arunavijayan
Well-Known Member
Hi mam
ஒரே ஊராயிருந்தும்
தந்தைமாருக்கு கட்டுப்பட்டு
ஒருவரை ஒருவர் அறியாமலே
திருமணத்தில் ஒன்றானோம்
மறுப்புடன் தொடங்கிய திருமணம்
முதிற்சியின்மையால் தொலைத்தோம்
தொலைத்தது வாழ்க்கையை மட்டுமா
நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய்
வளர்ந்த எங்கள் வம்சத்தின் வளர்ச்சியையும்
நாம் ஒருவரை ஒருவர் உணரும் முன்னே
வார்த்தைகளின் தடுமாற்றத்தால்
நிலையிழந்து பிரிவுக்கு வித்திட்டோம்
காலம் கடந்தது ஞானமும் வளர்ந்தது
என் பிள்ளை என்னை ஊருக்கு கட்டியிழுக்க
என் நினைவு முழுவதும் ஊராகவே இருந்தது
என் வேர் ஊரிலுக்க எனக்கென்ன இங்கு வேலைஎன்ற
ஞானமும் பிறந்தது
சுந்தரவதனமில்லாவிட்டாலும் இனிமேல் நீ என் சுந்தரிதான் என்று
என்மனமும் உன்னை உணரத்துடித்தது
தவறு முழுதுமே நானாகவே இருந்தேன்
ஆனாலும் நீயும் என்னை உணரணுமென்று ஏக்கம் கொண்டேன்
நானும் மண்வாசனை உள்ள ஆண்தான் இருந்தும்
மண்மணம் கொண்ட பெண்ணை எப்படி உணரமறந்தேன்
தனியொருத்தியாய் தன் சேயை அழகுற வளர்த்து
தன்வேர் இதுதான் என்று தன்மகனுக்கும் புகட்டி
தன்னை நிமிர்த்தி தன்வளத்தைப் பெருக்கி
தனக்கும் மற்றவர்களுக்கும்
தொழிலாய் இருந்த நீ ஒரு முதலாளி அறிவாயா
உன் மண்பற்றால் உன் தொழிலால் உன்நிமிர்வால்
அனைத்தையும் நேர்மையுடனும் தைரியத்துடனும்
கையாளும் பண்பால் உன்னை
இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனித்திருக்வேண்டுமோ
என எண்ண வைத்த பெண்ணே
கொஞ்சம் தடுமாற்றத்துடன் வந்த என்னை
என்தாலி உன்கழுத்தில் இருந்ததைப்பார்த்து
உன்பக்கம் முழுவதும் தடுமாறாமல் சாய வைத்தாய்
விருப்பமாய் சாய்ந்தே போனேன்
ஏளனங்களையும் அவமானத்தையும் வலியையும்
தனக்கு தானே பட்டைகளாகத்தீட்டி
வைரமாய் ஒளிரும் பெண்ணே
நீ வைரமங்கைதான் ஒத்துக்கொள்கின்றேன்
ஆனால் எனக்கு நீ
அந்த வைரத்தின் ஒளியுடன் பிரகாசிக்கும்
சுந்தரவதனமுடைய சுந்தரங்கள் நிறையப்பெற்ற
சுந்தரப்பெண் என் அழகு சுந்தரிதான்
நீயென்பது யாதெனில்
உனக்காக நானும் எனக்காக நீயும்
போலியில்லாமல் இப்பூமியினில்
ஊருடன் கூடி வாழ்ந்து
நாம் நாமாக இருப்பது.
நன்றி
Aravin22
பிற்குறிப்பு:-இதனை கண்ணனுக்கு சமர்ப்பிக்கின்றேன்,ஏனென்றால் என்னை மாதிரி கண்ணனை யாருமே திட்டியிருக்கமாட்டார்கள்,சுந்தரியை அழகாக புரிந்துகொண்டமைக்கு என்னுடைய சின்னப்பரிசு