என்னவென்று சொல்ல? எங்கள் ஹீரோவே எதற்காக இந்த கல்யாணம் என்று தெரிந்து செய்திருந்தாலும்,இப்போது அப்படி இல்லை அவன் அவளை உண்மையாக காதலிக்கிறான்.அவளுக்காக அவள் விருப்பங்களை நிறைவேற்றும் அளவுக்கு.
மலர் நடந்ததை எல்லாம் புரிந்து கொண்டு,தற்போதைய உண்மை நிலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவனது மிகப் பெரிய சாம்ராஜ்யம், தந்தை இறந்து சிறுவயதில் மிகப்பெரிய பொறுப்பை சுமப்பது அவ்வளவு எளிது அல்ல.அவன் நினைத்திருந்தால் அவள் தந்தையை சந்தித்து அதனை அவன் வழியிலேயே டீல் செய்யும் தைரியம் அவனுக்கு உண்டு.
ஆனால் அவன் மனதில் அவளுடைய தைரியமான பேச்சு என ஏதோ ஒன்று அவனுக்கு பிடித்தமானதாக இருப்பதால் தான் அவன் தன் வாழ்வின் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.
இதுவும் கடந்து போகும் என நினைப்போம்.
நல்ல பதிவு.