பள்ளிக்கூடத்துக்கோ, கல்லூரிக்கோ
பிள்ளைகளை படிக்க அனுப்பினால்
அந்த படிக்கும் வேலையை
மட்டும்தான் பிள்ளைகள் பார்க்க
வேண்டும்
காதல் தப்புன்னு நான் சொல்ல
வரலை, விஜி டியர்.
ஸ்ரீமதியின் அண்ணன் மீது
தனக்கு வந்த அந்தக் காதலை
ஷெண்பா வீட்டில் வந்து
சொல்லியிருந்தால் அவளுக்கு
இவ்வளவு துன்பம் வந்திருக்காதே?
ஆயிரம் தடைகள் வந்தாலும்
தங்கையின் மனம் போல
அண்ணன்கள் இருவரும்
அவளை வாழ வைத்திருப்பார்களே?
அதை விடுத்து பேமிலிக்குள்
இருக்கும் பகையை நினைத்து
பயந்து தாங்களாகவே ஒரு
முடிவெடுத்து வீட்டுக்குத்
தெரியாமல் திருட்டுக் கல்யாணம்
செஞ்சு குழந்தையும் வந்து
அதையும் வீட்டுக்கு சொல்லாமல்
மறைத்து விடுதியிலேயே
தங்கி, தப்புக்கு மேல தப்பு
செஞ்சு ஊரு இரண்டுபட்டால்
சந்தோஷப்படும் சொத்துக்கு
ஆசைப்பட்ட ஒரு பொறுக்கிக்
கூத்தாடியின் கேடுகெட்ட
துர்போதனையைக் கேட்டு
பெற்ற மகனையே கொன்ற
கொடூரமான தகப்பன்
அதோடு விடாமல் வம்சத்தின்
அடுத்த வேரையும் அழித்து
அப்பவும் ஜாதி வெறி அடங்காமல்
குழந்தையை சுமந்த ஷெண்பாவின்
கர்ப்பப்பையையும் எடுத்து
அவளின் உயிருக்கும் உலை
வைத்து அப்பப்பா எவ்வளவு
கொடூரப்புத்தி இந்த கேடுகெட்ட
கங்காதரனுக்கு?
இவனுக்கெல்லாம் கடுமையான
தண்டனை கிடைக்கணும்,
விஜயலக்ஷ்மி டியர்
வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கும்
குழந்தைகளுக்கு ஷெண்பாவின்
வாழ்க்கை நல்லதொரு பாடம்ப்பா