உதயா
Well-Known Member
நாம கேள்வி கேட்க வேண்டியது அரசாங்கத்தை தான்... அரசுக்கு மருத்துவம் கல்விக்கு எல்லாம் வரிய கட்டிட்டு ஏன் தனியாருக்கு போகணும்... அரசாங்க மருத்துவ மனை சரியா இல்லன்னா மக்கள் தான் கேட்கணும்.... அவங்களை எல்லாம் கேட்காமல் சும்மா தனியார் மருத்துவ மனைகளை கேள்வி கேட்கிறது தப்பு தான்.அன்பு வேலை செய்றது இலவச மருத்துவமனைல தான.. அது சேவைக்கு தான இருக்கு அதை ஒழுங்கா செய்ங்கனு சொல்றதுக்கு என்ன தப்பு இருக்கு??? Reality la அப்படி ஒரு Hsptl இருந்தா IT and CSRல கூட கணக்கு காட்டி லாபம் பார்க்க முடியும் தான...!!
நம்மோட உரிமை எல்லாம் விட்டு கொடுத்துட்டு தனியார் கிட்ட ஏன் பிச்சை கேட்கணும். மத்த நோய்களுக்கு எப்படியோ ஆனால் பிரசவத்துக்கு ஹவர் மெண்ட் ஹாஸ்பிட்டல் எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கு ......
நம்ம பணத்துல இயங்குற அரசாங்கத்தை கேள்வி கேட்காமல் தனி மனிதன் தன்னோட சொந்த பணத்துல இயக்குற தனியார் கிட்ட கேள்வி கேட்கிறது முட்டாள் தனம்.... தனியார் கிட்ட இலவசம் கேட்கிறதே தப்பு அதுல நமக்கு மொத்த செலவும் அவங்களே செய்யணும் என்று எதிர் பார்க்குறது ரொம்ப தப்பு....
ஒருத்தன் அவனுக்கு விருப்பமான அளவு தான் தானம் தருவான்.... நமக்கு வேண்டிய அளவு எல்லாம் தர மாட்டான்... தனியார் மருத்துவ மனை இலவசம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் தருவாங்க....
அரசாங்கம் கூட நமக்கு எதையும் இலவசமாக தரல .. எல்லாத்துக்கும் நாம வரி கட்டுறோம்.... நாம அரசாங்கத்தை கேள்வி கேட்காத வரை அவனுங்க சொகுசா இருப்பாங்க..... நாம இப்படி தனியார் கிட்ட கை ஏந்தி நிற்க வேண்டிய தான் .