அருமையான பதிவு மிலா
.சந்தியா தன் மனம் வெற்றியை விரும்புவதை உணர்ந்தாளும் , சாம்பவி தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தன் மனதை வெளிப்படுத்தாமல் இருக்க,வெற்றி தன் காதலை சொன்னதோடு படிப்பதற்காக சென்னைக்கு வர வச்சுட்டான்
.
சாம்பவி,வெற்றியிடம் சொல்லாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய,அவன் யாருக்கும் தெரியாமல்
சந்தியாவை திருமணம் செய்து,சென்னையில் இருந்தால் அவர்களை தேடி வருவாங்க என
, மும்பையில் வேலையை தேடிட்டு அங்கேயே போய்ட்டான்
.இவர்கள் செயலால் மாட்டிக்கொண்டது கௌசி தான்
.
சக்திக்கு அவசரமா பொண்ணு தேடற நிலையிலும்,இந்திரா பொண்ணை மருமகளாக்கி அவளை படுத்தும் பாட்டில் இந்திரா கண்கலங்க வேண்டும் என நினைக்குதே
,இவ எல்லாம் என்ன ஜென்மமோ
.
அம்மாக்கு புள்ளை தப்பாம இருக்கான்,இவன் வேற ஒருத்தியை காதலிச்சா கல்யாணம் பண்ண முடியாதுன்னு உறுதியா இருந்திருக்கனும்
.அதை விட்டு கல்யாணம் ஆனதும் எப்படி திட்டம் போட்டு,அவனது காதல் சந்தோஷத்துக்காக கௌசி வாழ்க்கையை வீணாக்கிட்டான்
.
அக்கா,தங்கை மருமகளா வீட்டுக்குள்ள வந்து அம்மா,மகனை வச்சு செய்யனும்
.