நீயாக நான், நானாக நீ 5

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: இதோ அடுத்த எபி போட்டாச்சு...:):):) முதல் தடவை சமைக்குறவங்களுக்கு ஏத்த டிஷ் ஒன்னு இந்த எபில இருக்கு...;););) படிச்சுட்டு மறக்காம அதையும் ட்ரை பண்ணி பாருங்க...:giggle::giggle::giggle:

eiZ0GMI7216.jpg

அத்தியாயம் 5

வீட்டிற்கு திரும்பிய பின்னரும் ஆகாஷும் பூமியும் யோசனையிலேயே இருந்தனர். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பூமிக்கு பசியெடுக்க, “டேய் கருவாயா இன்னைக்கு காலைல என்ன சமைச்ச…” என்று ஆகாஷிடம் கேட்டாள்.

‘அடிப்பாவி க்ளோபு… இன்னைக்கு காலைலயிருந்து உங்கூட தான் சுத்திட்டு இருக்கேன்… எவ்ளோ கொழுப்பிருந்தா என்ன சமைச்சுருக்கன்னு கேப்ப… இருடி என் அத்தை பெத்த உருண்ட…’ என்று மனதிற்குள் அவளைத் திட்டியவன், “மேடம், இன்னிக்கு மார்னிங்லயிருந்து நான் உங்க கூட தான் சுத்துறேன்… அது நியாபகம் இருக்கா…” என்றான்.

“ஓ ஆமால… சரி சரி… இப்போ போய் சீக்கிரம் சமைச்சு எடுத்துட்டு வா… எனக்கு பசிக்குது…”

“ஓய் என்னால சமைக்க முடியாது… இந்த லாக்டவுன் பீரியட்ல நீ.. அதாவது நானா இருக்க நீ தான் சமைக்கணும்…”

“என்னாது லாக்டவுனா…”

“ஆமா… நீ என் உடம்புக்குள்ள லாக்டவுன், நான் உன் உடம்புக்குள்ள லாக்டவுன்… ப்ச் இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல… நீ சொன்ன மாதிரி எனக்கும் பசிக்குது… சோ சீக்கிரம் போய் சமைச்சு வை…”

“டேய் ஸ்கை ஹை என்ன கிண்டலா… என்னால சமைக்க முடியாது…”

“சரி உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு… உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்… ஒன்னு என் உடம்புல இருக்குற வரைக்கும் மட்டும் சமைக்கணும்… இல்லனா எப்போ நீயா மாறுறியோ, அப்போல இருந்து நீ தான் சமைக்கணும்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ் க்ளோபு…”

‘பெரிய உங்கள் சாய்ஸ்… வந்துட்டான்… இவன் சொல்ற மாதிரி சமைக்க விட்டுடுவானோ… ஹ்ம்ம் வாய்ப்பிருக்கு… இவன் அப்பாகிட்ட சொன்னா, சமைக்க கூட மாட்டியான்னு திட்டி சமைக்க வச்சுடுவாரு… இதுக்கு இவன் சொன்ன ஃபர்ஸ்ட் ஆப்ஷனே பெட்டர்…’ என்று யோசித்தவள் , “சரி சரி நானே சமைக்குறேன்… ஆனா நீ வாக்கு மாற மாட்டேல… நாம திரும்ப மாறுனதுக்கு அப்பறம் நீ தான் சமைக்கணும்…” என்றாள்.

“ம்ம்ம் அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்… இப்போ போய் மாமாக்கு சூடா சமைச்சு வை க்ளோபு…” என்றான்.

‘மாமாவாம் மாமா… இரு டா உன்ன கோமாக்கு அனுப்புற மாதிரி சமைக்குறேன்…’ என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

ஆகாஷோ, கைகளைத் தலைக்குப் பின்னே கட்டியவாறு சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, ‘இந்த உருண்ட நமக்கு பயந்துட்டாளோ… இருக்கும் இருக்கும்… இது கூட நல்லா ஜாலியா தான இருக்கு… இப்படியே இருந்துட்டா என்ன…’ என்று யோசித்தவனிற்கு, சற்று முன் மேக்-அப் செய்தது நினைவிற்கு வர, தலையை உலுக்கிக் கொண்டு, “ஃபர்ஸ்ட் நம்ம உடம்புக்கு மாறிடனும்…” என்று வாய் விட்டு கூறிக் கொண்டான்.

மேலும் கால் மணி நேரம் கடக்க, ‘இந்த வெள்ளெலி கிச்சன்ல என்ன உருட்டிட்டு இருக்கான்னு தெரியலயே…எதுக்கும் உள்ள போய் பாப்போம்…’ என்று சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“ஹே க்ளோப், மே இ கம் இன்..” என்றாவரே உள்ளே செல்ல, “ப்ச்… இப்போ எதுக்கு உள்ள வர… நான் சமைக்கும்போது யாரு டிஸ்டர்ப் பண்ணாலும் எனக்கு பிடிக்காது…” என்று பூமி கூறி, அவள் சமையலறை மேடையில் எடுத்து வைத்திருப்பதை மறைத்தவாறு நின்று கொண்டாள் .

“அப்படி என்னத்த சமைக்குற வெள்ளெலி…” என்று அவள் பின்னே பார்க்க முயல, “ஹே இப்போ எதுக்கு எட்டி எட்டி பார்க்குற… இன்னைக்கு நான் சைனீஸ் டிஷ் பண்றேன்…” என்றாள்.

‘சைனீஸ்ஸா!!! ஒரு வேள வௌவ்வால குடுத்து சாப்பிட சொல்லிருவாளோ…’ என்று சற்று பீதியுடனே, “அப்படி என்ன டிஷ் பண்றீங்க மேடம்…” என்று பூமியிடம் வினவினான்.

“ம்ம்ம் நூடுல்ஸ்…”

அப்போது அவளின் பின்னிருந்த பிரிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட் தெரிய, ‘ச்சே வௌவ்வால், பாம்புன்னு என்னமோ நெனச்சேன்… கடைசில நூடுல்ஸுக்கு தான் இவ்ளோ ‘பில்ட்-அப்’பா… ஆமா இவ வந்து ரொம்ப நேரமாச்சே… இன்னுமா நூடுல்ஸ் பண்ணிட்டு இருக்கா…’ என்று யோசித்தவன், “நூடுல்ஸ் ரெடியாகிடுச்சுன்னா எடுத்துட்டு வர வேண்டியது தான…” என்றான்.

“ஓய் என்ன கிண்டலா… இன்னும் வேகப் போடவே இல்ல…”

“அப்போ இவ்ளோ நேரம் என்ன பண்ண…?”

“ஹான் ஊற வச்சேன்…”

‘என்னாது ஊற வச்சாளா!!!’

“ஆனா இப்போ எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு… ரைஸுக்கு மூணு விசில்னு அம்மா சொல்லிருக்காங்க… அப்போ நூடுல்ஸுக்கு எத்தன விசில் வைக்கணும்…”

‘டூ மினிட்ஸ் நூடுல்ஸுக்கு விசிலா!!!’ என்று தலையில் கை வைத்துக் கொண்டான் ஆகாஷ்.

“அப்போதான் நானா ஒன்னு கண்டுபிடிச்சேன்…” என்று அவள் கூறவும், ‘போச்சு இன்னும் என்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியலையே…’ என்று பயந்து கொண்டே, “என்ன கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்.

“சின்னதா இருக்க அரிசிக்கே மூணு விசில்னா, இது நீளமா வேற இருக்கா, அதான் ஒரு பத்து விசில் வைக்கலாம்னு நெனச்சேன்…”

‘அடியேய் அத்த பெத்த அனகொன்டாவே… இத்தன நாள் கிட்சன் பக்கம் எட்டி கூட பார்த்தது இல்லயா டி நீ… இதுக்கு தான் உன்ன என் தலையில கட்ட பிளான் பண்ணியிருப்பாங்களோ…’ என்று மனதிற்குள் நினைத்தவன், “ஏன் க்ளோபு அந்த நூடுல்ஸ் பாக்கெட் பின்னாடியே செய்முறை விளக்கம் இருக்குமே, அதெல்லாம் படிக்கலையா…” என்றான்.

“ஓய் என்ன என்ன நூடுல்ஸ் கூட சமைக்க தெரியாதவன்னு நெனச்சீயா… ஊருல வந்து கேட்டுப் பாரு, என் சமையல் திறமைய பத்தி…” என்று பூமி பெருமை பேசினாள்.

‘இனி இவள இங்க விட்டு வச்சா, நூடுல்ஸ் வச்சு குழம்பு வச்சாலும் வைப்பா… எப்படியாவது பேக் பண்ணி வெளிய அனுப்பணும்…’ என்று நினைத்தவன், “சரி சரி நீ இவ்ளோ பண்ணதே போதும்… வெளிய போ…” என்றான்.

“ஹே இன்னும் வேக வைக்கவே இல்ல… என் சமையல் திறமைய பார்த்து உனக்கு பொறாமை… இதுக்கே இப்படினா, நாளைக்கு ஒரு கொரியன் டிஷ் பண்ண போறேன்…” என்று கூறினாள்.

‘இவ என்ன சாகடிக்காம விட மாட்டா போல..’ என்று பயந்தவன், “நீ ஆணியே பிடுங்க வேணாம்… வெளிய போடி…” என்று கத்தினான்.

“டேய் கருவாயா என்ன மிரட்டுற… அப்போ என்னன்னா நீ தான் சமைக்கணும்னு சொன்ன, இப்போ கிச்சன விட்டு வெளிய போன்னு சொல்ற… “ என்று அவள் எகிறவும், “அப்படி இல்ல டா பூமி, ஏற்கனவே ஊற வச்சு நீ டையர்டாகிருப்ப, அதான் நீ போய் ரெஸ்ட் எடு, மிச்சத்த நான் பார்த்துக்குறேன்…” என்று கெஞ்சி, கொஞ்சி அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.

“இவள சமைக்க சொன்னது எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு…” என்று வாய் விட்டு புலம்பியவன், அவள் ‘சமைத்ததை’ ஓரமாக வைத்துவிட்டு புதிதாக சமைக்க ஆரம்பித்தான்.

அவனின் செயல்களை ஒளிந்து நின்று பார்த்த பூமி, ‘பூமியா கொக்கா… இனி என்ன சமைக்க சொல்லுவ…’ என்று நினைத்து அவளுக்கு அவளே ஹை-ஃபை கொடுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், பூமிக்கு அவளின் அன்னை விசாலாட்சியிடமிருந்து அழைப்பு வந்தது.

அவளோ தன்னிலை மறந்து அழைப்பை ஏற்று விட்டாள். “ஹலோ…” என்று அவள் பேச, அவளிடமிருந்து வந்ததோ ஆகாஷின் குரல்.

“ஹலோ… யாரு ஆகாஷா…” என்று அன்னையின் வார்த்தைகளிலேயே உண்மை புரிந்து ஆகாஷை பார்த்து முழித்தாள்.

முதற்கட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ஆகாஷ், அழைப்பை ஸ்பீக்கரில் போட சொன்னான்.

அதற்குள் பூமியின் அன்னை, “ஆகாஷு லைன்ல இருக்கியா…” என்று இரண்டு முறை கேட்டுவிட்டார்.

ஆகாஷ் பூமியிடம் பேசுமாறு சைகை காட்ட, அவளோ தயக்கத்துடன், “ஹலோ…” என்றாள்.

“லைன் கட்டாகிடுச்சோன்னு நெனச்சேன்… ஆமா நா பூமி நம்பருக்கு தான போட்டேன்… அவ என்ன பண்றா…”

“அது… அது ம்மா…” என்று பூமி திக்க, “ஆகாஷு நல்லா தான இருக்க… நா அத்த பேசுறேன் பா…” என்று விசாலாட்சி கூறினார்.

அதைக் கேட்டதும் ஆகாஷ் தலையிலடித்துக் கொண்டான். ‘ஒழுங்கா பேசு டி…’ என்று பூமியை நோக்கி வாயசைத்தான்.

பூமி ஆகாஷை நோக்கி தம்ப்ஸ்-அப் காட்டிவிட்டு, “சாரி அத்த, ஒரு வேலைல பிஸியா இருந்தேன்…” என்று ஆகாஷ் மாதிரியே பேசினாள் பூமி.

“அச்சோ உன் வேலைய கெடுத்துட்டேனா… ஆமா அந்த கழுத என்ன பண்றா…”

அதைக் கேட்டு ஆகாஷ் சத்தமில்லாமல் சிரிக்க, பூமியோ கோபத்தில் பற்களை நரநரவென கடித்தவள், “அத்த அவள ஏன் கழுதன்னு சொல்றீங்க… அவளே பாவம் இவ்ளோ நேரம் வேலை செஞ்சு, இப்போ தான் ரெஸ்ட் எடுக்குறா…” என்றாள் பூமி. ‘அடிப்பாவி’ என்று வாய்மேல் கை வைத்து அவளைப் பார்த்தான் ஆகாஷ்.

“சரி சரி உன் வருங்கால பொண்டாட்டிய நான் ஒன்னும் சொல்லல… அவ இருந்தா போன்ன அவகிட்ட குடு…” என்றார் அவர்.

அதில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முழித்தனர். அதற்குள் அவர், “ஹலோ” என்று கூற, பூமி ஆகாஷை இடித்து பேசுமாறு கூறினாள்.

“ஹலோ.. க்கும்.. ம்மா…” என்று திக்கியவாறே பேசினான் ஆகாஷ்.

“என்ன டி… ஏதோ வேலையெல்லாம் பார்த்தீயாம்… அப்படி என்ன வேலை பார்த்த…”

என்ன சொல்வதென்று தெரியாமல், “ஹான்... அது… சமைச்சேன்…” என்று கூறினான்.

“எது சமைச்சீயா… இங்க கிச்சன் பக்கமே போக மாட்ட… நீ சமைச்சீயா…”

அப்போது, “என் சமையல் திறமைய ஊருல வந்து கேட்டுப் பாரு…” என்று பூமி கூறியது நினைவிற்கு வர அவளை நோக்கினான். அவளோ அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

தன் பதிலுக்காக அவனின் அத்தை காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், “அது மாமா சொல்லிக் குடுத்து… சமைச்சேன்…” என்று உளறினான்.

“என்னாது மாமாவா… என் பொண்ணு தான் பேசுறதா..” என்று அதிர்ச்சியுடன் அவர் கேட்க, இம்முறை தலையிலடித்தது பூமி.

“ம்மா எனக்கு வேலைக்கு நேரமாகுது…” என்று ஆகாஷ் கூற, “ஆமா இன்னும் ஏன் வேலைக்கு போகாம இருக்க…” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

‘ஐயோ விட மாட்டிங்குறாங்களே…’ என்று ஆகாஷ் மனதிற்குள் புலம்ப, ‘சிக்கிட்டான் கருவாயன்…’ என்று குதூகலத்துடன் அவர்களின் உரையாடலை கேட்கத் தயாரானாள் பூமி.

“அது வந்து… மா… அந்த கருவாயனுக்கு காய்ச்சல்… அதான் கொஞ்சம் லேட்டா போறேன்…” என்றான்.

அவன் ‘கருவாயன்’ என்று கூறியதைக் கேட்ட பூமியோ, சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே என்ன டி அவனுக்கு காய்ச்சல்னு சொல்லிட்டு வேலைக்கு கிளம்புறேன்னு சொல்ற… ஒழுங்கா லீவு போட்டு அவன பாத்துக்கோ… புள்ள இதுனால தான் ஏதோ மாதிரி பேசிருக்கான்… மதியத்துக்கு கஞ்சி வச்சு குடு…” என்று ஆரம்பித்தவர், அதன் செய்முறையைக் கூறினார்.

மேலும், “ஹே அவன ஒழுங்கா பாத்துக்கோ டி… ரொம்ப காய்ச்சல்னா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ…” என்று பத்து நிமிடம் பேசிவிட்டே வைத்தார்.

இங்கு பூமி இன்னும் சிரித்துக் கொண்டிருக்க, அவளின் தலையில் நங்கென்று கொட்டினான் ஆகாஷ்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், ஆகாஷின் அன்னை மீனாட்சி அழைப்பு விடுக்க, அவரிடமும் இதே காரணத்தை சொல்லி சமாளித்து விட்டனர்.

“ஹே ஸ்கை ஹை இவங்கள சமாளிக்குறதே, இவ்ளோ கஷ்டமா இருக்கே… ஆஃபிஸ்ல எப்படி சமாளிக்க போறோம்…” என்று பூமி வினவியதும் தான் ஆகாஷிற்கு அலுவலகத்தின் நினைவே வந்தது. அதனுடன் அந்த வாரயிறுதியில் திட்ட விளக்கக்காட்சி (ப்ராஜெக்ட் ப்ரெசன்டேஷன்) இருப்பதும் நினைவிற்கு வந்தது.

ஆகாஷ் தலையில் கை வைத்து அமர்ந்ததைக் கண்டவள், “ஹே என்னாச்சு…” என்று கேட்டாள்.

அவளிடம் விஷயத்தை கூறியவன், “இந்த ப்ரெசன்டேஷன் ஒழுங்கா பண்ணா தான் ஹைக்குன்னு அந்த குடுமி மண்டையன் வேற உசுர வாங்குறான்… இப்போ இந்த சிஷுவேஷன்ல எப்படி அத பண்றது…” என்று சிறிது கவலையாக கூறினான்.

அவனை எப்போதும் வம்பிழுத்து சுற்றிக் கொண்டிருக்கும் பூமிக்கு, அவன் கவலையாக அமர்ந்திருப்பது ஏதோ போலிருந்தது. அவனருகே அமர்ந்து, தோளில் கை வைத்து, “டேய் இதுக்கு போய் ஏன் ஃபீல் பண்ற...? அதான் நான் இருக்கேன்ல…” என்று ஆறுதல் கூறினாள்.

ஆகாஷும் சற்று தெளிந்தவள், அவளை வம்பிழுக்கும் பொருட்டு, “நீ இருக்குறது தான் கவலையே…” என்றான்.

பூமி, இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “உனக்கு போய் ஆறுதல் சொன்னேன் பாரு…” என்று உதட்டை சுழித்தாள்.

“அது இல்லடி… என்ன தான் நீ என் டிப்பார்ட்மெண்ட்னாலும், நீ இன்னும் ட்ரெயினிங்கே முடிக்கல… நீ எப்படி இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட்ட சமாளிப்ப…” என்றான்.

“எப்படி பண்ணனும்னு நீ சொல்லிக்குடு… இப்போ அது பிரச்சனை இல்ல… உன் ஆஃபிஸ்ல எனக்கு யாரையும் தெரியாதே… அத எப்படி சமாளிக்குறது…”

ஆகாஷும் யோசித்தவன், “அசோக் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்… உன்ன பாத்துக்க சொல்லி அவன்கிட்ட சொல்லிடுறேன்…” என்று கூறினான்.

“யாரு… எப்போ பாத்தாலும் உங்கூட சுத்திட்டு இருப்பானே அவனா…” என்று பூமி வினவியதும், “யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டீயா டி…” என்று ஆகாஷ் அவளைத் திட்ட என்று மீண்டும் அங்கு ஒரு சண்டை உருவானது.

தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்

ஹா ஹா ஹா
நூடுல்ஸ்ஸை ஒரு ஆறு மணி நேரம் ஊற வைக்கணும் பூமிகா கண்ணு
அப்போத்தான் அதை சமைக்க முடியும்

ஹா ஹா ஹா
பூமிகா உடம்பில் குரல் மட்டும் ஆகாஷ்ன்னு அவன் கம்பெனிக்கு இவள் போனால் எப்படியிருக்கும்?
ஜெகஜ்ஜோதியா இருக்கும்
ஹா ஹா ஹா
 
Last edited:

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்

ஹா ஹா ஹா
நூடுல்ஸ்ஸை ஒரு ஆறு மணி நேரம் ஊற வைக்கணும் பூமிகா கண்ணு
அப்போத்தான் அதை சமைக்க முடியும்

ஹா ஹா ஹா
பூமிகா உடம்பில் குரல் மட்டும் ஆகாஷ்ன்னு அவன் கம்பெனிக்கு இவள் போனால் எப்படியிருக்கும்?
ஜெகஜ்ஜோதியா இருக்கும்
ஹா ஹா ஹா
நன்றி பானு மா:love::love::love:
அச்சோ இது தெரியாம போச்சே... அடுத்த தடவை நூடுல்ஸ் பண்றப்போ பூமிக்கு சொல்லிடலாம் பானு மா;):p;)
ஹாஹா ஆமா ஆமா ஜாலியா இருக்கும்:ROFLMAO::LOL::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top