P7 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
அரவிந்தனின் தங்கை வித்யா, தன் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு விடுமுறைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தாள். அதற்காகத்தான் காமாட்சியும் முன்பே இங்கு வந்திருந்தார்.

வித்யாவை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். பெரிய குடும்பம் அவளுடையது. அதனால் அடிக்கடி வரமாட்டாள். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ வருவாள்.

எப்போதோ ஒருமுறை வீட்டிற்கு வரும் தங்கை என்பதால்... அவள் வந்தாள், அரவிந்தன் அவளை நன்றாகவே கவனித்து அனுப்புவான்.

தங்கையின் பிள்ளைகள் வந்திருப்பதால்.... அரவிந்தன் அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தான். அர்ச்சனாவும் அன்று மாலை புவனை அழைத்துக் கொண்டு வித்யாவை பார்க்க வந்திருந்தாள்.

********************************************************************************************************************

காமாட்சி வித்யாவிடம், திலோத்தமா பற்றி சொன்னவர், அரவிந்தன் அவளை மறுத்ததிற்கான காரணத்தையும் சொன்னார். திலோத்தமா அர்ச்சனா பார்த்த பெண் என்ற ஒரு காரணமே, வித்யா திலோத்தமாவை வெறுக்க போதுமானதாக இருந்தது.

“பெண்ணுக்கு முப்பது வயசு சொல்றீங்க. முத்தி போன மூஞ்சா இருக்கப் போகுது. அதுவும் இவ்வளவு வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணா குழந்தை இருக்குமோ என்னவோ? ஏன் இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணலை? எதாவது கசமுசா இருக்கப் போகுது. இவ்வளவு படிச்சிருக்கான்னு வேற சொல்றீங்க, கண்டிப்பா யாரையும் மதிக்க மாட்டா.” என்றாள்.
***********************************************************************************************************************

ஏற்கனவே அரவிந்தன் விஷயத்தில் அர்ச்சனாவுக்கு மிகுந்த குற்ற உணர்வு, இப்போது வித்யா வேறு சொல்லிக் காட்டியதும், மிகவும் காயப்பட்டு போனாள்.

இருவரும் வெளியே வந்திருந்தனர். எதோ சொல்வதற்கு வாய் திறந்த அர்ச்சனா, அங்கே திலோத்தமா நிற்பதை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டாள்.

அரவிந்தனுக்கும் அவளைப் பார்த்தது அதிர்ச்சிதான்.
என்னென்ன கேட்டு வைத்தாளோ தெரியவில்லையே என நினைத்தான். திலோத்தமா அவனைப் பார்த்த பார்வையில் அனல் அடித்தது. அதிலேயே தெரிந்தது, எல்லாவற்றையும் கேட்டு விட்டாள் என்று.


*****************************************************************************************************

உணவு உண்டு முடித்ததும், “வா டா நாம கடைக்கு போய்ட்டு வரலாம்.” என ரகுவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்ற வைதேகி, அவனிடம் திலோத்தமாவுக்கு இப்போது வந்திருக்கும் வரன். ஆனால் திலோவுக்கு அரவிந்தன் மேல் விருப்பம் இருப்பது. அரவிந்தன் யார் என எல்லா விவரமும் சொன்னார்.

“நீயே உன் தங்கைகிட்ட கேட்டு சொல்லு. எனக்கு அவ அரவிந்தனைக் கல்யாணம் பண்ணிகிறது பத்தி ஒன்னும் இல்லை. ஆனா இழுத்திட்டே இல்லாம பண்ணிக்கணும். இல்லை நான் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க சொல்லு.”

************************************************************************************************************************

“என்ன திலோ உடம்பு சரி இல்லையா...” என பதட்டத்துடன் கேட்டவன், வேகமாக பார்வையை அந்தக் காகிதத்தில் ஓட்டினான். அது என்ன என்று புரிந்த நொடி, அவளை பார்த்து முறைக்க ஆரம்பித்தான். திலோத்தமாவும் பயப்படாமல் அவனை எதிர்க்கொண்டாள்.

அரவிந்தன் திலோவிடம் இருந்து நிச்சயமாக இதை எதிர்ப்பார்க்கவில்லை.
 

Joher

Well-Known Member
Tks ரம்யா......

Paper ல என்ன இருக்கும்?????
Mrs திலோத்தமா அரவிந்தன்......
இது தான் அரவிந்த்க்கு தெரியுமே......

Resignation......
But ரம்யா bun தான் கொடுப்பாங்க......

டாக்டர் அடுத்தவங்க சொல்றதை வச்சி எடை போடாதீங்க......
உங்கள் நல்வாழ்வுக்கு guarantee திலோ.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கொலஸ்ட்ரால் ஓவராகி மாலினி
ஓடிப்போனால் அர்ச்சனா என்ன
பண்ணுவாள்?
அர்ச்சனா பாவம்
நண்பன் அரவிந்தனுக்கு நல்லதுதான்
நினைத்தாள்
கட்டினவள் ஓடிப்போவாள்-னு
அர்ச்சனா ஜோசியமா கண்டாள்?
நல்லதுக்கே நாட்டிலே
காலமில்லைப்பா ரம்யா டியர்
வித்யா பேசுவது சரியில்லை

திலோத்தமா சூசைட் பண்ணிக்கப்
பார்த்தாளா?
திலோ, அவ்வளவு மன உறுதி
இல்லாதவளா?
அந்த பேப்பரில் என்ன இருந்தது?
or என்ன எழுதியிருந்தது?
ரகு யாரு?
திலோவின் ஒன்றுவிட்ட சகோதரனா?

ஏன்மா வித்யா?
மூஞ்சி முத்திப்போறதுக்கு அது
என்ன கத்திரிக்காயா?
இல்லை, வெண்டைக்காயா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top