திலோத்தமா அங்கேயே சாப்பிட்டு வந்தேன் என்றதும், “அவரை சமைக்க வச்சு ,இப்படி சாப்பிட்டு வந்திருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா?” என வைதேகி கேட்டார்.
“ஏன் மா என்னை திட்றீங்க?”
“அன்னைக்கே உன் மாமியார் திரும்ப திரும்ப என்கிட்டே சொன்ன விஷயம், மகன் சரியான உணவு இல்லாமல் கஷ்ட்டப்படுறாருன்னு தான் சொன்னாங்க. அதுக்குத்தான் வீட்ல இருக்க பெண்ணா பார்கிறேன்னு வேற சொன்னாங்க.”
“நீ இன்னும் சமைக்க வரலைன்னு சொல்லிட்டு இரு. என்னைத்தான் கேவலமா பார்ப்பாங்க.” என்றார்.
மறுநாள் காலையே கையில் நோட்டுடன் சமையல் அறைக்கு வந்த மகளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். அவள் போடும் கணக்கை போல... வரிசையாக இதற்கு அப்புறம் இதை போட வேண்டும் என எழுதி வைத்து சமைத்தாள்.
ஒவ்வொரு வேளையும் நோட்டில் எழுதி வைத்து தான் சமைத்தாள். எதோ இதாவது செய்கிறாளே என வைதேகி நினைத்துக் கொண்டார்.
*******************************************************************************************************************
இங்கும் அங்கும் தேடி அலைந்த திலோத்தமாவின் பெரிய விழிகள், அரவிந்தனைப் பார்த்ததும், அலைபாய்வதை நிறுத்த, இவன் சென்று எதிரில் அமராமல், அவள் பக்கத்தில் அமர... அவள் விழிகளில் பதட்டம். அவளின் நிலை உணர்ந்த அரவிந்தன், வாய்க்குள் சிரிப்பை அடக்கினான்.
இருவரும் வேகமாக உண்டு முடித்துக் கிளம்பி விட்டனர். செல்லும் வழியில் அரவிந்தன் காரை ஓட்டியபடி, காரில் இருந்து ஒரு உரையை எடுத்துக் கொடுத்தான்.
“என்ன இது?”
“நீ கொடுத்த இல்ல மெடிக்கல் சர்டிபிகேட், அப்ப நானும் கொடுக்கிறது தானே முறை. நானும் கல்யாணம் பண்ண தகுதியானவன் தான்னு மெடிக்கல் சர்டிபிகேட்.” என்றான்.
“நான் இந்த பேப்பர் எல்லாம் நம்பமாட்டேன். நீங்க ப்ரூப் பண்ணுங்க. அப்பத்தான் நம்புவேன்.” என திலோத்தமா அந்த உரையை கையில் வைத்து விசிறியபடி, அவனை ஒயிலாகப் பார்த்து புருவத்தை உயர்த்த,
அவள் சொன்னதை கேட்டு அரவிந்தனுக்கு அப்படி ஒரு சிரிப்பு “கல்யாணத்துக்கு அப்புறம் ப்ரூப் பண்ணா போதுங்களா அம்மணி?” என அவன் கேட்க, திலோத்தமாவுக்கு ஒரே வெட்கமாக போய் விட்டது.
*******************************************************************************************************************
இவர்கள் இங்கு இருந்த நேரத்தில் அர்ச்சனா பாவனாவிடம், “ நீ எங்களோட வா... நாளைக்கு நாம வெளிய போகலாம்.” என அவளுக்கு ஆசைக் காட்டிக் கொண்டு இருந்தாள். புதுமணத் தம்பதிகள் தனியாக இருக்கட்டும் என்று நினைத்தே அப்படி சொன்னாள். அதை வித்யா பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பிறகு அவளது அறைக்கு சென்ற பாவனாவிடம் வந்தவள், “இங்கப் பாரு, அத்தை சொல்றது கேளு. உங்க அப்பா உனக்கு வேணும்ன்னு நினைச்சா, நீ அவரோடையே இரு. இல்ல புதுசா வந்திருக்காங்க இல்ல... அந்த மம்மி அவங்களோட உங்க அப்பா சேர்ந்திட்டு, உன்னை தனியா விட்டுடுவார். அப்புறம் நீ எப்பவும் உங்க மாமா வீட்லதான் இருக்கணும்.” என்றாள்.
ஏற்கனவே அவளை விட்டுவிட்டு இருவரும் கடைக்கு சென்ற கோபம் பாவனாவுக்கு இருந்தது. இப்போது வித்யா வேறு ஏத்தி விட.... அவள் அதை நன்றாகவே பிடித்துக் கொண்டாள்.
“ஏன் மா என்னை திட்றீங்க?”
“அன்னைக்கே உன் மாமியார் திரும்ப திரும்ப என்கிட்டே சொன்ன விஷயம், மகன் சரியான உணவு இல்லாமல் கஷ்ட்டப்படுறாருன்னு தான் சொன்னாங்க. அதுக்குத்தான் வீட்ல இருக்க பெண்ணா பார்கிறேன்னு வேற சொன்னாங்க.”
“நீ இன்னும் சமைக்க வரலைன்னு சொல்லிட்டு இரு. என்னைத்தான் கேவலமா பார்ப்பாங்க.” என்றார்.
மறுநாள் காலையே கையில் நோட்டுடன் சமையல் அறைக்கு வந்த மகளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். அவள் போடும் கணக்கை போல... வரிசையாக இதற்கு அப்புறம் இதை போட வேண்டும் என எழுதி வைத்து சமைத்தாள்.
ஒவ்வொரு வேளையும் நோட்டில் எழுதி வைத்து தான் சமைத்தாள். எதோ இதாவது செய்கிறாளே என வைதேகி நினைத்துக் கொண்டார்.
*******************************************************************************************************************
இங்கும் அங்கும் தேடி அலைந்த திலோத்தமாவின் பெரிய விழிகள், அரவிந்தனைப் பார்த்ததும், அலைபாய்வதை நிறுத்த, இவன் சென்று எதிரில் அமராமல், அவள் பக்கத்தில் அமர... அவள் விழிகளில் பதட்டம். அவளின் நிலை உணர்ந்த அரவிந்தன், வாய்க்குள் சிரிப்பை அடக்கினான்.
இருவரும் வேகமாக உண்டு முடித்துக் கிளம்பி விட்டனர். செல்லும் வழியில் அரவிந்தன் காரை ஓட்டியபடி, காரில் இருந்து ஒரு உரையை எடுத்துக் கொடுத்தான்.
“என்ன இது?”
“நீ கொடுத்த இல்ல மெடிக்கல் சர்டிபிகேட், அப்ப நானும் கொடுக்கிறது தானே முறை. நானும் கல்யாணம் பண்ண தகுதியானவன் தான்னு மெடிக்கல் சர்டிபிகேட்.” என்றான்.
“நான் இந்த பேப்பர் எல்லாம் நம்பமாட்டேன். நீங்க ப்ரூப் பண்ணுங்க. அப்பத்தான் நம்புவேன்.” என திலோத்தமா அந்த உரையை கையில் வைத்து விசிறியபடி, அவனை ஒயிலாகப் பார்த்து புருவத்தை உயர்த்த,
அவள் சொன்னதை கேட்டு அரவிந்தனுக்கு அப்படி ஒரு சிரிப்பு “கல்யாணத்துக்கு அப்புறம் ப்ரூப் பண்ணா போதுங்களா அம்மணி?” என அவன் கேட்க, திலோத்தமாவுக்கு ஒரே வெட்கமாக போய் விட்டது.
*******************************************************************************************************************
இவர்கள் இங்கு இருந்த நேரத்தில் அர்ச்சனா பாவனாவிடம், “ நீ எங்களோட வா... நாளைக்கு நாம வெளிய போகலாம்.” என அவளுக்கு ஆசைக் காட்டிக் கொண்டு இருந்தாள். புதுமணத் தம்பதிகள் தனியாக இருக்கட்டும் என்று நினைத்தே அப்படி சொன்னாள். அதை வித்யா பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பிறகு அவளது அறைக்கு சென்ற பாவனாவிடம் வந்தவள், “இங்கப் பாரு, அத்தை சொல்றது கேளு. உங்க அப்பா உனக்கு வேணும்ன்னு நினைச்சா, நீ அவரோடையே இரு. இல்ல புதுசா வந்திருக்காங்க இல்ல... அந்த மம்மி அவங்களோட உங்க அப்பா சேர்ந்திட்டு, உன்னை தனியா விட்டுடுவார். அப்புறம் நீ எப்பவும் உங்க மாமா வீட்லதான் இருக்கணும்.” என்றாள்.
ஏற்கனவே அவளை விட்டுவிட்டு இருவரும் கடைக்கு சென்ற கோபம் பாவனாவுக்கு இருந்தது. இப்போது வித்யா வேறு ஏத்தி விட.... அவள் அதை நன்றாகவே பிடித்துக் கொண்டாள்.