வாணன் முட்டை குளியலுடன் பள்ளிக்கு சென்று பேசுவதும்,தன் மேல் முட்டை அடித்தவர்களை
சீசீடிவி மூலம் அடையாளம் காட்டி சஸ்பென்ஸ் செய்ய வைப்பதும் அருமை
.
பதினைந்து பேர் கொண்ட படை பள்ளியில் படிக்கும் பசங்களான்னு சந்தேகமா இருக்கு
.
தப்பு செஞ்சாலும் சாட்சியோட செய்யறதான்னு பசங்களை தூண்டி விடறதை போல பேசி,இந்த வயசில் திட்டம் போட்டு சாட்சியில்லாமல் வாணனை சிக்க வச்சுட்டாங்க
.
நிலா செய்ததை நம்ப முடியாமல்,வாணன் தன் தாயிடம் குழந்தையும்,தெய்வமும் ஒன்னுன்னு சொல்வியேமா என்னை ஏமாத்திட்டாங்க என கதறுவது கண்கலங்க வைக்கிறது
.
எட்டு வயசு பொண்ணே இப்படி கிரிமினலா நடந்துக்கும் போது அவள பெத்தவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு,நிலா அம்மா இல்லைன்னு சொன்னதும் சுசிலா கிளம்பி இருக்கனும்
மகனுக்காக நியாயம் கேட்க போய் சுசிலா மாட்டிக்கிட்டாரே
.அப்பா பண்ற தப்பை பத்தி தெரியாம அவருக்கு ஆதரவா நிலா பேசியதால்,சுசிலாவின் சாபத்துக்கு ஆளானதுடன்,வாணனின்
வெறுப்புக்கும்,பழிவாங்கவும் காரணமாகிட்டா
.
அடிபட்டதால் சுசிலாவுக்கு இந்த நிலையா
.நிலா பழசை மறந்துட்டாளா,
.பதினைந்து பேர் கொண்ட படையை வாணன் பிறகு சந்தித்தானா.நிலாவுக்கே இந்த நிலை என்றால் இதற்க்கு முக்கிய காரணமாக இருந்த யாதவ்,சதீஷ்,ஷீலா இவர்கள் நிலை என்ன
.