readers,
ஒரு வருடம் முன்னாடி இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். இன்னும் எழுதி முடிக்கலை. அதனாலே இந்தக் கதையோட பதிவுகள் எப்போ கொடுக்க முடியும்னு எனக்கே தெரியாது. இன்னைக்கு முதல் பதிவு. புதுமணம் என்றால் திருமணம். திருமணம் : திரு(ம்ப)மணம் தான் கதையோட தலைப்பு..marriage : remarriage..கதை எதைப் பற்றின்னு தலைப்பு தெளிவா தெரியப்படுத்துகிறது.
so lets go to the first episode of puthumanam : marumanam
Puthumanam : Marumanam 1
ஆரம்பமே ரொம்பவும் நல்லாயிருக்கு, க்ஷிப்ரா டியர்
மனைவியை இழந்த இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை சிவசங்கர்தான் ஹீரோவா?
என்னைப் போலவே தபால் மூலம் பி காம் படித்து என்னைப் போலவே ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பான் போலவே
நானும் 200 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டே போஸ்டல் மூலம் பி காம் படித்தேன்
இனியும் ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள சக்தியில்லைன்னு சிவா சொல்லுறான்
ஆனால் வளரும் பெண் குழந்தைகளுக்கு இனிதான் அவசியம் ஒரு தாய் கண்டிப்பாக வேணுமே
தீபா, சூர்யா இரண்டு குழந்தைகளும் ரொம்பவே சமத்து
குழந்தைகளின் மீது பாசமுள்ள அப்பா சிவசங்கர்
ஆனால் ஒரு சந்தேகம்
இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் சிவாவோடு அவன் பெற்றோர் இருக்காமல் தம்பியுடன் ஏன் இருக்கிறார்கள்?
இத்தனைக்கும் தம்பி மனைவி வீட்டில்தான் இருக்கிறாள்
சுப்ரமணியம் ஸர் அருமையான மனிதரா இருப்பார் போலவே
சிவசங்கர் கௌரி இருவருக்குமே ஒரு துணை தேவைன்னு தெரிஞ்சுதான் இரண்டு பேரையும் இணைக்கப் பார்க்கிறார்
இருந்த ஒரே ஆதரவு அம்மாவையும் இழந்த ஹீரோயின் கௌரி லக்ஷ்மி முப்பத்திரண்டு வயதில் இருபத்து ஐந்து வயசு தோற்றம்தான்
ஆனால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக சிவாவுக்கு எத்தனையோ கவலைகள் வேதனைகள் அதனால வயசு கூடித் தெரியுது
இதே காரணத்தினால்தான் அவனும் கௌரியை வேறு மாப்பிள்ளையை மணமுடின்னு சொல்லுறான்
"யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ......."