murugesanlaxmi
Well-Known Member
என்னா ஒரு வில்லதனம்
பஸ் கிளம்பிவிட்டது,ராமனுக்கு மழிச்சி தாங்க முடியால,ஜனகராஜ்போல் ஒடானும்,சத்தம் போடணுனும்என்று, “,என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா,”னு,குதிக்கனும்போல் இருத்தது,சந்தோசமாக வீடு வந்தான்.குளித்து விட்டு சமையல் அறை சென்றான்.அங்கு அடுப்பு அருகே ஒரு கடிதம் இருத்தது.எடுத்தான், பிரித்தான், படித்தான், மயங்கிவிழுந்தான். கடிதத்தில், ‘நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் போகிறேன். திரும்பிவர 1௦ நாள்கள் ஆகும்,எனவே நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம்,போனமுறை ஷோபா பின்புறம் நாலு பாட்டிலும்,சிகரெட்டு பாக்கெட்டும் ஏடுத்தேன்.வேலைக்காரிக்கு சம்பளம் தந்தச்சி, உங்க தாரளமனசைகாட்டவேண்டாம்,காலையில் பேப்பர் போட்டச்சனு பக்கதுவீட்டுலகேட்கவேணாம்,நமக்கு வேறா பேப்பர்காரங்க,சமையல்கட்டு பக்கம் போகவேணாம்,சிங்க்கை காவிகலருக்கு மாற்றினா சும்மா இருக்கமாட்டேன்.வாக்கிங் போகும் போது T.SHIRT போடவும்,ஜிப்பா வேணாம்.ஜிப்பா கலரும்,சுடிதார் கலரும் ஒரே மாதிரியாக இருக்கும்.அன்னைகி செல்வி சிரிச்சதே போதும்.food coupon, credit card என்னிடம் இருக்கு,பிரோவை உருட்டவேண்டாம்.ரெண்டு security card கும் 100 ரூ கொடுத்துள்ளேன்.நீங்க லேட்டா வந்தா கதவைத்திறக்கவேணாம்என்று .பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம் என்று கூறியுள்ளேன் வீணா,ஸீன் போடாம வெளியபோய் சாப்பிடவும்.உங்க உள்ளாடைகள் ப்ரோவில் வலது பக்கமும்,பசங்களோடது இடபக்கமும் இருக்கு மாற்றி போட்டு புலம்பதிங்க,தூங்கி எழுத்து பால்கனி பக்கம் போய் பல் விளக்கதீங்க,AM,PM பார்த்து செய்ங்க.என் தங்கச்சி பிறந்த நாள் முடிந்து விட்டது,வீனா நைட்டுல போன் பண்ணி வழியவேணாம்,என் தோழிங்க யாரும் ஊரில் இல்லை.உங்க உடம்பு நல்ல இருக்கு,அந்த லேடி டாக்டரை போய் பார்க்கவேணாம்.பத்து நாளைக்கு wifi cute,கம்ப்யூட்டரில் password மாற்றிவிட்டேன்.கடைசியாக ஒன்று நான் எப்போது வேணாலும் வருவேன்.புத்திசாலிதனாமாக நடப்பதகா நினைக்கவேணாம் என்று இருந்தது.{FACEBOOKல் பார்ந்த துணுக்கை வைத்து எழுதிய சிறு கதை}