நேச நதி -15

Advertisement

உதயா

Well-Known Member
அன்னைக்கு என்ன‌ நடந்துச்சு என்று தெரிஞ்சா தான் யார் சரின்னு சொல்ல முடியும்.
விஜய் நீங்கள் சேர்ந்து வாழ்ந்துட்டு தான் கல்யாணம் செய்து இருக்கீங்க அப்போ அவளை கண்டுபிடிக்க வேண்டிய தான அதுவும் கஷ்டமான வேலை இல்லை ரமணனை ரகசியமாக கண்காணித்திருந்தாளே பாவனா கண்டுபிடிச்சிருக்கலாம் . அவர்‌ பாவனா பார்க்க போகும் போது கண்டு பிடிச்சிருக்கலாம். வழி இருந்தும் நீதான் கோவத்தில் விட்டுட்ட.

பாவனாவுக்கு விஜய் தான் தனக்காக எல்லாம் செய்யணும் என்கிற எண்ணம் அவனுக்காக இவள் எதுவுமே செய்ய மாட்டாள். அன்னைக்கு விஜய் இவளோட காதலை ஏத்துக்காது விலகி போனவனை இப்படி தான் குத்தி காட்டி பேசினாள். ஆம்பளையான்னு எல்லாம் கேட்டு மட்டம் தட்டி பேசி அவனை தூண்டி விட்டு தனக்கு சாதகமா பதில் சொல்ல வைத்தாள் இப்போது அவன் கிட்ட சொல்லாமல் பிரிஞ்சு வந்து அவன் குழந்தை பத்தி கூட அவன்கிட்ட சொல்லாமல் இருந்துட்டு அவன் வந்து கேட்கும் போது திமிரா பதில் சொல்லுற.
பாவனா உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரமணனை இன்னும் நீ விட்டு கொடுக்கல அவரோட ஆதரவில் தான் வாழ்ந்துகிட்டு இருக்க ஆனால் தன்னை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி சமூகத்தில் நல்ல அந்தஸ்து கொடுத்த அவனோட அப்பா அம்மாவை எப்படி விட்டு கொடுப்பான். நீ கொஞ்சம் யோசிக்கலாம் தப்பு செய்த பெத்தவங்களையே உன்னால் விட முடியாத போது விஜய்யால் மட்டும் எப்படி முடியும்.
அன்னைக்கு விஜய் வர வரைக்கும் சென்னையில் இருந்து இருக்கலாம் .‌காதலிச்சது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் இரண்டு பேரும் சேர்ந்து செய்துட்டு பிரிவை மட்டும் நீயே முடிவு செய்யலாமா.

ஆழினிக்கு அவ அப்பா யாரு என்று சொல்லாமல் வளர்க்கிறது அவளுக்கு நீ பண்ற துரோகம். உனக்கு என்ன நடந்ததோ அதை விட மோசமாக அல்லவா உன்னோட பொண்ணுக்கு நடக்கும். உனக்காவது உன்னோட அம்மா அப்பா வாழ்க்கை மட்டும் தான் பிரச்சினை ஆனால் ஆழினிக்கு பாட்டி அம்மா என்று அவளோட தலைமுறையே பொண்ணுங்க தப்பான வாழ்க்கை தான் வாழ்வாங்க என்கிற அடையாளம் தான் கிடைக்கும். அதை உன்னால் கடந்து வர முடியுமா . உன்னை பத்தி தப்பாக பேசுறதையே உன்னால் தாங்க முடியல நாளைக்கு உன் பொண்ணை பத்தி பேசினால் எதிர்த்து நிக்க முடியுமா. விஜய்யை பழிவாங்க இந்த அளவுக்கு தரம் இறங்கி போயிருக்க வேண்டாம். ஆரம்பத்தில் இருந்தே பாவனா விஜய் அவன் குடும்பத்தை பத்தி யோசிக்கிற இடத்தில் எல்லாம் அவனை மட்டம் தட்டி பேசுகிறாள். அதுவே குடும்பத்தை எல்லாம் மறந்து இவ கூடவே இருந்தால் சந்தோஷபடுகிறாள். அவளுக்காக விஜய் அவனோட குடும்பத்தை விட்டுட்டு வரணும் என்கிற எண்ணம் தான் அதிகமாக இருக்கு.
ரமணனோட நிழலில் எப்படி உன்னால் உன் குழந்தை வளர்க்க முடியுது ரமணனை விட விஜய் அவ்வளவு மோசம் இல்லை.
விஜய் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும் உன்னோட குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உரிமையையும் அங்கீகாரத்தையும் வாங்கி கொடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு. இப்போது திமிராக உன்னோட குழந்தை தனியாக வளர்க்கிற விஜயும் நீ வேண்டாம் என்று முடிவு எடுத்து வேற கல்யாணத்தை செய்துகிட்டா அவனை உலகம் ஒன்னும் சொல்லாது ஆனால் நீயும் ஆழினியும் மட்டும் தான் சிலுவை சுமக்கணும். ஷைலஜா உனக்கு செய்ததை நீ ஆழினிக்கு செய்யுற. ஷைலஜாவாவது ஒரு மோசமானவனுடன் வாழ்ந்தாங்க உனக்கு அங்கீகாரம் வாங்கி கொடுக்க முடியல ஆனால் உனக்கு அந்த நிலைமை இல்ல பிறகு ஏன் இப்படி ஒரு முடிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top