ஹாய் சக்தி,
காதல் செய்வது ஒரு குற்றமாயா?ஷ்யாம் பாவம் எவ்வளவு தான் தாங்குவான்.ஆனாலும் அவ்வளவு பிரச்சனையிலுயும் பயபுள்ள அந்த கெத்தை விட மாட்டேங்குதே.வேலை இல்லாமல்,வீட்டில் உள்ளவர்களும் பேசாமல் காதலியையும் தற்காலிகமாக என்றாலும் பிரிந்திருந்து அவன் படும் வேதனையை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பல்லவி சப்போர்ட் இல்லைனா ஷ்யாம் நிலைமை கஷ்டம் தான் ஒவ்வொரு நிகழ்விலும் அவன் கூட இருந்து சமாளித்திருக்கிறாள் அதே நேரத்தில் ஆறுதலாகவும் இருந்திருக்கிறாள்.கதை சீக்கிரம் முடிந்துவிட்டதேனு இருக்கு.