மிகவும் அருமையான பதிவு மிலா.அய்யோ அம்மா என்ன காப்பாத்துங்க ஹாஹா. வாசுகியின் உணர்வுகளை புரிந்து கொள்வான், ஒரு அடியோட நிப்பாட்டிட்டீயேன்னு இன்னொரு கன்னத்தை காட்டுவான் நெனச்சா,காப்பாத்துங்கன்னு கத்தறான்.
இந்த காலத்தில் தாய் இல்லாத குறை தெரியாமல் தாயாக தாங்கும் அண்ணன் கிடைப்பது வரம், நித்யாவை பார்த்துக் கொண்ட விதம் அருமை.வாசுகியையும் சற்றும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வான்.
சத்யாவை வளைகாப்பு முடிந்து அழைத்து வர நினைத்தவனை ரமேஷ் தானே பார்ப்பதாக சொல்வது மனைவியை பிரிந்திருக்க முடியாமல் சொல்கிறான் என நினைத்தால்,வாசனின் வீட்டை இருவரும் குறைவாக, இகழ்ச்சியாக பேசுவது மனிதர்கள் தானா என நினைக்க வைக்கிறது
வாசகன் தன்னை குழந்தைக்கா பார்த்துக் கொள்வதாக வாசுகி பேசவும்,வாசன் பதில் சொல்லுவது மனதை நெகிழ வைக்கிறது.