Very nice epiஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7473
வாசனின் வாசுகி 28
View attachment 7474
அநேகமாக அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயமாக இருக்கும். Epilogue இருக்கு
பின்னே கல்யாணமும் பண்ணிட்டு கோவிச்சிக்கிட்டு அவள் பாட்டுக்கு மந்த்ரா நடந்தால் ரோஹன் பாவம் என்ன பண்ணுவான்?Nice update
இந்த பூர்ணா பண்ணதுனால குருமூர்த்தி, அபர்ணா ரெண்டு பேரோட வாழ்க்கையே இல்லாம போயிருச்சு... ராஜேந்திரன் மாதிரி நல்லவங்க கையில அபர்ணா கிடைச்சதுனால பெருசா ஒண்ணும் நடக்கல... இதுவே வேற கெட்டவங்க யார் கையிலவாது கிடைச்சு இருந்தா...
அம்மாவும் பொண்ணும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க... வாசன் அபர்ணா விஷயத்துல நல்ல முடிவு எடுத்தான்... இவ்வளவு ரணகளத்திலும் ரோஹனுக்கு குதூகலம் கேக்குதோ..
நன்றி டியர்
நன்றி டியர்
அபர்னாவுடைய வாழ்க்கை சரித்திரத்த சரியா எழுத்திருக்கிறேன்னு உங்க cmnt பார்த்த பிறகு திருப்தியா இருக்கு.அபர்ணா, குருமூர்த்திக்கு இடையே பூர்ணா வராமல் இருந்திருந்தால்,குரு, அபர்ணாவிடம் தன் காதலை சொல்லி கல்யாணமும் நடந்திருக்கலாம்.
தன்னை காதலித்து விட்டு,வேறு ஒருவனை திருமணம் செய்தால் என கோபத்தில் அபர்ணாவை கடத்தியவன்,மனநலம் பாதிக்கப்பட்டவன் விபத்து ஏற்பட போவதை தெரிந்து அபர்ணாவை காப்பாற்றி விட்டு தன் உயிரையும் விட்டு விட்டான்.ஆனால் பூர்ணா அக்கா வாழ்வில் கூட இருந்தே குழி பறித்து விட்டாள்.
அக்கா ஓடி விட்டாள் என தங்கையை மணந்த நாதன்,அபர்ணா கடத்தப்பட்டதும்,எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்பி வந்தது தெரிந்து கொண்டு,பூர்ணா தான் இதற்க்கு காரணம் என தெரிந்து அவளை விட்டு,அபர்ணாவுடன் வாழ நினைக்கிறானே,மனிதனா இவன்.
தன் நினைவின்றி யார் என தெரியாத பெண்ணை இத்தனை வருடங்களாக பார்த்துக்கொண்ட சரளா, ராஜேந்திரன், அம்முவுக்காக எதுவும் செய்யும் ரோஹனும் பாராட்டுக்குரியவர்கள்.
வாசுகிக்கு அவள் அம்மா கிடைத்து விட்டாள்.ஆனால் ரோஹன், மந்த்ராவின் கோபத்தில் இருந்து தப்புவானா.அருமையான பதிவு மிலா.