இதுவரை கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்குமே நன்றி பிரண்ட்ஸ்..நேரமின்மையால் கருத்துக்களுக்கு இன்றும் பதிலளிக்க இயலவில்லை.பட் படிச்சிட்டேன்..இன்னைக்கு ud போட்டாச்சு.உங்க கருத்துக்களை எதிர்பார்க்கறேன்.நன்றி.
துளி மையல் கொண்டேன்-13
காலை எட்டு மணி
தன் படுக்கைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி,இன்னும் தூங்கிக் கொண்டிருந்தவளையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்வையில் ரசிப்புத்தன்மை கிஞ்சித்தும் இல்லை.எப்போதுதான் எழுந்துகொள்வாள் என்ற எண்ணம் மட்டுமே பிராதனமாக இருந்தது.நேரம் கடந்துகொண்டிருந்ததில்,இதற்கு மேல் முடியாது என்பது போல,
“வல்லி”என்று அழைத்தான்.
அவளிடம் அசைவில்லை.
“வல்லி”மீண்டுமொருமுறை அழைக்க,குரல் தெளிவாக கேட்டாலும்,வேறு யாரையோ பேர் சொல்லி அழைக்கிறார்கள் என்ற நினைப்பில் கண்ணை திறக்க மறுத்தாள்.
தலை முழுவதும் மூடியிருந்த போர்வையை விலக்கியவன்,”வல்லி”மீண்டும் அழைக்கவும் மிகவும் சிரமப்பட்டு கண்ணை திறக்க முயற்சி செய்தாள்.
அவளின் கருவிழி வெகுநேரமாய் அசைவதை உணர்ந்தவன்,அவளது நெற்றியை தொட்டுப் பார்க்க,காய்ச்சலின் அறிகுறியில் அதிர்ந்து போனான்.
“வல்லி..எழுந்திரு,ஹாஸ்பிட்டல் போகலாம்”அவள் கன்னத்தை தட்டி எழுப்பவும்,உணர்வு வந்தவள் கண்ணை திறந்ததும் வெகு அருகில் கணவன் முகத்தைக் காணவும்,
“என்னாச்சு”என்றாள்.
“உனக்கு பீவர் மாதிரி இருக்கு”
“ஓ”-என்றவள் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.லேசான சூடு தான்.
“ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம்.டேப்லெட் வைச்சிருக்கேன்.அதிலையே சரியாகிடும்”அவனை தாண்டி எழுந்து சென்றவளால் இரண்டடி எடுத்து வைக்க முடியவில்லை.
தலை சுற்றவும் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.
“என்ன பண்ணுது”பதறிப்போய் கேட்கவும்,
“ஒண்ணுமில்ல”என்றவள் அவன் அணைப்பிலிருந்து விலகி,மெதுவாய் எழுந்து,உள்ளங்கைகளை நன்றாக இறுக மூடியபடி எழுந்தவள், பாத்ரூம் நோக்கி சென்றாள்.
அரவிந்திற்கு சொல்ல முடியாத வருத்தம்,ஆற்றாம, கோபம் எல்லாம் ஒன்றாக கலக்க,படுக்கையில் அமர்ந்தான்.சில நிமிடங்களுக்கு பிறகும் மனைவி வராதிருக்க,குளியலறைக்குள் நுழைந்தான்.
கண்ணாடி தடுப்பினுள்ளே அவள் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தது தெளிவாகவே தெரிந்தது.
அவசரமாய் கதவை திறந்துகொண்டு உள்ளே போனான்.
அவனின் அரவத்தில் கண்ணைத்திறந்து பார்த்தவளின் எண்ணவோட்டம் என்ன என்பதை கொஞ்சம் அவனால் கணிக்கவே முடிந்தது.
“நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்க போறதில்ல.இன்க்ளுடிங் செ*ஸ். அதனால அதையே நினைச்சிட்டு என்னை வில்லன் மாதிரி பார்க்காத”என்றவன்,
“பிரஷ் பண்ண ஹெல்ப் பண்ணவா?”என்றான்.
அவளின் அனுமதி இல்லாமலையே அவளின் பேஸ்ட் எடுத்து கொடுத்து உதவியவன்,அவள் முகம் அலம்பவும்,அவளின் இரு தோள்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு,”நடக்க முடியலைன்னா,என் மேல சாஞ்சுக்கலாம்.தப்பில்ல”என்றவன்,அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு மிகவும் மெதுவாய் அந்த குளியலறையிலிருந்து வெளியே வந்து,படுக்கையில் அவளை அமர வைத்தான்.
“டேப்லெட் வைச்சிருக்கியா?”
“ம்ம்.பேக்ல இருக்கு”எனவும் எங்கே என்று கேட்டு எடுத்தவன்,மாத்திரை லோ டோசெஜ் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,
“சாப்ட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்”மாத்திரையையும் கையோடு எடுத்துக்கொண்டே போனான்.
வேதாவிடம் எதுவும் சொல்லவில்லை.சரசம்மாவிடம்,”கஞ்சி வைச்சு கொடுங்க.எனக்கான டிபனையும் கொடுத்து விடுங்க”என்றவன் சுடுதண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தான்.
விழிமூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளிடம்,”கொஞ்சம் வெயிட் பண்ணு.கஞ்சி கொண்டு வர சொல்லியிருக்கேன்”என்றவனது அக்கறை அவன் மீதான பயத்தை கொஞ்சம் விலக்கியிருந்தது.
பயமா?மயூவிற்கா?-கேள்வியெல்லாம் வேண்டாம்.
கணவனாக அவன் உறவை ஏற்றுக்கொள்வதற்கு அவள் பயந்திருந்தாள்.அந்த பயம் தான் கொஞ்சம் விலகியிருந்தது.
“திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு?”விசாரணையை தொடங்க,
“ரெஸ்ட்லஸ்”என்றாள்.
“கூடவே ரெண்டு நாள் பட்டினியும்,பசியும் சேர்ந்துடுச்சு! சரியா?”
“ம்ம்”
“சாப்பாடு விஷயத்தில கூச்சப்படணும்னு அவசியமில்ல.நீ சாப்பிடறது உன் புருஷனோட காசு தான்.நல்ல இதை பதிய வைச்சுக்கோ!!”என்றவன்,
“என்னையும் தான்!!”என்றான்.
“சரி”
“எது?என்னையும் மனசில வைச்சுக்கறியா?”அவளுக்கு முடியாத நிலையிலையும் அவன் வம்பழக்க துவங்கியிருக்க,
“ம்ம்”சோர்வாக சொல்லவும்,அவளின் நிலை பாவமாக தெரிய அமைதியாகிவிட்டான்.
அறைக்குள் வெளியே அவனுக்கு வேண்டிய உணவு பதார்த்தங்களை வேலையாள் வைத்துவிட்டு போனதன் அடையாளமாய்,பெல் அடிக்க,கதவை திறந்து,ட்ரேயை தள்ளிக்கொண்டு வந்தான்.
“உனக்கு கஞ்சி”சூடாக இருந்ததில் ஸ்பூன் போட்டுக் கொடுக்க,கட்டிலை விட்டு எழுந்துகொள்ள முயற்சி செய்தாள்.
அவன் தடுக்கவில்லை.அவளுக்கு உதவியவன் சோபாவில் அமர வைத்து கஞ்சியை கொடுக்க,மிச்சமில்லாமல் ஸ்பூனில் அள்ளி உண்டுவிட்டாள்.ஏதோ தெம்பு வந்தது போலிருந்தது.
அவள் ஆசுவாசமாய் அமர,தனக்கு இட்லிகளை எடுத்து வைத்தவன்,”எனக்கு கரெக்ட் டைம்-க்கு எல்லா வேலையும் செய்தாகணும்.பசி,பட்டினில கிடக்கறதெல்லாம் என்னால முடியாது.சாப்பிட கொஞ்சம் லேட் ஆனாலும் தலைவலி வந்துடும்...அதுவும் இன்னும் சாப்பிடலையேன்னு நினைச்சு நினைச்சே தலைவலி வர வைச்சுக்குவேன்”எனவும் முதல்முறை அவளிடம் லேசாக புன்னகை துளிர்க்க,அதை ரசித்தவன்,
“வேலை செய்ய தெம்பு வேணும்!! அதனால நோ ரெஸ்ட்ரிக்ஷன்”என்றவன் அனாயாசமாய் பத்து இட்லியை காலி செய்துவிட்டிருக்க,அதுவே அவனுக்கு அரைவயிறு தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ட்ரேயை வெளியில் கொண்டு போய் வைத்துவிட்டு,
“இப்போ போடு”மாத்திரையை கொடுக்க,விழுங்கிக் கொண்டாள்.
“அம்மா இன்னைக்கு நம்ம கிராமத்து வீட்டுக்கு போறாங்க.அவங்களால ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது”
“ஏன்?”
அவளின் ஒரு வார்த்தை கேள்வி பதில் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் வலுக்கட்டாயமாய் எரிச்சலை கட்டுப்படுத்தினான்.
“பழங்கள் எக்ஸ்போர்ட் பிசினெஸ் செய்யறாங்க.தன்னோட பொழுது போக்கும் நாலு பேருக்கு உதவறதா இருக்கணும்னு இதில இறங்கிட்டாங்க”
“நானும் அவங்களோடவே போகட்டுமா?”
“யோசிச்சு சொல்றேன்.இப்போ நீ தூங்கு.நைட்டெல்லாம் என்னையவே பார்த்துட்டு ,என்னைப்பத்தியே யோசிச்சு தூக்கத்தை தொலைச்சிருக்க?”கிண்டலாய் சொன்னவன்,
அவள் முகத்தருகே சென்றவன்,”நமக்குள்ள நேத்து சம்திங் சம்திங் நடந்திருந்தா கூட நீ அசதியில தூங்கியிருப்ப!! இப்போ பார்,தேவையில்லாம அதையே யோசிச்சுட்டு,காய்ச்சல் வந்துடுச்சு!!! நேத்து ரிஸ்க் எடுத்திருக்கலாமோ”-அவள் கண்களை ஊடுருவி கேட்டுவிட்டு,அவளின் திகைத்த பாவனையை ரசித்தவன்,
“தூங்கு.நான் மூணு மணி நேரம் கழிச்சு தான் வருவேன்.ஸ்லீப் வெல்”சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.
துளி மையல் கொண்டேன்-13
காலை எட்டு மணி
தன் படுக்கைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி,இன்னும் தூங்கிக் கொண்டிருந்தவளையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்வையில் ரசிப்புத்தன்மை கிஞ்சித்தும் இல்லை.எப்போதுதான் எழுந்துகொள்வாள் என்ற எண்ணம் மட்டுமே பிராதனமாக இருந்தது.நேரம் கடந்துகொண்டிருந்ததில்,இதற்கு மேல் முடியாது என்பது போல,
“வல்லி”என்று அழைத்தான்.
அவளிடம் அசைவில்லை.
“வல்லி”மீண்டுமொருமுறை அழைக்க,குரல் தெளிவாக கேட்டாலும்,வேறு யாரையோ பேர் சொல்லி அழைக்கிறார்கள் என்ற நினைப்பில் கண்ணை திறக்க மறுத்தாள்.
தலை முழுவதும் மூடியிருந்த போர்வையை விலக்கியவன்,”வல்லி”மீண்டும் அழைக்கவும் மிகவும் சிரமப்பட்டு கண்ணை திறக்க முயற்சி செய்தாள்.
அவளின் கருவிழி வெகுநேரமாய் அசைவதை உணர்ந்தவன்,அவளது நெற்றியை தொட்டுப் பார்க்க,காய்ச்சலின் அறிகுறியில் அதிர்ந்து போனான்.
“வல்லி..எழுந்திரு,ஹாஸ்பிட்டல் போகலாம்”அவள் கன்னத்தை தட்டி எழுப்பவும்,உணர்வு வந்தவள் கண்ணை திறந்ததும் வெகு அருகில் கணவன் முகத்தைக் காணவும்,
“என்னாச்சு”என்றாள்.
“உனக்கு பீவர் மாதிரி இருக்கு”
“ஓ”-என்றவள் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.லேசான சூடு தான்.
“ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம்.டேப்லெட் வைச்சிருக்கேன்.அதிலையே சரியாகிடும்”அவனை தாண்டி எழுந்து சென்றவளால் இரண்டடி எடுத்து வைக்க முடியவில்லை.
தலை சுற்றவும் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.
“என்ன பண்ணுது”பதறிப்போய் கேட்கவும்,
“ஒண்ணுமில்ல”என்றவள் அவன் அணைப்பிலிருந்து விலகி,மெதுவாய் எழுந்து,உள்ளங்கைகளை நன்றாக இறுக மூடியபடி எழுந்தவள், பாத்ரூம் நோக்கி சென்றாள்.
அரவிந்திற்கு சொல்ல முடியாத வருத்தம்,ஆற்றாம, கோபம் எல்லாம் ஒன்றாக கலக்க,படுக்கையில் அமர்ந்தான்.சில நிமிடங்களுக்கு பிறகும் மனைவி வராதிருக்க,குளியலறைக்குள் நுழைந்தான்.
கண்ணாடி தடுப்பினுள்ளே அவள் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தது தெளிவாகவே தெரிந்தது.
அவசரமாய் கதவை திறந்துகொண்டு உள்ளே போனான்.
அவனின் அரவத்தில் கண்ணைத்திறந்து பார்த்தவளின் எண்ணவோட்டம் என்ன என்பதை கொஞ்சம் அவனால் கணிக்கவே முடிந்தது.
“நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்க போறதில்ல.இன்க்ளுடிங் செ*ஸ். அதனால அதையே நினைச்சிட்டு என்னை வில்லன் மாதிரி பார்க்காத”என்றவன்,
“பிரஷ் பண்ண ஹெல்ப் பண்ணவா?”என்றான்.
அவளின் அனுமதி இல்லாமலையே அவளின் பேஸ்ட் எடுத்து கொடுத்து உதவியவன்,அவள் முகம் அலம்பவும்,அவளின் இரு தோள்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு,”நடக்க முடியலைன்னா,என் மேல சாஞ்சுக்கலாம்.தப்பில்ல”என்றவன்,அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு மிகவும் மெதுவாய் அந்த குளியலறையிலிருந்து வெளியே வந்து,படுக்கையில் அவளை அமர வைத்தான்.
“டேப்லெட் வைச்சிருக்கியா?”
“ம்ம்.பேக்ல இருக்கு”எனவும் எங்கே என்று கேட்டு எடுத்தவன்,மாத்திரை லோ டோசெஜ் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,
“சாப்ட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்”மாத்திரையையும் கையோடு எடுத்துக்கொண்டே போனான்.
வேதாவிடம் எதுவும் சொல்லவில்லை.சரசம்மாவிடம்,”கஞ்சி வைச்சு கொடுங்க.எனக்கான டிபனையும் கொடுத்து விடுங்க”என்றவன் சுடுதண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தான்.
விழிமூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளிடம்,”கொஞ்சம் வெயிட் பண்ணு.கஞ்சி கொண்டு வர சொல்லியிருக்கேன்”என்றவனது அக்கறை அவன் மீதான பயத்தை கொஞ்சம் விலக்கியிருந்தது.
பயமா?மயூவிற்கா?-கேள்வியெல்லாம் வேண்டாம்.
கணவனாக அவன் உறவை ஏற்றுக்கொள்வதற்கு அவள் பயந்திருந்தாள்.அந்த பயம் தான் கொஞ்சம் விலகியிருந்தது.
“திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு?”விசாரணையை தொடங்க,
“ரெஸ்ட்லஸ்”என்றாள்.
“கூடவே ரெண்டு நாள் பட்டினியும்,பசியும் சேர்ந்துடுச்சு! சரியா?”
“ம்ம்”
“சாப்பாடு விஷயத்தில கூச்சப்படணும்னு அவசியமில்ல.நீ சாப்பிடறது உன் புருஷனோட காசு தான்.நல்ல இதை பதிய வைச்சுக்கோ!!”என்றவன்,
“என்னையும் தான்!!”என்றான்.
“சரி”
“எது?என்னையும் மனசில வைச்சுக்கறியா?”அவளுக்கு முடியாத நிலையிலையும் அவன் வம்பழக்க துவங்கியிருக்க,
“ம்ம்”சோர்வாக சொல்லவும்,அவளின் நிலை பாவமாக தெரிய அமைதியாகிவிட்டான்.
அறைக்குள் வெளியே அவனுக்கு வேண்டிய உணவு பதார்த்தங்களை வேலையாள் வைத்துவிட்டு போனதன் அடையாளமாய்,பெல் அடிக்க,கதவை திறந்து,ட்ரேயை தள்ளிக்கொண்டு வந்தான்.
“உனக்கு கஞ்சி”சூடாக இருந்ததில் ஸ்பூன் போட்டுக் கொடுக்க,கட்டிலை விட்டு எழுந்துகொள்ள முயற்சி செய்தாள்.
அவன் தடுக்கவில்லை.அவளுக்கு உதவியவன் சோபாவில் அமர வைத்து கஞ்சியை கொடுக்க,மிச்சமில்லாமல் ஸ்பூனில் அள்ளி உண்டுவிட்டாள்.ஏதோ தெம்பு வந்தது போலிருந்தது.
அவள் ஆசுவாசமாய் அமர,தனக்கு இட்லிகளை எடுத்து வைத்தவன்,”எனக்கு கரெக்ட் டைம்-க்கு எல்லா வேலையும் செய்தாகணும்.பசி,பட்டினில கிடக்கறதெல்லாம் என்னால முடியாது.சாப்பிட கொஞ்சம் லேட் ஆனாலும் தலைவலி வந்துடும்...அதுவும் இன்னும் சாப்பிடலையேன்னு நினைச்சு நினைச்சே தலைவலி வர வைச்சுக்குவேன்”எனவும் முதல்முறை அவளிடம் லேசாக புன்னகை துளிர்க்க,அதை ரசித்தவன்,
“வேலை செய்ய தெம்பு வேணும்!! அதனால நோ ரெஸ்ட்ரிக்ஷன்”என்றவன் அனாயாசமாய் பத்து இட்லியை காலி செய்துவிட்டிருக்க,அதுவே அவனுக்கு அரைவயிறு தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ட்ரேயை வெளியில் கொண்டு போய் வைத்துவிட்டு,
“இப்போ போடு”மாத்திரையை கொடுக்க,விழுங்கிக் கொண்டாள்.
“அம்மா இன்னைக்கு நம்ம கிராமத்து வீட்டுக்கு போறாங்க.அவங்களால ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது”
“ஏன்?”
அவளின் ஒரு வார்த்தை கேள்வி பதில் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் வலுக்கட்டாயமாய் எரிச்சலை கட்டுப்படுத்தினான்.
“பழங்கள் எக்ஸ்போர்ட் பிசினெஸ் செய்யறாங்க.தன்னோட பொழுது போக்கும் நாலு பேருக்கு உதவறதா இருக்கணும்னு இதில இறங்கிட்டாங்க”
“நானும் அவங்களோடவே போகட்டுமா?”
“யோசிச்சு சொல்றேன்.இப்போ நீ தூங்கு.நைட்டெல்லாம் என்னையவே பார்த்துட்டு ,என்னைப்பத்தியே யோசிச்சு தூக்கத்தை தொலைச்சிருக்க?”கிண்டலாய் சொன்னவன்,
அவள் முகத்தருகே சென்றவன்,”நமக்குள்ள நேத்து சம்திங் சம்திங் நடந்திருந்தா கூட நீ அசதியில தூங்கியிருப்ப!! இப்போ பார்,தேவையில்லாம அதையே யோசிச்சுட்டு,காய்ச்சல் வந்துடுச்சு!!! நேத்து ரிஸ்க் எடுத்திருக்கலாமோ”-அவள் கண்களை ஊடுருவி கேட்டுவிட்டு,அவளின் திகைத்த பாவனையை ரசித்தவன்,
“தூங்கு.நான் மூணு மணி நேரம் கழிச்சு தான் வருவேன்.ஸ்லீப் வெல்”சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.
Last edited by a moderator: