சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஐயோ ஐயோ அன்னபூரணியம்மா சூப்பரோ சூப்பர்
சான்ஸே இல்லை போங்க

சொன்னேன்லே நான் சொன்னேன்லே
அன்பான அன்னபூரணியம்மா மருமகள் அருளாசினிக்காக உலகையே எதிர்த்து நிற்பார்ன்னு சொன்னேன்லே

மருமகளுக்காக மகளையே இனி நீ இங்கே வராதேன்னு சொல்வதென்ன
உன்னை அடிச்சு வளர்க்கலைன்னு குட்டு வைப்பதென்ன
அருளாவிடம் மன்னிப்பு கேட்பதென்ன
அன்னபூரணியம்மா சூப்பர் சூப்பர்
ஐ லவ் ஹெர் வெரி மச்

இப்படி ஒரு அருமையான மாமியார் கிடைத்தும் ஓடிப் போன அந்த அஞ்சனா மூதேவி பீடைக்கு நல்ல செருப்படி கிடைத்து விட்டது
அருளாசினி அம்மாவாகப் போறாள்
இதுவும் சூப்பர் சூப்பர்

பொய் சொன்ன அந்த அஞ்சனா பீடையை ஆருத்ரன் என்ன செய்யப் போறான்?
அந்த மூதேவியை ஏதாவது நல்லா வைச்சு செய்யணும்ப்பா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடச்சீ...இவ எல்லாம் பொம்பளையா,ஈவு,இரக்கம் இல்லாம ராட்சஷி போல நடந்துக்கறா:devilish::devilish::devilish:
இறாலை பார்த்ததுக்கே புழுவை போல இருக்குன்னு வாந்தி எடுத்துட்டு இருக்கா:cautious::cautious:.அவட்ட போய் மீன் இன்னும் கழுவலையா பூனை எடுத்துட்டு ஓடிருச்சுன்னு சொல்றா மனுசியா இவ:mad::mad:.

செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அவளுக்கு வாந்தி வருது அதுக்கு நான் என்ன பண்ண முடியும்னு கேட்கறா:mad::mad:.தாமரை பேசற பேச்ச கேட்டு உனக்கு அவளை பிடிக்கலைனா இங்கே வராதே,நான் வேணும்னு நீ நெனைக்கலை,அப்போ நீயும் எனக்கு வேண்டாம்னு சரியா சொன்னான்(y)(y).

ஒருத்தி அப்படி இருந்தா எல்லாரும் அப்படியே இருப்பாங்களா,நீ அப்படித்தான் இருக்கியா,, மாப்பிள்ளை உன்னை கண்ட்ரோல்ல வைக்காததால தான் நீ இப்படி பேசறே,உன்னை அடிச்சு வளர்க்காதது என் தப்புன்னு சொல்லும் அன்னபூரணி,அம்மான்னு கூப்பிட்டு இங்கே வராதேன்னு சொல்லி கலக்கிட்டார்(y)(y)(y).

முதல்ல ஒன்னு அப்புறம் ஒன்னுன்னு எப்பவும் பேசமாட்டாளாம்:sneaky::sneaky:.இவ சாதாரணமானவ இல்லைன்னு இப்போதாவது புரிஞ்சதே:unsure::unsure:மறுபடியும் டாக்டர் ரேணுகாட்ட போகனுமாo_Oo_Oo_O

தாய் இல்லாத அருளுக்கு அன்னபூரணி போல தாயாக பார்த்துக் கொள்ளும் மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்:giggle::giggle:.தாமரை செய்ததுக்கு மன்னிப்பு கேட்டு ஹாஸ்பிடலுக்கு
அழைத்து சென்றவருக்கு,டாக்டர் அருளிடம் கேட்ட விசயத்தில் சந்தோஷத்தில் இருக்கார்:love::love::love:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் விவேகம் ஏன் விடாமல் வாந்தினு கேட்கவே இல்லையே நீ.......
அக்காக்கு நல்லா போட்டீங்க அம்மாவும் பையனும்........
பேச வேண்டிய நேரத்தில் பொண்டாட்டிக்கு பேசலைனா எப்போவும் வீட்டில் மரியாதை இருக்காது.........
அக்கா அம்மா முக்கியம் தான்....... ஆனால் ரெண்டு பேரும் தப்பா இருந்தால் பேசுறதுல தப்பு இல்லை......

உங்கக்கா வேணும்னே பண்ணுறா........
இதெல்லாம் தேவையா???
தம்பி வேணும் தம்பி பொண்டாட்டி வேண்டாம் னு அக்காக்கள்........
அம்மா பிள்ளைங்களை கேட்டால் கட்டுனவன் போதும் அவனோட அம்மா எல்லாம் வேண்டாமான்னு எகிறுவாங்க......
ஆக மொத்தம் எல்லா இடத்திலும் இடி படுறது திருமணமான பொண்ணுங்க தான்......
அதான் பிற்காலத்தில் நாத்தனார் மாமியார் னு அவதாரம் எடுக்குறாங்க போல.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top