அருமையான பதிவு மிலா
.சாம்பவியோட பசங்களுக்கே கல்யாணம் ஆகிடுச்சு
, வெற்றிக்கு குழந்தையும் இருக்கலாம்,பேரன்,பேத்தி எடுத்தாச்சு இன்னமும் எங்கம்மா வீட்டுல எனக்கில்லாத உரிமையா என அதிகாரம் பண்ணுதே
.இதெல்லாம் என்ன ஜென்மமோ
.
பிரணவ் மகனாகவோ,பேரனாகவோ முடிவெடுப்பது போல என்ன உண்மை தெரிய வரும்
.
கட்டிய மனைவி கூட பேச முடியாமல் என்ன வாழ்க்கைனு நினைக்கிறவன்,அம்மாவ தூண்டிவிட்டு, கௌசிய விட்டுட்டு காதலியோட சுத்தறப்போ இந்த நெனப்பு வரலையா
.
மகனுக்கு கல்யாணம் பண்ணதும் பிரிச்சுட்டு,பொங்கி போடவும்,பரிமாறவும் நான்தான் வரனும்னு சலிச்சுக்குது
.ஊட்டி விடவும்,கழுவி விடவும் கண்டவ எல்லாம் வரமாட்டாளா
.மகனை பொண்டாட்டியோட அண்ட விடாம பண்றவ பேசற பேச்சா இது
.
அடப்பாவி...சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டறது இதானா
.பரிமாற கூட நேரம் இல்லையானு கௌசிய திட்டறதை போல, பரிமாற வைக்கிறதோடு,ஊட்டியும் விட்டு சாம்பவி பிபி யை ஏத்தியும் விட்டு கலக்கறான்
.குச்சி ஐசா இந்த கொழுப்பு மட்டும் குறையலையே சக்தி
.
உன் அண்ணன் இருந்தா அவர் பேசுவார்,இல்லாததால நான் பேசறேன் என சந்திரா இப்பவாச்சும் பேசுதே..உறவை முறிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா மொத்தமா முறிச்சிடலாம்னு சந்திரா சரியான பதிலடி கொடுத்தாங்க
.
இவனுக்கு சமைக்க,துவைக்க கௌசி வேணுமா
,வேலைக்காரி வச்சுக்க சொல்லி பிரணவ் சரியா சொன்னான்.வெற்றி,சந்தியா இருக்கும் இடம் தெரியவருமா, பிரணவ் அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவானா
.