Nee Enbathu Yaathenil 16

Advertisement

Adhirith

Well-Known Member
எங்கும் சக்தி எதிலும் சக்தி
நீங்களும் இறைவியின் வழியா
அழகு வரிகள்
அருமையான சொற்கள்

உங்களின் 'என் இறைவி'
என்னை காந்தம் போல் இழுத்தது...
அச்சொற்களை உபயோகித்து கொண்டேன்....
நன்றி பூவிழி.....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
A VERY SMALL DEDICATION FROM OUR (VIEWERS SIDE) TO MALLI MAM
THANK YOU FOR A NOVEL WHICH IS CLOSE TO OUR FEELINGS AND CULTURE


நீ என்பது யாதெனில்
அன்றிலிருந்து இன்று வரை
தந்தையின் வழி நடந்தேன்
தாரமாய் ஆனேன்
இந்த வழி உன் வழிஇல்லையோ
தனித்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
சிறு பொறி தீயகுமாம்
என் வாழ்வில் சிறு ஐயம் பொறியானது
அதுவே தீயானது வாழ்வின் எல்லையானது
விட்டு விலகிட சொன்னாய் வெறும் ஐந்து நாளில்
வாழ்வை தொலைத்தேனோ என இறுகினேன்
என்னுள் மறுகினேன் வெளியே இறுகினேன்
என் பட்டு குட்டி வந்தான் வாழ்வில்
அந்த நாட்களின் நினைவாக
இந்த நாட்களின் நிஜமாக
என் பூமி விட சொன்னாய்
உயிரை விட சொன்னாய்
விட்டேன் நான் வாழ்வை
உன்னுடனான வாழ்வை
உயிர் என் மண்
உணர்வு அதனுலுள்ள உயிர் (கள்)
உயிரையும் உணர்வையும் இன்று
தொலைத்தோர் உண்டு
உயிரற்ற பணியில்
அதன் வழியில்
வாழ்க்கையை செலுத்தி
வாழ்க்கையை தொலைத்தோருக்கு
என் வாழ்வு ஒரு மைல் கல்
தொலைத்தேன் நானும்
உறவையே தவிர
உயிரையோ உணர்வையோ அல்ல
வந்தாய் மீண்டும்
காடு மலை தாண்டி பறந்த நீ
மீண்டு வந்தாய்
என்னை மீட்க வந்தாயோ
வாழ்வில் மண்வளம் மட்டுமல்ல
பொன்வளம் மட்டுமல்ல
மகிழ் வளம் கொடுக்க வந்தாயோ

உன்னை மட்டுமல்ல
உறவுகளையும் கொடுத்தாய்
என்னை மட்டுமல்ல
இடத்தையும் வாழ்வின்
தடத்தையும் சீராக்கினாய்

நீ என்பது யாதெனில்
இன்று
நீ என்பது யாதெனில்
நான் அல்ல
நாம்
நாம் மட்டுமல்ல
நம் பூமி
நீ மீண்டும் வந்து
மீட்க வந்த பூமி
நீ கற்க வந்து
சிறக்க வைத்த மண்
நீ பார்க்க வந்த
இன்று பார்க்க வைத்த உயிர்கள்
இங்கே மண்ணுடன் கலந்த உயிர்கள்
இறுதியாய் நம் இளையதலைமுறைக்கு
சொல்லுவது யாதெனில்
பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே
மீண்டு வா இங்கே
நம்மை காக்க வா
நம் மண்ணை காக்க வா
பெருமை சேர்க்க வா
இங்கே வாழ்ந்து
பெருமை சேர்க்க வா

Wonderful meeruuuuu.....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..


Sema da...
 

Tharav

Well-Known Member
அருமையான கதை மல்லி.
மண் மணம் மறக்காத தலைவி..
தலைவனையும் ஈர்ததாளே...
தன்னையும் காத்து....
மண்ணையும் காத்து..
மரபை மீட்டவள்..
விலகிய கணவனை...
விலக்கி, நிமிர்ந்து ...
தேடி வர வைத்த..
பெண்மை..நேர்மை..
அழகான முடிவு....
மேலே படுக்கும் அபி...
Nice story with nice ending sundhari super sundhari than
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை மல்லி.
மண் மணம் மறக்காத தலைவி..
தலைவனையும் ஈர்ததாளே...
தன்னையும் காத்து....
மண்ணையும் காத்து..
மரபை மீட்டவள்..
விலகிய கணவனை...
விலக்கி, நிமிர்ந்து ...
தேடி வர வைத்த..
பெண்மை..நேர்மை..
அழகான முடிவு....
மேலே படுக்கும் அபி...

சூப்பர் பொன்னம்மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top