கும் செயல் தானே அது .....

அவள் ஏதோ உப்பு சப்பு இல்லாத காரணத்திற்கு தான் விட்டு விட்டு வந்து விட்டால் போல இருக்கு ...
தன் கஷ்டம் என்ன என அவனுக்கு புரிய வைக்காமல் வெளியே வந்ததும் தப்பு தான்

ரெண்டு பக்கமும் தப்பு இருக்கும் போல் தான் தெரியுது
அவசர அவசரமா இருபதின் தொடக்கத்தில் கல்யாணம்
அதே வேகத்தில் பிரிவு
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...

சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது
அதனால் தானா பாத்தி பெண்கள் தங்கள் காதலை சொல்றதே இல்லையோ?...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top