சகோதரி உமாசரவணனுக்கு,
தங்களின் விழியில் மொழியில் நாவல் அருமையான காதல்,குடும்பம்,மற்றும் சிறிது கிரைம் கலந்த நாவல் சகோதரி. நன்றாகக இருந்தது. ரிஷி-அபி அருமை ஜோடிகள். அபியின் சஸ்பென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக விளகுவது அருமைசகோதரி. நல்ல குடும்பம். நட்புக்கு தைலா,லட்சுமி அருமை. அபியின் காத்திருந்த காதல் வெற்றி வெற்றி. ஹீரோ-ஹீரோயின் பாத்திரங்கள் அருமை இளம் சமுதாயத்தினர் சிலபேர் வழி மாறிப்போவதும் அதற்கான வருத்தமும், அவர்களுக்கான முடிவும் அருமை. அபிராமி, ரிஷி, வருண்-தைலா, சுரேஷ்-சித்ரா மற்றும் எல்லா கதாபாத்திரங்களையும் அழகாய் தந்திருந்தீர்கள் ரொம்ப சுவராசியமான கதை .உங்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை சகோதரி. அருமையான உரையாடல் நடை, விறுவிறுப்பு குறையாமல் எழுதியுள்ளீர். கையில் எடுத்தால் முழுவதும் படித்து விட்டுதான் கீழே வைக்கும்படி இருந்தது சகோதரி
வணக்கம் அண்ணா...
உங்களுடைய அருமையான விமர்சனத்திற்கும்...வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.உங்களின் கருத்துக்களை கண்டு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.