மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அப்போ ஒரு வழியா பூனைக்குட்டி வெளியிலே வரப் போகுதா?
வீட்டுக்குள் நடமாடும் அந்த உருவம் யாருன்னு உதிரனும் கண்டுபிடித்து விட்டானோ?
ஸோ உதிரனின் வீட்டில் சீதாவாக இருப்பவள் அவனுடைய அம்மா இல்லை
அப்போ அவள் யாரு?
அவளுடைய நிஜப் பெயர் என்ன?
வந்தவளுக்கு உதிரனின் அம்மா சீதாதேவியாக நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
என்ன காரணம்?
புதையல் ரகசியத்தை அறிந்து கொள்ளவா?
உதியின் அம்மாவாக நடிப்பவளும் அவள் மகனும் இதே வீட்டில் வேறொரு பகுதியில் இருக்கிறாங்களோ?
இல்லாவிட்டால் சினமிகாவுடன் பேசிக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருப்பவள் மகன் அபிஷேக்குடன் உடனுக்குடன் எப்படி பேச முடிந்தது?
அன்னிக்கு உதிரன் வெளியே தாழிட்ட அவன் ரூமை திறந்ததும் இந்த அபிஷேக்தானா?
வினயாவை வரச் சொல்லி அபிஷேக் சந்திப்பதும் இந்த வீட்டில் ராமசாமியின் அறைக்குள் இருந்த இன்னொரு அறையிலா?
உதிரனின் உண்மையான அம்மா எங்கே?
உதிரனின் அம்மா இருக்கிறாளா?
இல்லை இறந்து விட்டாளா?
சீதாவாக நடித்த அபிஷேக்கின் அம்மா, ராமசாமியின் மூதாதையர் முத்துசாமி, துரைசாமி, குமாரசாமி இவர்களில் யாருடைய வாரிசு?
இல்லை மகாலட்சுமி, வீரலட்சுமி இவர்களின் வாரிசா?
நிச்சயம் ராமசாமி, சக்தி, சிவக்குமார் இவர்களின் சகோதரி முறையில்தான் வந்திருப்பவள் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் அபிஷேக் வினயாவை அம்மாவாக்குவானா?
கிட்டத்தட்ட புதையலை நெருங்கியாச்சோன்னு தோணுது
"வரையினிலே........."
வரையினிலேன்னா என்ன அர்த்தம்?
மயில் கூட்டம் நிறைந்த இடத்தில் சந்தன மரத்தின் அருகிலுள்ள அருவி or சுனையிலுள்ள பாறையின் இடுக்கில் புதையலின் இன்னொரு துண்டு ரகசியம் இருக்கிறதா?
ஆனாலும் இப்படி ஓவர் சஸ்பென்ஸில் நிறுத்திட்டு நாலு நாள் கழித்துத்தான் வருவேன்னு உருண்டு பெறண்டு அடம் பிடித்து கூலாக சொல்லுறீங்க பாருங்க
அங்கே நிற்கிறீங்க நீங்க சவீதா டியர்
@saveethamurugesan