E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.

இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
சூப்பர் சகோதரி{ஓல்ட் வார்த்தைகள், ஆனா வேறு இல்லை சகோதரி}
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..

ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...

தாத்தா பேரன்களுக்கு தான் ஐடெண்டிடீ சொன்னா...
வர்ஷ் நெக்ஸ்ட் லெவல் ஐடெண்டிட்டி கிரியேட் பன்னபோறா...

கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....

ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.

Nice epi...
Smiling loving caring..
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நல்ல episode பா
என்ன சொல்ல எதை விட தெரியல
part1
கவிதை கவிதை
தலையும் தலைவியும் பேசற வசனங்கள் அருமை
மல்லிம்மா கலக்குறீங்க
அதுவும் வர்ஸு சொன்ன டயலாக் ரொம்ப அருமை
எம்மா வர்ஸு
நீ குஷி படம் பார்த்துடியோ
அந்த ஜோ மாதிரி மாத்தி மாத்தி reaction வருது
ஆனா எல்லா ரியாக்ஷனும் சும்மா அள்ளுது
ரொமான்ஸ் மச்சி ரொமான்ஸ்
நீ கலக்கு மச்சி
தலை நீ வேஸ்ட் டா

பார்ட் 2
வாடா செல்லம் ஐஸ்
இன்னும் நீ clear ஆகலேன்னா
பேசாம ஆல் clear ஷாம்பு use பண்ணு
பார்த்துமா
மூளையும் சேர்ந்து clear ஆகபோகுது

பார்ட் 3
அண்ணன்களும் தங்கையும் businees பண்ண போறாங்க
ஓகே ஓகே
உருப்படியா சண்டை போடாம இருந்த சரி

ஆக மொத்தம்
அவன் சொன்னா செய்ய கூடாது
அவங்களை கூப்பிட கூடாது
நீயா கூப்பிட்டா அவன் குறை சொல்ல கூடாது

நீ already typical indian wife ஆயிட்டா செல்லம்
இதுல நீ innum enna ஆகணும்னு try pannara and solra
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
தளும்ப தளும்ப என்னுள்
உனை நிறைக்கிறாய்
மூச்சு முட்டினாலும்
அங்குலமும் குறைய விடவில்லை....
வாரி இரைத்த முத்தங்களை
முந்தானையில் முடிகிறேன்
நழுவிய ஒன்று கன்னத்தில்
ஒட்டிக் கோண்டது......
ஒவ்வொரு கணமும்
உனை மறக்கத் துடிக்க
என் ஒவ்வொரு அணுவிலும்
சம்மணமிட்டு அமர்ந்து
சத்தமாய் சிரிக்கிறாய் .......
பீனிக்ஸ் பறவையாய் நான்
மீண்டும் மீண்டும் எரிந்து
உயிர்த்தெழுகிறேன்
உன் காதலால் .....
அத்துனையும் விடுத்து
உன் கைகளுக்குள் புகுந்து
கொண்டேன் ........
உன் னை எனக்குள் ஒளித்து கொள்ள ....
எனக்காகவே .......
எனக்கு மட்டுமாய்
நீ......
அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM,
மெலோடி ட்ராமா இருவரும் சேர்ந்து செம MM.....
5c4e85b449e2b61f26286dd63a6bf4b8.jpg

முதல் முறையை அவள் கண்ணில் எப்போதும் போல் மூழ்கிவிடாமல் தன்னை தொலைத்துவிடாமல் அவளுடன் இருக்கும் நேரங்களை முழுவதும் உணராமல் இருந்த நாட்கள் எல்லாம் போயி போயிந்தி அவளை அவளுக்காக பார்த்த தருணம் இனி எல்லாம் சுபம் தான் .......
வர்ஷ் முதலில் இருந்தே நேர்மையானவளாக தான் காட்டியுள்ளீர்கள் அவள் பேச்சிலும் இன்று வெளிப்பட வைத்துள்ளீர்கள்...... தன் அப்பாவிடம் பேசி வாக்கையே மறக்காமல் மதிப்பளிக்க விரும்பும் வர்ஷ் கணவனை எவ்வளவு கொண்டாடுவாள் அதுவும் அவனை தன் ஊனாக உயிராக நினைப்பவள் அவனின் பேச்சையும் தான் மதித்தாள் அவன்தான் புரிந்து கொள்ளாமல் கோடடைவிட்டுவிட்டான் இப்போதும் அவள் சொல்கிறாள் மற்ற்வர்கள் மற்ற்வர்கள் என்று மற்ற்வர்களுக்காக வாழ்வை எடை போடாதே உன்வாழ்வை ..........அந்த குறிப்பையெலாம் அவன் புறிந்து கொள்வான் இனி என்றே ஆகட்டும் ..... போகட்டும் இன்று உணராதவன் உணர்ந்துவிட்டால் அவன் முன்னாள் யாரும் நிகராக முடியாது இந்த வர்ஷ் அவனின் பாசம் அன்பு காதல் எல்லாவற்றிற்கும் முன் பேச்சிழந்துவிடுவாள் இனி.....


இந்த ஐஸ் என்னமா பேச்சிழக்கவைக்குது சஞ்சய் அவனும் விடாக்கண்டனாய ஒரு சின்ன புள்ளிகள் இருந்தாலும் போட்ட பழய கோலத்தை அழித்துவிட வேண்டும் என்று நேரம் கேட்கிறாளா புதிதாய் கோலமிட கலர்புல் கோலமிட ......

சிங்காரி.. ஹா ஹா .....சூப்பர் MM ......அந்த இடம் முதலில் இந்த சிங்காரிக்கு பார்த்து நம் ஈஸ்......

அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம் தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா......
அதை கொண்டாட இனி ஒரு சிங்காரி வருந்தாம்மா .......

மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ......
அருமை சகோதரி
 

MythiliManivannan

Well-Known Member
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.

இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
அருமையான வரிகள் பாத்தி:)

வர்ஷோட எண்ணத்தை அப்படியே வார்த்தைகள்ல வடிச்சிருக்கீங்க...... சூப்பர்
 

MythiliManivannan

Well-Known Member
தளும்ப தளும்ப என்னுள்
உனை நிறைக்கிறாய்
மூச்சு முட்டினாலும்
அங்குலமும் குறைய விடவில்லை....
வாரி இரைத்த முத்தங்களை
முந்தானையில் முடிகிறேன்
நழுவிய ஒன்று கன்னத்தில்
ஒட்டிக் கோண்டது......
ஒவ்வொரு கணமும்
உனை மறக்கத் துடிக்க
என் ஒவ்வொரு அணுவிலும்
சம்மணமிட்டு அமர்ந்து
சத்தமாய் சிரிக்கிறாய் .......
பீனிக்ஸ் பறவையாய் நான்
மீண்டும் மீண்டும் எரிந்து
உயிர்த்தெழுகிறேன்
உன் காதலால் .....
அத்துனையும் விடுத்து
உன் கைகளுக்குள் புகுந்து
கொண்டேன் ........
உன் னை எனக்குள் ஒளித்து கொள்ள ....
எனக்காகவே .......
எனக்கு மட்டுமாய்
நீ......
அருமை மதி:)
 

MythiliManivannan

Well-Known Member
மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க
?…
எப்படிங்கண்ணா.....
மாணவர்களோட மண்டைய ஓரே போடா போடறதா;) :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top