நான் இனி நீ எபிலாக் - அபி

Advertisement

ஒரு வருடத்திற்கு பிறகு

மிதுனை பார்த்துக் கொள்ளும் காதர் உஷாவை அழைத்தார் மிதுனிடம் அசைவு தெரிகிறது என்று . உடனே மிதுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் .

ஐ சி யு விக்கு வெளியில் சக்கரவர்த்தி , தீபன் , அனுராகா , உஷா அனைவரும் காத்திருந்தினர் . ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருந்தது .

தீபனோ இனி மிதுனை நேருக்கு நேராக எதிர்க்கொள்ளாம் என்றும் . சக்கரவர்த்தியோ இனி தன் மகன்கள் பதவிக்காக போட்டி போடுவார்கள் என்று கவலை கொண்டார் . உஷாவோ இனி மிதுன் கண்விழித்து மீண்டும் தவறான பாதையில் செல்வானோ என்று அந்த தாய் உள்ளம் மௌனமாய் அழுதது . ராகாவோ மிதுனால் தீபனுக்கு மீண்டும் ஆபத்து நிகழுமோ என்று அச்சம் கொள்ள .

விதியோ இவர்களை பார்த்து நகைத்துக்கொண்டது . மருத்துவரோ ஐ சி யு வில் இருந்து வெளிவந்தார் அவர்களை தன் அறைக்கு அழைத்தார் .

மிதுனக்கு நினைவு திரும்பு விட்டதாக கூறினார் ஆனால் மிதுன் கோமா செல்வதற்கு முன்பு சில காலம் நிகழ்ந்தவை நினைவு இல்லை என்றார் . அதற்கு காரணம் அவன் தூக்க மாத்திரை உண்டதாலோ , மயக்க நிலையிலே நீண்ட நாள் வைத்து இருந்ததாலே , அவனின் மன அழுத்ததாலோ நிகழ்ந்தது என்றார் .

எலக்க்ஷன் நிகழ்ந்ததே மிதுன் நினைவில் இல்லை ஆகையால் எலக்க்ஷன் வேலை தொடங்குவதற்கு முன்பில் இருந்து அவன் நினைவுகள் அழிந்துவிட்டன என்றார் மருத்துவர் .

சக்கரவர்த்தி இனி அந்த நினைவுகள் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார் . மருத்துவர் 80 சதவீதம் வாய்ப்பு இல்லை என்றார் . நாளை அறைக்கு மாற்றிய பிறகு நீங்கள் மிதுனை காணலாம் என்றார் .

மருத்துவர் அறையில் இருந்து வெளிவந்தனர் அனைவரும் . பின் அந்த வி ஐ பி அறையில் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள் . மௌனத்தை உடைத்தார் சக்கரவர்த்தி நடந்தது எல்லாம் நன்மைகே என்பார்கள் ஆகா இனி நாம மிதுனிக்கு பழைய நிகழ்வை நினைவுபடுத்தகூடாது என்றார்.

தீபன் உனக்கும் மிதுனுக்கும் உள்ள பிரச்சனையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் . தீபா அவனுக்கு உன் எண்ணம் தெரியாது ஆனால் உனக்கு அவன் எண்ணம் நன்கு தெரியும் பார்த்து நடந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் . நான் பார்த்து கொள்கிறேன் பா என்றான் தீபன் .

அனுமா நீயும் மிதுன் செய்ததை மன்னித்து அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தர வேண்டும் . அவன் செய்த பாவத்திற்கு அவன் தண்டனை அனுபவித்தான் என்றார் . அனு சரி என்று தலை அசைத்தால் .

மிதுன் கண் விழித்து அனைவரையும் பார்த்தான் . அவன் கண்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்த அனைவர் மனதும் அமைதி அடைந்தது பழைய மிதுன் வந்துவிட்டான் என்று மகிழ்ந்தனர் . அனைவரும் அவன் உடல் நிலையை கேட்டுக்கொண்டனர் . மிதுன் அனுவை கேள்வியா பார்க்க . தீபன் தன் மனைவி என்றான் . மிதுன் அவனை பார்த்து டேய் நான் கோமால இருந்தேன் நீ நான் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாய் என்றான் .

டேய் அண்ணா அப்படி இல்லை டா . நான் அவளை காதலித்தேன் பின் உன்னை நினைத்து அப்பா அம்மா கவலையில் இருந்தார்கள் . அவர்களின் மனமாற்றத்திற்க்கும் , எனக்கும் துனை தேவைபட்டது என்றான் .

மிதுனும் அதை ஏற்றுக்கொண்டான் அனுவை பார்த்து அவளின் நலன் மற்றும் அவளை பற்றி அறிந்து கொண்டான் . பின் உஷாவை பார்த்து அம்மா எனக்கும் பெண் பாருங்கள் என்றான் .

அதுக்கு என்னடா நீ வீட்டிற்கு வா முதலில் அடுத்து உனக்கு பெண் பார்க்களாம் என்றார் உஷா .

மிதுன் வீட்டின் கார்டனில் நடந்து கொண்டு இருந்தான் . அங்கு வந்த தீபன் டேய் அண்ணா என்றான் மிதுன் சொல்லுடா என்றான் . அண்ணா இனி நீயே அப்பாவிற்கு அரசியலில் துணையா இரு என்றான் .

மிதுன் ஏன் என்றான் தீபனோ அனுவிற்கு அமைதியான குடும்ப வாழ்வு வாழ ஆசை அதனால் என்றான் . தான் டி - வில்லேஜ் மும்பையிலும் டெல்லியிலும் உருவாக்கி பார்த்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்றான் .

மிதுனும் சரி என்றான் அவன் முகத்தில் குழப்பம் ஆனால் அவன் மனதின் ஓரத்தில் மகிழ்ச்சியும் , அமைதியும் அடைந்தது அது ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை .

முன்று மாதம் பின் டெல்லியில் மிக பிரபலமான மண்டபத்தில் மிதுன் - ஐஸ்வர்யா திருமணம் கோலாகலமாக நிகழ்ந்துக் கொண்டு இருந்தது . ஐஸ்வர்யா பெரிய தொழில் அதிபரின் மகள் .

தீபனின் முடிவை அனைவரும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டனர் . அவனை நினைத்து சக்கரவர்த்தி உஷா விற்கு மனதில் பெருமிதமே .

அனைவர் மனதிலும் மகிழ்ச்சி . இனி சக்கரவர்த்தி குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டுமே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top