அருமையான பதிவு ரம்யா
.பவித்ரா,யாழினி அவளிடம் சொன்னதை தேவியிடம் சொன்னதற்கு என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா,அபாண்டமா பழி போடறதா பவித்ராவிடம் ரகளை பண்ணியிருக்கா
.
பவித்ரா வீட்டுக்கு வந்தா யாழினி சொன்ன பொய் தெரிந்து விடும் என ,யாழினி வீட்டை விட்டு போக பவித்ரா தான் காரணம் அவ இருக்கும் இருக்கற வீட்டில் இருக்க மாட்டேன்னு சொல்லி, அவள வீட்டுக்கு வர விடாம செஞ்சிருக்காளே ராட்சஷி
.
தேவி தன் மேல் எந்த தவறும் இல்லாததை போலவே நடந்துக்கறதும்,இப்ப நாம விட்டுக் கொடுத்து போனா,உன்னை மதிக்கவே மாட்டாங்க,ஒரு குடும்பம் சேர்ந்திருக்க நாம் மட்டும் நினைத்தால் போதாது,எல்லோரும் நினைக்கனும் என பிரபா சரியாக சொன்னான்
.
தனியா போறோம்னு சொன்னா கால்ல வந்து விழுவாங்களா
.ஆனாலும் தேவிக்கு இத்தனை திமிர் இருக்க கூடாது
.தனியா போறதா சொல்லவும் தடுக்காம,கிளம்புங்க காத்து வரட்டும்னு சொல்லிட்டாங்களா
.சிதம்பரம் முடிந்தவரை வியாபாரம் செய்யட்டும்,முடியாத போது பணமாகவோ,சொத்தாகவோ பங்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது மிகவும் சரி
.
யாழினி வீட்டை விட்டு சென்றதற்கும்,வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தன் மனைவியும் ஒரு காரணம் என நினைத்து விலகி இருப்பதும்,உண்மை தெரிந்து வருந்துபவன் தன் மனைவியை மதிக்காதவர்களோடு இருக்க முடியாது என பிரபா முடிவெடுப்பது அருமை
.
பிரபாகர்,பவித்ராவை காலேஜில் சேர்த்து படிக்க வைப்பதும்,பிரபா தொழிலில் மேலும் முன்னேற...
பிரபாகருக்கு காரியம் யாவிலும் கை கொடுக்கும் உற்ற துணையாய் பவித்ரா இருப்பது மகிழ்ச்சி....
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான முடிவு
.
பழைய கதைகளை படிக்காதவர்களுக்காக ரீ ரன் கொடுத்ததற்க்கு நன்றி ரம்யா ராஜன்
.