ஷோபா... வாட் ஏ எமோஷனல் எப்பி டியர்... ஹேட்ஸ் ஆஃப்...
ஒவ்வொரு வரியிலும் அவர்களின் வலியை எங்களின் வலியாய் உணர வைத்த எழுத்துக்கு என் வந்தனம் தோழி...
அசோக் உணராத விசயத்தை அவனின் ஜீவன் மட்டுமே உணர்ந்ததோ.. அவளை மீண்டும் மீட்டு விட்டே நானும் வருவேன் என்ற சபதத்தோடு சென்றிருக்கிறதே அவனை விட்டு தற்காலிகமாய்....
சுதா எனும் இரு எழுத்து அவனின் மொத்த வாழ்விற்கும் தேவையான ஜீவநாடி என்பதை உணராதவர்கள் செய்ய போகும் செயலின் வீரியம் இதை விட மோசமான தாக்கத்தை மட்டுமே அவனுள் விதைக்க போவதை அவர்களுக்கு யார் உரைப்பார்....
தாய்மையின் தவிப்பு... காதலின் தவிப்பு... நட்பின் தவிப்பு... பாசத்தின் தவிப்பு.... அது அத்தனைக்கும் தீர்வும் மருந்தும் சுதா மட்டுமே.... உணராத பலருக்கும் உணர்த்த போவது காலமா.. இவர்களின் காதலா...