murugesanlaxmi
Well-Known Member
அருமை சகோதரி சூப்பர்என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்