எனக்கு இதெல்லாம் பத்தாது டா என மனதிற்குள் நினைத்தவள்,
“இது தேறாத கேஸ்.... நாமதான் எதாவது பண்ணனும் போல...” என நினைத்தவள், அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட, வெற்றியிடம் இருந்து முழு ஒத்துழைப்பு என்பது இல்லவேயில்லை.
“இப்ப என்னங்க உங்களுக்கு?”
“இல்லை எதுக்கும் அந்த வீடியோவை பார்த்த பிறகு...”
“அதுல ஒன்னும் இருக்காது எனக்கு தெரியும். நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டீங்க. என் மூடை மாத்தி எரிச்சலை கிளப்பாதீங்க சொல்லிட்டேன். எத்தனை நாள் டா என்னை காத்திருக்க வைப்ப.” என ஆதிரை எரிச்சலில் கத்த தொடங்க... அவள் வாயை அடக்குவதைத் தவிர இப்போது வெற்றிக்கு வேறுவழியில்லை.
தன்னைப் பார்த்து படுத்திருந்தவளை, ஒரே தள்ளில் கட்டிலில் தள்ளியவன், அவள் மேல் சரிந்து அவள் இதழ்களை சிறை செய்தான்.
******************************************************************************************************************
மகள் விழித்து விடுவாள் என்று ஆதிரை அலாரத்தை சத்தம் குறைவாகத்தான் வைத்திருப்பாள். அவள் வழக்கமாக எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிடும் என்பதால்... சில நேரம் அலாரம் அடிப்பதற்குள் எழுந்து அவளே அனைத்தும் வைத்து விடுவாள்.
இன்றும் அது போல முன்பே எழுந்தவள், மஞ்சச்சில் இருந்து என்று சொல்வதை விட, கணவனின் நெஞ்சத்திலிருந்து எழுந்துகொள்ள மனம் இல்லாமல், அவன் மீது படுத்து கிடக்க, ஜோதி வந்து கதவை தட்ட ஆரம்பித்து விட்டார்.
அவர் எப்போதுமே இப்படித்தான். ஆதிரை எழுந்துகொள்ள ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும், உடனே வந்து அவர்கள் அறைக் கதவை தட்டி விடுவார். சில நேரம் ஞாயிற்றுக் கிழமை கூட உறங்க விடாமல் எழுப்பி விடுவார். பிறகே, "ஓ ஞாயிற்றுக்கிழமையா மறந்திட்டேன்." என்பார்.
கணவனும் மகளும் எழுந்துகொள்வார்கள் என்ற பதட்டத்தில், ஆதிரை வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள். ஆனால் அதற்குள் அஷ்வினி எழுந்து கொண்டாள். ஆதிரைக்கு கோபமாக வந்தது.
“உங்களை நான் எழுப்பி விட சொன்னேனா?” என ஜோதியிடம் கடுப்பாக கேட்டாள்.
********************************************************************************************************************
நண்பன் நேற்று மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு என்ன பாடு படுகிறானோ என நினைத்த விக்ரம், காலையிலேயே எழுந்து கிளம்பி விழுந்தடித்து இங்கே வந்து நின்றான். கதவை திறந்து விட்ட ஆதிரை, அவனை உட்கார சொல்லிவிட்டு புடவை மாற்ற அறைக்குள் சென்று விட... குளித்து ஜம்மென்று வந்தமர்ந்த வெற்றியை விக்ரம் அதிசயமாக பார்த்தான். முகத்தில் கூட தனி பொலிவு.
“என்ன டா இப்படி பார்க்கிற?”
“இல்லை கோவை சரளாகிட்ட அடிவாங்கின வடிவேலு மாதிரி இருப்பேன்னு பார்த்தா, புது மாப்பிள்ளை மாதிரி இருக்க... என்ன இன்னும் ஆதிரைகிட்ட சொல்லலையா?”
“அவளுக்கு எல்லாம் தெரியும். நேத்து அந்த யாஷிகா போன் பண்ணா டா... நான் அவளையே பேச சொல்லிட்டேன்.”
“அப்புறம் எப்படி டா இப்படி இருக்கா?” விக்ரம் நம்பாமல் கேட்க,
“அவ என்னை நம்பறா டா... நான் எதுவும் தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு சொன்னா.” வெற்றி பெருமையாக சொல்ல,
“டேய் ! இதெல்லாம் நியாயமே இல்லை. அன்னைக்கு நான் மட்டும் அந்த ஆனந்தியோட கூட்டு சேர்ந்தது போல... என்னை அந்த வெளு வெளுத்தா... உன்னை மட்டும் ஒன்னும் சொல்லலையா?”
“ஏன் டா இந்தக் கொலைவெறி உனக்கு. அவளே பாவம் பார்த்து விட்டாலும், நீ விட மாட்ட போலிருக்கே.”
*****************************************************************************************************************
என்னை அவன் தவறாக நோக்கத்துடன் அணுகினான் என்று சொன்னால்... அதை மற்றவர்கள் நம்பத்தான் செய்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கிறது. சோசியல் மீடியாவில் வரும் அனைத்தும் உண்மையா பொய்யா என தெரியாமலே அதை மற்றவர்களுக்கு கர்ம சிரத்தையாக அனுப்பி விடுகின்றனர். அதனால் பாதிக்கபடுபவர்கள் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை.
“என்னை பிடிச்சவன், இதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு சொல்வான். ஆனா என்னைப் பிடிக்காதவன், இந்த ஆளு செஞ்சிருப்பான்னு தான் சொல்வான். அதோட அதை இன்னும் நாலு பேருக்கு அனுப்புவான்.”
“வெற்றின்னா ஒரு மரியாதையோட பார்ப்பாங்க. அதெல்லாம் இனி இருக்காது. எனக்கு என்னைப் பத்தி கூட கவலை இல்லை. ஆதிரையை நினைச்சாதான் கவலையா இருக்கு.”
“இது தேறாத கேஸ்.... நாமதான் எதாவது பண்ணனும் போல...” என நினைத்தவள், அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட, வெற்றியிடம் இருந்து முழு ஒத்துழைப்பு என்பது இல்லவேயில்லை.
“இப்ப என்னங்க உங்களுக்கு?”
“இல்லை எதுக்கும் அந்த வீடியோவை பார்த்த பிறகு...”
“அதுல ஒன்னும் இருக்காது எனக்கு தெரியும். நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டீங்க. என் மூடை மாத்தி எரிச்சலை கிளப்பாதீங்க சொல்லிட்டேன். எத்தனை நாள் டா என்னை காத்திருக்க வைப்ப.” என ஆதிரை எரிச்சலில் கத்த தொடங்க... அவள் வாயை அடக்குவதைத் தவிர இப்போது வெற்றிக்கு வேறுவழியில்லை.
தன்னைப் பார்த்து படுத்திருந்தவளை, ஒரே தள்ளில் கட்டிலில் தள்ளியவன், அவள் மேல் சரிந்து அவள் இதழ்களை சிறை செய்தான்.
******************************************************************************************************************
மகள் விழித்து விடுவாள் என்று ஆதிரை அலாரத்தை சத்தம் குறைவாகத்தான் வைத்திருப்பாள். அவள் வழக்கமாக எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிடும் என்பதால்... சில நேரம் அலாரம் அடிப்பதற்குள் எழுந்து அவளே அனைத்தும் வைத்து விடுவாள்.
இன்றும் அது போல முன்பே எழுந்தவள், மஞ்சச்சில் இருந்து என்று சொல்வதை விட, கணவனின் நெஞ்சத்திலிருந்து எழுந்துகொள்ள மனம் இல்லாமல், அவன் மீது படுத்து கிடக்க, ஜோதி வந்து கதவை தட்ட ஆரம்பித்து விட்டார்.
அவர் எப்போதுமே இப்படித்தான். ஆதிரை எழுந்துகொள்ள ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும், உடனே வந்து அவர்கள் அறைக் கதவை தட்டி விடுவார். சில நேரம் ஞாயிற்றுக் கிழமை கூட உறங்க விடாமல் எழுப்பி விடுவார். பிறகே, "ஓ ஞாயிற்றுக்கிழமையா மறந்திட்டேன்." என்பார்.
கணவனும் மகளும் எழுந்துகொள்வார்கள் என்ற பதட்டத்தில், ஆதிரை வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள். ஆனால் அதற்குள் அஷ்வினி எழுந்து கொண்டாள். ஆதிரைக்கு கோபமாக வந்தது.
“உங்களை நான் எழுப்பி விட சொன்னேனா?” என ஜோதியிடம் கடுப்பாக கேட்டாள்.
********************************************************************************************************************
நண்பன் நேற்று மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு என்ன பாடு படுகிறானோ என நினைத்த விக்ரம், காலையிலேயே எழுந்து கிளம்பி விழுந்தடித்து இங்கே வந்து நின்றான். கதவை திறந்து விட்ட ஆதிரை, அவனை உட்கார சொல்லிவிட்டு புடவை மாற்ற அறைக்குள் சென்று விட... குளித்து ஜம்மென்று வந்தமர்ந்த வெற்றியை விக்ரம் அதிசயமாக பார்த்தான். முகத்தில் கூட தனி பொலிவு.
“என்ன டா இப்படி பார்க்கிற?”
“இல்லை கோவை சரளாகிட்ட அடிவாங்கின வடிவேலு மாதிரி இருப்பேன்னு பார்த்தா, புது மாப்பிள்ளை மாதிரி இருக்க... என்ன இன்னும் ஆதிரைகிட்ட சொல்லலையா?”
“அவளுக்கு எல்லாம் தெரியும். நேத்து அந்த யாஷிகா போன் பண்ணா டா... நான் அவளையே பேச சொல்லிட்டேன்.”
“அப்புறம் எப்படி டா இப்படி இருக்கா?” விக்ரம் நம்பாமல் கேட்க,
“அவ என்னை நம்பறா டா... நான் எதுவும் தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு சொன்னா.” வெற்றி பெருமையாக சொல்ல,
“டேய் ! இதெல்லாம் நியாயமே இல்லை. அன்னைக்கு நான் மட்டும் அந்த ஆனந்தியோட கூட்டு சேர்ந்தது போல... என்னை அந்த வெளு வெளுத்தா... உன்னை மட்டும் ஒன்னும் சொல்லலையா?”
“ஏன் டா இந்தக் கொலைவெறி உனக்கு. அவளே பாவம் பார்த்து விட்டாலும், நீ விட மாட்ட போலிருக்கே.”
*****************************************************************************************************************
என்னை அவன் தவறாக நோக்கத்துடன் அணுகினான் என்று சொன்னால்... அதை மற்றவர்கள் நம்பத்தான் செய்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கிறது. சோசியல் மீடியாவில் வரும் அனைத்தும் உண்மையா பொய்யா என தெரியாமலே அதை மற்றவர்களுக்கு கர்ம சிரத்தையாக அனுப்பி விடுகின்றனர். அதனால் பாதிக்கபடுபவர்கள் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை.
“என்னை பிடிச்சவன், இதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு சொல்வான். ஆனா என்னைப் பிடிக்காதவன், இந்த ஆளு செஞ்சிருப்பான்னு தான் சொல்வான். அதோட அதை இன்னும் நாலு பேருக்கு அனுப்புவான்.”
“வெற்றின்னா ஒரு மரியாதையோட பார்ப்பாங்க. அதெல்லாம் இனி இருக்காது. எனக்கு என்னைப் பத்தி கூட கவலை இல்லை. ஆதிரையை நினைச்சாதான் கவலையா இருக்கு.”