அடப்பாவி...அப்பாவோட நண்பர் என நம்பி வீட்டை பார்த்துக்க சொன்னா. வீட்டை
இவங்க சொன்னதை விட அதிக வாடைக்கு விட்டு,பணத்தை அடிச்சிருக்கான்.அருள் அப்பா
இறந்தப்போ,அருள் தனியா இருக்கான்னு நினைக்காம வந்த உடனேயே கிளம்பிட்டான்.
அருள் கல்யாணத்தை பத்தி இவன் சொன்னதால தான்,சொந்தக்காரங்க அருள் வந்தது தெரிஞ்சும் யாரும் வந்து பார்க்கலையா.இவங்க எல்லாம் மனுச ஜென்மங்க தானா.
"டீச்சர் நீங்க ரொம்ப கிளாஸ் எடுக்கறீங்க"."அம்மாக்கு அப்புறம் நீ தான் இருக்கே,நீ சொல்லு"என ருத்ரா சொல்லவும்,தாய்க்கு நிகரா தன்னை நினைப்பதை எண்ணி அருள் கண்கலங்க,அதை பார்த்த அன்னபூரணி மகன் தான் திட்டி விட்டான் என நினைத்து ருத்ராவை திட்டுவது மனதை நெகிழ வைக்குது.
அடுத்த ஜென்மத்தில் அன்னபூரணி,அருளுக்கு அம்மாவா வேணுமா.மகனை விட மருமகளை பாசமாக பார்த்துக் கொள்ளும் பூரணி அம்மாவாக கிடைப்பது பெருமை தான்.
அருள்,ருத்ரா இப்பதான் பேசி சமாதானமாகி சந்தோஷமா இருக்காங்க,இந்த நேரத்தில் பிரிவா