அபர்ணா, குருமூர்த்திக்கு இடையே பூர்ணா வராமல் இருந்திருந்தால்,குரு, அபர்ணாவிடம் தன் காதலை சொல்லி கல்யாணமும் நடந்திருக்கலாம்
.
தன்னை காதலித்து விட்டு,வேறு ஒருவனை திருமணம் செய்தால் என கோபத்தில் அபர்ணாவை கடத்தியவன்,மனநலம் பாதிக்கப்பட்டவன் விபத்து ஏற்பட போவதை தெரிந்து அபர்ணாவை காப்பாற்றி விட்டு தன் உயிரையும் விட்டு விட்டான்
.ஆனால் பூர்ணா அக்கா வாழ்வில் கூட இருந்தே குழி பறித்து விட்டாள்
.
அக்கா ஓடி விட்டாள் என தங்கையை மணந்த நாதன்,அபர்ணா கடத்தப்பட்டதும்,எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்பி வந்தது தெரிந்து கொண்டு,பூர்ணா தான் இதற்க்கு காரணம் என தெரிந்து அவளை விட்டு,அபர்ணாவுடன் வாழ நினைக்கிறானே,மனிதனா இவன்
.
தன் நினைவின்றி யார் என தெரியாத பெண்ணை இத்தனை வருடங்களாக பார்த்துக்கொண்ட சரளா, ராஜேந்திரன், அம்முவுக்காக எதுவும் செய்யும் ரோஹனும் பாராட்டுக்குரியவர்கள்
.
வாசுகிக்கு அவள் அம்மா கிடைத்து விட்டாள்
.ஆனால் ரோஹன், மந்த்ராவின் கோபத்தில் இருந்து தப்புவானா
.அருமையான பதிவு மிலா
.