Ok. இது சாஷாவோட "Me too" episode போல.
அவ கோவத்துல முழுமையான நியாயம் கண்டிப்பாக இல்லை.
அவள் தன் மனம் ஒரு அயோக்கியனை விரும்பினதுக்கு வருத்தப்படுறதோ இல்லை தன் உண்மையான அன்புக்கு கூட அவனோட ஒழுக்கமின்மையை மாத்த சக்தி இல்லாத, தன் கையாலாகாதத்தனத்தை நினைச்சு மறுகுவதோ வேணும்ன்னா சரியா இருக்கலாம்.
இப்ப இருக்கற துணிவுல கொஞ்சமாவது அவளோட அம்மாகிட்ட காட்டினாளா? காட்டி இருந்தாலும் பயன் இருந்துருக்காது தானே. அப்ப மொத்த கோபத்தையும் இவன் கிட்ட மட்டும் காட்டுறது எப்படி சரியாகும்?
மணி கொலைகாரன் ஆக வேண்டாம் ஆனால் இவளோட தம்பிக்கும் அம்மாக்கும் தண்டனை வேண்டாமா? இப்பையும் அசட்டு துணிச்சலோட தான் பேசறாளே தவிர அவளோட நிலை அவளை sensible - ஆ யோசிச்சு செயல்பட வைக்க மாட்டேங்குதே.
பீஷ்மா உன் நிலைமை என்னனு சொல்ல. ஊழ்வினை துரத்துடா உன்னை. நீ மட்டும் அந்த ரேகாவோட பொண்ணை (பெயர் மறந்துடுச்சு) பார்க்காமல் இருந்துருந்தன்னா உன் பொம்மையும் மயக்கத்துலயே இருந்துருப்பா. இப்ப பார் உனக்கு கண்ணை கட்டுது அவளை deal பண்றதுக்குள்ள. உன் முழுப்பெயர்
ஷாந்தனு பீஷ்மன் தானே. அதுதான் பிள்ளையும் போய் மனைவியும் பிரிந்து நிக்கற நிலை.
இனி சாஷாவை விட்டுட்டு சாஹித்யாவை எப்படி correct பண்ணலாம்னு யோசி. அதுவும் உன் தாத்தாவை மீறி.