காதல் அலைகள் 19 1

Advertisement

உதயா

Well-Known Member
தில்லை என்ன‌ பைத்தியக்காரத்தனம் பண்ற படிப்பை இப்படி பாதியில் விடுறியே அந்த அளவுக்கு என்ன தாமரை மேல் பாசம்

நீ அவளை ஹாஸ்டல்ல விட தயங்குற ஆனால் அவள் ஹாஸ்டல் போயிட்டா விஜயை தினமும் பார்க்க முடியாதுன்னு கவலை படுறா

தாமரை கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல இருந்தா அவளுக்கும் வெளி உலகம் பத்தி தெரிஞ்சுக்க நல்ல வாய்ப்பு எப்பவும் வீட்டுகுள்ளே உங்க பாதுகாப்பிலே இருந்தால் அவளும் எப்போது தான் சுயமா யோசிப்பா
அவளையும் கொஞ்சம் தனியா செயல்படவோ முடிவுகளை எடுக்கவோ விடுமா

எதுக்கு இத்தனை அத்தான் போடுறம்மா நீ உறவு முறைக்கு கூப்பிடுற ஆனால் உன் அத்தையும் அத்தானும் அதை வேற மாதிரி புரிஞ்சுக்கிறாங்க

தாமரை ஏத்துக்கிற மாதிரி காரணம் என்றால் அனீஸோட கர்ப்பம் கலைஞ்சதை பத்தி சொல்லி குழந்தையோட ஆரோக்கியம் முக்கியம் அதுவும் வயிற்றில் வளருவது உங்க அம்மா அவங்க நல்ல படியாக பிறக்கும் என்று சொல்லி சம்மதிக்க வச்சிருப்பாளோ

ஆதி வரும் போது குழந்தையை பத்தி சொல்லாமல் படிப்பையும் விட்டுட்டு வீட்டில் இருக்கிறதை வச்சு தான் பிரச்சினை வரும் என்று நினைக்கிறேன் தில்லை இழக்க போவது ஆதியை தானா

தாமரை மேல் வச்சிருக்க அன்பால் நல்லா இருக்க வாழ்க்கைய ரொம்ப சிக்கலாக்கி எங்க கொண்டு போய் நிறுத்த போறாளோ

இதில் விஜய் தாமரை காதல் தெரிய வரும் போது தில்லையோட அம்மா நிச்சயம் சண்டை போடுவாங்க என் அண்ணி ஆசை தான் நிறைவேறனும்னு தேவாவுக்கு தான் கல்யாணம் செய்யணும் சொல்வாங்க இவ மொத்த குடும்பத்தையும் எதிர்க்க போறாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top