அழகாக சொல்லிட்ட
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..
எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...
கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..
கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..
என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..
எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...
சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..
பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
ஒன்றானோம்..
கருத்தொருமித்தோம்
கட்டுண்ணடோம்
களித்தோம்..