ஆதவன் தன் முன் கோவத்தில் தனக்கு கிடைச்சிருக்க நல்ல வாழ்க்கைய பாழாக்க போறான்.....
அந்த மூதேவி சுதாவ தூக்கி தூர போடு..... இவளை மனசுல வச்சுக்கிட்டு யோசிக்க வரை சரியாக யோசிக்க மாட்ட....
உத்ரா அவனுக்கு வேணும் என்பதை அவன் நடத்திக்கிறான் இல்லை என்னமும் செய்றான் ஆனால் உன்னோட வாழ்க்கை நீதான் காப்பாத்திக்கணும் .... இந்த கல்யாணம் நடந்தால் உன்னோட குடும்பத்துக்கு தான கஷ்டம் அதிகம்...
இப்படி வாழ்க்கை முழுக்க அவனுக்கு பதிலடி கொடுத்துக்கிட்டே இருக்க முடியுமா... எவ்வளவு நாள் போராட முடியும்
பாலன் ஒரே நாளில் உங்க முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்று கண்டு பிடிச்சுட்டான் இப்போ கல்யாண டென்ஷன் என்று சொல்லி சமாளிச்சுட்டிங்க இனிமேல் என்ன செய்வ ....
வருண் தலையிடல என்றால் உத்ரா வாழ்க்கை நல்லா இருக்கும்.... இவன் போய் மிரட்ட மிரட்ட ஆதவனுக்கு அவன் ஈகோ தான் தலை தூக்குது....
சுதாவுக்காக இவ்வளவு யோசிக்கிறவன் பொண்டாட்டிக்காகவும் கொஞ்சம் யோசிக்க தான் செய்வான் ஆனால் வருண் நடுவில் போய் மிரட்டுற வேலை செய்யும் போது உத்ரா மேல் தான் வெறுப்பு வரும்.....
அவங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் அவங்களே பார்த்துக்கட்டும் என்று வருண் ஒதுங்கிட்டா ஆதவன் கொஞ்சம் சரியாகிடுவான் ..
உத்ரா முகம் கலங்கி இருந்ததை பார்த்ததும் ஆதவன் சாரி கேட்கலை என்றாலும் அவளை கஷ்ட படுத்திட்டோம் என்று புரிஞ்சிக்கிட்டான்.....
உத்ராவோட காதலை ஆதவன் ஒருநாள் புரிஞ்சிக்குவான் அதுவரை இந்த வருண் தன்னோட வீர பராக்கிரமத்தை மூட்டை கட்டி வச்சானா நல்லது....