ப பா பூ இறுதி அத்தியாம்

Advertisement

ஹெலோ பிரண்ட்ஸ்.....

அப்பாடா....அப்படினு ஒரு பீல்! ஏனா நான் கதையை முடிச்சுட்டேன்!! ஜாலியோ ஜூம்கானா !!!

என்னவோ இந்தக் கதை முடிக்க நிறைய மாதங்கள் ஆகிடுச்சு.... எனக்கு நிறைவு வர வரைக்கும் நான் அவசரப்பட்டு முடிக்கணும்னு நினைக்கல. இதுவும் தாமதத்திற்கு ஒரு காரணம்...

எப்பவும் ரெண்டு அல்லது மூணு மாதத்துக்குள்ள முடிச்சிட்டு சரித்திர கதைக்குப் போய்டுவேன். அது எழுத எப்படியும் எனக்கு எட்டு டு பத்துப் மாதங்கள் ஆகிடும்.

இந்த முறை இன்னுமே நான் சரித்திர கதை ஆரம்பிக்கல...இனிமேல் தான்...எப்போனு தெரியல.

அதுனால அடுத்து உடனே குடும்ப நாவல் என்னால எழுத முடியாது. எப்போ முடியுமோ அப்போ நாம அடுத்தக் கதைல சந்திக்கலாம்!

இந்தக் கதைல நீங்க எனக்குக் கொடுத்த சப்போர்ட் ரொம்பப் பெரிசு. தனித்தனியா ரிப்ளை பண்ணிருக்கணும்...ஆனால் நிஜமாவே ரொம்ப டைட்டா போச்சுங்க...அதுனால் சில பதிவுகள்ல மட்டும் எல்லாருக்கும் எடுத்து ரிப்ளை பண்ணிருப்பேன்.

ஆனா உங்க எல்லோருடைய ID பெயரும் எனக்குத் தெரியும். இந்தப் ப பா பூ வைத்தே நீங்க எழுதுன எதுகை மோகனை எழுத்து நடைகள், கவிதை வரிகள் எல்லாமே என்ன WOW அப்படினு நினைக்க வச்சது.

இன்னும் சிலரோட ஆழமான கருத்துக்களைப் பார்க்கும் போது எனக்குச் சந்தோசமா இல்லைங்க; நிறைவா இருந்தது!

நிறைவு என்ற வார்த்தை சந்தோசம் என்ற வார்த்தையை விடச் சிறந்தது!

அந்த நிறைவான உணர்வை தான் உங்க எல்லோருடைய வார்த்தைகளும் எனக்குத் தந்தது!

இது எல்லாத்துக்கும் உங்களுக்கு நான் சொல்ல என்கிட்ட ஒண்ணே ஒன்னு தான் இருக்கு...'நன்றி'.

நாம மீண்டும் எழுத்தாலும் வாசிப்பாலும் இணைவோம்....

ராசிதா




ப பா பூ இறுதி அத்தியாம் 1



ப பா பூ இறுதி அத்தியாம் 2



:):):)
superb story mam...will miss bootham..
panimalar and parthiban nice pair..
correct punishment for priyan..
 

JRJR

Well-Known Member
பிரியணுக்கான பெரிய தண்டனை பயம் தான். மலர் அவனுக்கு பயத்தை காட்டியது சரி தான்.

அழகான, அமைதியான வார்த்தைகளை கொண்டு உருவான கதைக்கு வாழ்த்துக்கள்.
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு

தண்டனை தராமல் தண்டனைப்ரியனுக்கு

சிவகாமி அம்மா செஞ்சது
ரொம்ப நல்ல விஷயம்

தாமினி அம்மா மருமகள மகன
புரிந்து பார்த்திபனுக்கு
உரிய மரியாதை ஊரர்
முன்னாடி கொடுத்தது
அருமை

பூதம் கண்ட கனவு பழிச்சிறுச்ச
 

Helenjesu

Well-Known Member
பனிமலரின் அதிரடி செம.பெண்களின் பலவீனத்தை பிரியன் போன்ற மிருகங்கள் பயன்படுத்திக்க நினைத்தால் மலர் மாதிரி போராடித்தான் வெல்ல வேண்டும். அருமையான தொடர்.
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பனிமலர் மாதிரி தையறியாம சுயமா முடிவு எடுத்தாதன் இந்த மாதிரி மிருகங்களுக்கு தண்டனை கிடைக்கும்... பயந்து கிட்டே இருந்தா இந்த நாயிங்க இப்படி தான் ஆடுவாங்க... நீங்க எழுதுன கதையை படிக்குற ஒரு பெண்ணாவது தான் தப்பிக்க இந்த மாதிரி ஒரு யுக்தி பயன்படுத்தி தப்பிச்சாங்கன்னா அதுதான் இந்த கதைக்கு கிடைக்கும் மிக பெரிய வெற்றி... அந்த வெற்றி உங்களுக்கு கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
என்னை பொறுத்தவரை பணிமலரும் ஒரு சிங்க பெண் தான்....
கடைசியா ஒன்னு தளபதி சொன்னது...
"நம்ம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்க முன்னாடி நம்ம செம்மயா வாழ்ந்து காட்டறதுதான் அவங்களுக்கு நம்ம கொடுக்கிற மிக பெரிய தண்டனை "

ரொம்ப நன்றி சகோதரி!

உங்களோட கம்மெண்ட் இந்த கதையோட வெற்றி.... ரொம்ப ஆழமான கருத்தை பதிவு செஞ்சிருக்கீங்க.

உங்கள் தொடர் ஆதரவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top