Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
ஒரு ஆண் எப்போ முழுமை அடைகிறான்னு கேட்டா கண்டிப்பா தந்தை ஆகிடும் தருணம் தான்...

முதல் குழந்தை பக்குவம் இல்லாத வயதில் எனக்கு திருமணம் ஆகிடுச்சு என் வாழ்க்கை அவளோட தான்னு காமிக்க எடுத்த முடிவு..

13வருடங்கள் மிகப் பெருசு தான்..
இரண்டு பேருமே இதுவே போதும் என்ற நிலைல இருந்த போது
ஒரு பிரச்சினை வந்து தான் வாழ்ந்த முறையை கேள்வி கேட்குது..

பக்குவமில்லா வயசுல எடுத்த முடிவுகள்ள காரணங்கள்ல நியாயம் பார்க்க முடியாது...

நாம் எடுக்கும் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு.............

நியாயமும் அநியாயமும் அடுத்தவரை பாதிக்காத வரை........... காரணம் வேண்டாம்........

பாதித்தால் நம் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு......... இங்கே பாதிக்கப்பட்டது மனைவி....... எப்படி முடிவெடுத்தால் என்ன......... பதில் சொல்லித்தான் ஆகணும்........

மனைவி அப்போவே அவனை கவர்ந்தாள்னு வருது......... அது கூட பரவாயில்லை........ ஆனால் அந்த செரினாக்கு காட்டுவதற்கு குழந்தை பெற்றுகொண்டேன்னு சொன்னால் என்ன நியாயம்.......

நம் வாழ்க்கை நாம் வாழ்வதற்க்கே........... அடுத்தவருக்கு காட்டுவதற்கல்ல........
 

fathima.ar

Well-Known Member
நாம் எடுக்கும் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு.............

நியாயமும் அநியாயமும் அடுத்தவரை பாதிக்காத வரை........... காரணம் வேண்டாம்........

பாதித்தால் நம் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு......... இங்கே பாதிக்கப்பட்டது மனைவி....... எப்படி முடிவெடுத்தால் என்ன......... பதில் சொல்லித்தான் ஆகணும்........

மனைவி அப்போவே அவனை கவர்ந்தாள்னு வருது......... அது கூட பரவாயில்லை........ ஆனால் அந்த செரினாக்கு காட்டுவதற்கு குழந்தை பெற்றுகொண்டேன்னு சொன்னால் என்ன நியாயம்.......

நம் வாழ்க்கை நாம் வாழ்வதற்க்கே........... அடுத்தவருக்கு காட்டுவதற்கல்ல........

இந்த மெச்சூயிரிட்டி எப்ப வரும்..
காலேஜ் முடிக்காத பையன்..
 

Sundaramuma

Well-Known Member
Epi பொறுத்தவரை excellent writing........

இத்தனை வருட வாழ்க்கைக்கு பின் கணவனின் அணைப்பு........ பேச்சு........ எல்லாமே துளசிக்கு சந்தோசம் தான்.......... துளசியின் இத்தனை வருட வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்காதது......... கிடைக்குமா என்று ஏங்க வைத்தது............. என்ன இருந்தாலும் வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறுமான்னு ஒரு பயமும் இருக்கு...........

ஆனால் திரு........ இன்று வரை 4 வாக்கியம் சேர்த்து பேசியதில்லை........
13 வருட வாழ்வென்றால் எத்தனையோ தேவைகள்...... எதிர்பார்ப்புகள்...... நிகழ்வுகள்..........
எதுக்குமே அவளை consider பண்ணியதில்லை........ அப்படிருக்கும் போது ஒரு அணைப்பும் ஆதூரமான பேச்சும் போதுமா அவளின் காயத்தை ஆற்றுவதற்கு.........

ஆனால் திரு......... நினைக்க நினைக்க ஆறவில்லை......... துளசிக்கு இது மட்டும் போதுமாமாம்...... துளசி பற்றி அவன் நினைப்பு தான் என்ன?????? அவனோட தரப்பை சொல்லுறான்............ பார்த்தால் முத்தமிட தோணுதுன்னு யாராவது மனைவியை பார்க்காமல் இருப்பார்களா????????? முட்டா பையன்........ செய்றதையும் செஞ்சுட்டு விளக்கம் வேற..........

ஆராய்ச்சி பார்வை வேறு....... என்னிடம் சொல்ல விருப்பமில்லையா??????? திரும்ப போய்விடுவாளா???????? தடுமாற்றம்........ ஒன்னும் முடியல.........
முகம் பார்த்து பேசாமல் எங்கோ பார்த்து பேசுபவனுக்கு இன்று பார்த்ததுமே அவளுள் இருந்த வித்யாசத்தை கண்டு கொண்டான்.......... ஞானக்கண் இருக்குதோ??????:p:p:p

கலங்கிய முகத்தை பார்த்ததும் மனதில் ஏதோ பிசைந்ததாம்........... கிஸ்ஸடிச்சே கரெக்ட் பண்ணிப்பான் போல..........

சொல்லப்போனா நீ மேஜர் கூட ஆகல.......... குழந்தை பிறந்துடுச்சி.......... எப்படியெல்லாம் சமாதானம்....... இவ்வளவு பண்ணிவிட்டு இப்படி பேச கொஞ்சம் கூட வெட்கமாயில்லை.........

இவன் மனைவிக்கு அடிமை...........
தாலி இல்லாட்டியும் பிணைப்பு..........
புதிதாய் காதல் வந்த கன்னி பையன் போல.........
இதெல்லாம் இத்தனை வருடத்தில் தெரியவில்லையா இந்த முட்டாளுக்கு...........
நாங்களும் ஏற்றுக்கொண்டிருப்போம் 1 வருடத்தில்......... இல்லை 2 வருடத்தில் செய்திருந்தால்..........

13 வருடம் இந்த வீட்டில் அவள் பட்ட பாடு ஒன்று கூடவா இந்த ஞானக்கண்ணுக்கு தெரியல......... இவன் பண்ணுறது போதாதுன்னு உறவுக்காரங்க வேறு..........

ஒரே தங்கச்சி........... இன்று வரை தண்ணீர் கூட வாங்கி குடிக்கமாட்டாள்............
டேய் முட்டாள் உனக்கு இது தெரியுமா??????

உன் தம்பியை பார்த்து கற்றுக்கொள்.......... அவளை உங்கம்மாவே உன் சித்திகளிடம் கழுவி கழுவி ஊற்றினார்கள்........ அழகும் கிடையாது......... குணமும் கிடையாது........ அவளையே அவனால் விடமுடியவில்லை..........
உன் மனைவி தான் உனக்கு சொத்து........ நீ business-ல் ஊரையே கட்டி மேய்த்தாலும் வீட்டில் உனக்கு சேவைகள் செய்து உன் வீட்டை குலையாமல் பார்த்துக்கொள்கிறாள்......... யார் எப்படி என்ன பேசினாலும் முகத்தை காட்டாமல் வரவேற்பு.......... யாருக்கு வரும் இந்த குணம்........
காசு பணம் எல்லாம் வரும்.......... போகும்...........
ஆனால் குணம்........... அது துளசியிடம் அதிகம்...........

இந்த வீட்டின் முதல் மருமகள்........... அந்த மரியாதை உரிமையை அவளுக்கு கொடு..........
அவளையும் மனுஷியா எல்லோரும் நடத்த வழி பண்ணு..........
உன் பெண் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறாள்......... அவள் வாழ்க்கையையும் கருக விட்டுடாதே.........

ஒழுங்கா உன்னோட மனதை திறந்து பேசு............ அவளே உனக்கு மருந்தாய் இருப்பாள்........
இப்படி படிச்சதும் நினைக்கிறதை எல்லாம் கொட்ட உங்களை போல ஆள் வேணும் ஜோ ....
இப்படி எழுத வரலை .....சூப்பர் :)
 

Joher

Well-Known Member
இந்த மெச்சூயிரிட்டி எப்ப வரும்..
காலேஜ் முடிக்காத பையன்..

21 வயசும்மா.....
எது செய்யலாம் செய்யக்கூடாதுன்னு கூடவா தெரியாது......

இது வீம்புக்கு புள்ளை பெத்த கதை.....
 

fathima.ar

Well-Known Member
மல்லி எப்பவுமே கதாபாத்திரங்களை தப்பா காட்ட மாட்டாங்க...
கண்டிப்பா ஏஜ் ஃபேக்டர் ஒரு காரணம்
பெரியவங்க முடிவு ஒரு காரணம்...

இதோடு விளைவு இவங்க லைஃப்ல வர பிரச்சனை அதை தீர்க்கும் விதம் அவ்வளவு தான்...
 

Sundaramuma

Well-Known Member
இந்த மெச்சூயிரிட்டி எப்ப வரும்..
காலேஜ் முடிக்காத பையன்..
நீங்க சொல்லறது சரி பாத்திமா..... மனமுதிச்சி இல்லாதபோ எடுத்த முடிவுகள் ஒரு 26 -27 வரை இருக்குமா .....அதுக்கு பிறகு இப்போ இதுவரை ?? ......
 

fathima.ar

Well-Known Member
நீங்க சொல்லறது சரி பாத்திமா..... மனமுதிச்சி இல்லாதபோ எடுத்த முடிவுகள் ஒரு 26 -27 வரை இருக்குமா .....அதுக்கு பிறகு இப்போ இதுவரை ?? ......

அவுங்கள தொல்லை செய்யாத வரை
அவங்களுக்கு நம்ம சொல்லாத வரை நம்ம எதிர்பார்ப்பு புரியாது உமா..

தட்டுனா தான் கதவு திறக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top